காட்டுமன்னார்கோவில்,:காட்டுமன்னார்கோவிலில் உள்ள மிக பெரிய ஏரி வீராணம் ஏரி. இந்த ஏரிக்கு வடவாறு மூலம் தண்ணீர் வருகிறது. ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. பாசனத்திற்கும் பயன்படுகிறது. இந்த ஏரி அரியலூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடிவதற்கு மிகப்பெரிய வடிகாலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் ஏரி நிரம்பி உபரி நீர் வெள்ளியங்கால் மதகு வழியாக வெளியேற்றப்படும். இதனால் பல்வேறு கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவர். படகு மூலம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக சமுதாய நலக்கூடங்கள், புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுவர்.
புதன், 31 அக்டோபர், 2012
புயல் சின்னம் எதிரொலி வீராணம் பகுதியில் பாதுகாப்பு தீவிரம்
இன்று காலை கொள்ளுமேடு அருகில் வீராணம் ஏரியில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
இஸ்லாம் எனக்கு மகிழ்ச்சியையும், அன்பையும் தந்தது: இஸ்லாத்தை தழுவிய முன்னாள் நடன மங்கை ஹீதர் மாத்யூஸ்!
லண்டன்:அரைக்குறை ஆடையுடன் இரவு விடுதிகளில் நடனமாடிய பிரிட்டனைச் சார்ந்த ஹீதர் மாத்யூஸ் என்ற 27 வயது பெண்மணி, இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட பின் அதன் மூலம் கிடைத்துவரும் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். இதுவரை கிடைக்காத மகிழ்ச்சியும், பாதுகாப்பும், அன்பும் முஸ்லிமாக மாறி பர்தா அணிந்து தலையை மறைக்க துவங்கியவுடன் கிடைப்பதாக பிரிஸ்டன் நகரைச் சார்ந்த மாத்யூஸ் கூறுகிறார். 2 பெண் குழந்தைகளுக்கு அன்னையான ஹீதர் மாத்யூஸ், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்லாத்தை தழுவியிருந்தார்.
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அவசியம் – மத்திய அமைச்சர் ரஹ்மான் கான்!
புதுடெல்லி:பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களை தழுவிய தலித்துகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று ரஹ்மான் கான் பி.டி.ஐ செய்தி ஏஜன்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் கூறியது: “இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒரே நிவாரணம் அல்ல. இருப்பினும் அது பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையாகும். 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு அரசு தரப்பின் சட்ட நடைமுறை வீழ்ச்சிகளை பிரதிபலிக்கிறது.
பொய்ப் பிரச்சாரங்களுக்கு எச்சரிக்கையாக அமைந்த பாப்புலர் ஃப்ரண்டின் சமநீதி மாநாடு!
கோழிக்கோடு:நவீன சமூக இயக்க சக்தியின் வளர்ச்சியை பொய்ப் பிரச்சாரங்களின் மணல் கோட்டையை கட்டி தடுக்க முடியாது என்ற பிரகடனத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமநீதி மாநாடு கோழிக்கோடு கடற்கரையில் புதிய வரலாற்றை எழுதியது.
வளர்ச்சி, சீர்திருத்தம், சுதந்திரம், நம்பிக்கை ஆகியவற்றை பிரதிபலிக்கும் மூவர்ண கொடியை ஏந்தியவாறு கேரளாவின் மலபார் பகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதூறு பிரச்சாரங்களுக்கு தங்களது எதிர்ப்புணர்வை பறைசாற்றினர்.
நாகை - நெல்லூர் இடையே ‘நிலம்’ புயல் இன்று கரையை கடக்கும்
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிலம்’ என்ற புயல் இன்று மதியம் கரையை கடக்கிறது. அப்போது 100 கிமீ வேகத்தில் காற்று வீசும். தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவ மழை கடந்த 20ம் தேதி முதல் பெய்யத் தொடங்கியது. அப்போது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி அது வலுப்பெற்று மேற்கு நோக்கி நகர்ந்து அரபிக் கடல் வழியாக சோமாலியாவுக்கு சென்றது. அப்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், கடந்த 26ம் தேதி வங்கக்கடலில் தென் கிழக்கு திசை யில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்தம் உருவானது. அது மெல்ல மெல்ல நகர்ந்து மேற்கு திசையில் பயணிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு அது மேலும் வலுப்பெற்று, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் தென் தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்தது.அதற்கு பிறகு அந்த காற்றழுத்த மண்டலம் நேற்று காலை சென்னைக்கு தென் கிழக்கே 450 கிமீ தெலைவில் நெருங்கி வந்தது. அதனால் நேற்று அதிகாலை முதலே சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட கடலோரப் பகுதியிலும் மழை பெய்யத் தொடங்கியது. நேற்று பகல் முழுவதும் மழை பெய்தபடியே இருந்தது. அதில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 150 மிமீ மழை பெய்துள்ளது.
செவ்வாய், 30 அக்டோபர், 2012
கடலூர் மாவட்டத்தில் பரவுகிறது வைரஸ் காய்ச்சல் அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளி வருகை அதிகரிப்பு
கடலூர், : கடலூர் மாவட்டத்தில் பரவு வரும் வைரஸ் காய்ச்சலால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் வருகை அதிகரித்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு சித்த மருத்துவத்தில் உருவாக்கப்படும் நிலவேம்பு குடி நீருக்கு (சூப்புக்கு) டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
/
மாறி வரும் சீதோஷ்ணம் மட்டுமின்றி கொசு, பன்றி, பறவைகளின் மூலமும் பல்வேறு நோய்கள் பரவி வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் சுகாதாரத்தின் மீதான நம்பிக்கை மேலோங்கி வருகிறது. ஆனாலும் நோய் தடுப்பு நடவடிக்கை என்பது கைநழுவிய காட்சியாகவே கடலூர் மாவட்டத்தில் உள்ளது. டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகள் மாவட்டத்தில் முதன்மையாக இல்லையென்றாலும் நோய்களுக்கான அறிகுறியாக உள்ள வைரஸ் காய்ச்சல் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் பிரதானமாக உருவெடுத்துள்ளது.
மாறி வரும் சீதோஷ்ணம் மட்டுமின்றி கொசு, பன்றி, பறவைகளின் மூலமும் பல்வேறு நோய்கள் பரவி வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் சுகாதாரத்தின் மீதான நம்பிக்கை மேலோங்கி வருகிறது. ஆனாலும் நோய் தடுப்பு நடவடிக்கை என்பது கைநழுவிய காட்சியாகவே கடலூர் மாவட்டத்தில் உள்ளது. டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகள் மாவட்டத்தில் முதன்மையாக இல்லையென்றாலும் நோய்களுக்கான அறிகுறியாக உள்ள வைரஸ் காய்ச்சல் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் பிரதானமாக உருவெடுத்துள்ளது.
இன்டர்நெட் பயன்படுத்துவது இந்தியாவில் 12.5 கோடி பேர்
புதுடெல்லி : உலக அளவில் இன்டர்நெட் சந்தை வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு சராசரியாக 12.5 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இன்டர்நெட் பயன்பாடு குறித்து தொழில் வர்த்தக அமைப்பான அசோசேம், காம்ஸ்கோர் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடத்தியது. இதன் முடிவு குறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திங்கள், 29 அக்டோபர், 2012
முஸ்லிம்களுக்காக புதிதாக ‘ஹஜ் ஹவுஸ்’
புதுடெல்லி: டெல்லி பிண்டாபூரில் நடந்த முஸ்லிம்களின் நிகழ்ச்சியில் முதல்வர் ஷீலா தீட்சித்தின் தனி செயலாளரும் செய்தி தொடர்பாளருமான முகேஷ் சர்மா கலந்து கொண்டார். அவர் பேசும்போது கூறியதாவது:டெல்லியில் முஸ்லிம்களின் வசதிக்காக துவாரகாவில் புதிதாக ‘ஹஜ் ஹவுஸ்’ என்ற புதிய கட்டி டம் கட்டப்படும். இந்த கட்டிடம் மும்பையில் இருக்கும் ஹஜ் ஹவுஸ் கட்டிடத்தை விட பெரிதாகவும் அதிக நவீன வசதிகளை கொண்டதாகவும் இருக்கும்.நகரில் இருக்கும் எல்லா மதரசாக்களிலும் கம்ப்யூட்டர் வசதி செய்து தரப்படும். அத்துடன் அதிகமாக உருது ஆசிரியர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போகால் பகுதியில் கட்டப்பட்டு வரும் நூர் மஸ்ஜித்க்காக 400 மீட்டர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மசூதி கட்டுமான பணிகளை கண்காணிக்கும் பொறுப்பு டெல்லி வக்ப் போர்டு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹட்சால் பகுதியில் ஒரு ‘கப்ரிஸ்டான்’ கட்டப்பட்டு வருகிறது. துவாரகா பகுதியில் 3.5 ஏக்கர் நிலத்தில் மேலும் ஒரு கப்ரிஸ்டான் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.பிண்டாபூரில் இருக்கும் பூங்காவிற்கு சுதந்திர போராட்ட வீரர் மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பெயர் சூட்டப் படும். அங்குள்ள இன்னொரு பூங்காவிற்கு ஜும்மா பூங்கா என்று பெயர் சூட்டப்படும்.இவ்வாறு முகேஷ் சர்மா கூறினார்.
வெள்ளி, 26 அக்டோபர், 2012
புதன், 24 அக்டோபர், 2012
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி துவக்கம்
காட்டுமன்னார்கோவில்: முதல்வர் உத்தரவையடுத்து வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி இன்று தொடங்கியது.
சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சென்னைக்கு தினமும் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கும் புதிய வீராணம் திட்டம், 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேட்டூரில் தண்ணீர் திறந்து விடும்போது அந்த தண்ணீர் வீராணம் ஏரியில் பெறப்பட்டு அந்த பகுதி பாசனத்துக்கு பயன்படுவதோடு சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.
சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சென்னைக்கு தினமும் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கும் புதிய வீராணம் திட்டம், 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேட்டூரில் தண்ணீர் திறந்து விடும்போது அந்த தண்ணீர் வீராணம் ஏரியில் பெறப்பட்டு அந்த பகுதி பாசனத்துக்கு பயன்படுவதோடு சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.
செவ்வாய், 23 அக்டோபர், 2012
விண்டோஸ் 8 புதிய சகாப்தம் தொடங்குகிறது
உலகின் 90 சதவிகித பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய திருப்புமுனை இயக்கமாக, விண்டோஸ் 8, வரும் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26ல், வெளிவர இருக்கிறது.
தற்போதைய விண்டோஸ் இயக்கத்தின் செயல்பாட்டினை முற்றிலுமாகப் புரட்டிப் போட இருக்கின்ற இந்த சிஸ்டத்தினைப் பயன்படுத்த, பல லட்சக்கணக்கில் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தொடர் மழை எதிரொலி கடலூர் மாவட்டத்தில் உள்ள 3,505 ஏரி, குளங்கள் நிரம்பியது
கடலூர். : தொடர் மழை எதிரொலியால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரத்து 505 ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், ஆயிரக்கணக்கான குடிசைகளும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால் மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை வெளுத்து கட்டி வருகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் 3 ஆயிரத்து 505 ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. கெடிலம், பெண்ணையாறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான செடிகொடிகள் அடித்து செல்லப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை வெளுத்து கட்டி வருகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் 3 ஆயிரத்து 505 ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. கெடிலம், பெண்ணையாறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான செடிகொடிகள் அடித்து செல்லப்பட்டன.
திங்கள், 22 அக்டோபர், 2012
நெய்வேலி- அனல் மின்நிலையம் முற்றுகை - 1500 பேர் கைது
காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கினை தரமறுக்கும் கர்நாடக அரசையும், வன்முறையைத் தூண்டும் கன்னட வெறியர்களையும் கண்டித்தும், காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான நீரை வழங்காத கர்நாடகத்திற்கு நெய்வேலி-யில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வ-லியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் தலைமையில் நெய்வே-லி அனல்மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் 22.10.2012 அன்று நடைபெற்றது.
வீராணம் ஏரி 40 அடியை தொட்டது
கொள்ளுமேடு,அக்-22
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.வெள்ளிக்கிழமை இரவு முதல் காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வானப் பகுதிகளில் நீர் சூழ்ந்தது.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.வெள்ளிக்கிழமை இரவு முதல் காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வானப் பகுதிகளில் நீர் சூழ்ந்தது.
இதனால் சிதம்பரம் நகரில் இந்திரா நகர், நேருநகர், மகாவீர்நகர், சாந்திநகர், ராஜாநகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நகர்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
நகரின் மையப் பகுதியில் உள்ள பாலமான் ஆற்றில் இருகரைகளைத் தொட்டு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை விவரம்: சிதம்பரம்- 60 மி.மீ., காட்டுமன்னார்கோவில்- 33.50 மி.மீ., லால்பேட்டை- 40 மி.மீ., புவனகிரி- 47 மி.மீ., சேத்தியாத்தோப்பு 36 மி.மீ., ஸ்ரீமுஷ்ணம்- 16 மி.மீ.
வீராணம் ஏரி 40 அடியை தொட்டது: கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஏரியான வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும்.
ஞாயிறு, 21 அக்டோபர், 2012
குர்பானியின் சட்டங்கள்
இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை.நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.
தொடர் மழை எதிரொலி: வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்வு…
சனி, 20 அக்டோபர், 2012
வெண்டைக்காயின் உடல்நல நன்மைகள்:-
வெண்டைக்காயில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.
வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதையை காபிப் பொடியாகப் பயன்படுத்துகிறார்க்ள.
கொழுப்பை கரைக்கும்
வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதையை காபிப் பொடியாகப் பயன்படுத்துகிறார்க்ள.
கொழுப்பை கரைக்கும்
மாம்பழத்தில் உள்ள உடல்நல நன்மைகள்:-
பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம்.
மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.
மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.
லால்பேட்டை நவீன (?)ஆடுவதை கூடம் இருக்கும் அவலநிலை
சமிபத்தில் லால்பேட்டை இணைய தலத்தில் வெளியான டெங்கு காய்ச்சல் பற்றிய சுகாதாரத்தை பற்றிய ஆரோகியமான கட்டுரை படித்தேன்
இந்த விஷயம் பற்றி பெரும்பாலும் வெளிநாட்டில் அல்லது வெளியூர் களில் வசிக்கும் லால்பேட்டை வாசிகள் தான் கவலை படுவதை நம்மால் உணரமுடிகின்றது,
சுற்று புற சுகாதாரத்தை அரசுக்கு இருக்கும் பொறுப்பை விட பொதுமக்களாகிய நமக்கு தான் அதிகம் பொறுப்பு இருகின்றது
இந்த விஷயம் பற்றி பெரும்பாலும் வெளிநாட்டில் அல்லது வெளியூர் களில் வசிக்கும் லால்பேட்டை வாசிகள் தான் கவலை படுவதை நம்மால் உணரமுடிகின்றது,
சுற்று புற சுகாதாரத்தை அரசுக்கு இருக்கும் பொறுப்பை விட பொதுமக்களாகிய நமக்கு தான் அதிகம் பொறுப்பு இருகின்றது
கொள்ளுமேடு தமுமுக கழக போராளி Z.F முஹம்மது ரிஃபாயி அவர்களின் திருமணம்
ஹாபிழ் F.முஹம்மதுரிஃபாயி-முத்தஹிரா திருமணம்
வியாழன், 18 அக்டோபர், 2012
இரவுநேர மின்வெட்டை கண்டித்து மெழுகுவர்த்தி, தீப்பந்தங்கள் ஏந்தி பொதுமக்கள் கண்டன போராட்டம்
புவனகிரி, : இரவுநேர மின்வெட்டை கண்டித்து பரங்கிப்பேட்டையில் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கைகளில் விளக்குகள், மெழுகுவர்த்திகள், தீப்பந்தங்கள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பரங்கிப்பேட்டை நகரில் தினமும் சுமார் 15 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. காலையில் பள்ளி, வேலைக்கு செல்லும் நேரம், மதியம் சாப்பிட வரும் நேரம், மாலையில் படிக்கும் நேரம், இரவில் தூங்கும் நேரம் என்று எப்போதும் மின்தடை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமதுயூனுஸ் தலைமையில், பரங்கிப்பேட்டை காவல்நிலையம் எதிரில் உள்ள பஸ் நிலையத்தில் கூடினார்கள்.
பின்னர் மின்வெட்டை கண்டித்து கைகளில் லாந்தர் விளக்குகள், மெழுகுவர்த்திகள், தீப்பந்தங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் ஏந்தி தமிழக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார்கள்.
இந்த போராட்டம் குறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமதுயூனுஸ் கூறுகையில் ‘ஒட்டு மொத்தமாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் 2 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருந்தது. ஆனால் இன்று 18 மணி நேரம் வரை மின்சாரம் இல்லை. இதனால் குடிநீர் பிரச்னை உள்ளது.
மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் இயங்க முடியவில்லை. அதனால் தமிழக அரசு வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை, கருத்துகளை கேட்டு நிறைவேற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது’ என கூறினார்.
பரங்கிப்பேட்டை நகரில் தினமும் சுமார் 15 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. காலையில் பள்ளி, வேலைக்கு செல்லும் நேரம், மதியம் சாப்பிட வரும் நேரம், மாலையில் படிக்கும் நேரம், இரவில் தூங்கும் நேரம் என்று எப்போதும் மின்தடை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமதுயூனுஸ் தலைமையில், பரங்கிப்பேட்டை காவல்நிலையம் எதிரில் உள்ள பஸ் நிலையத்தில் கூடினார்கள்.
பின்னர் மின்வெட்டை கண்டித்து கைகளில் லாந்தர் விளக்குகள், மெழுகுவர்த்திகள், தீப்பந்தங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் ஏந்தி தமிழக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார்கள்.
இந்த போராட்டம் குறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமதுயூனுஸ் கூறுகையில் ‘ஒட்டு மொத்தமாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் 2 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருந்தது. ஆனால் இன்று 18 மணி நேரம் வரை மின்சாரம் இல்லை. இதனால் குடிநீர் பிரச்னை உள்ளது.
மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் இயங்க முடியவில்லை. அதனால் தமிழக அரசு வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை, கருத்துகளை கேட்டு நிறைவேற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது’ என கூறினார்.
மக்கா, மதீனாவில் ஹாஜிகள் அலை!
ஜித்தா : 1433ம் ஆண்டின் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகம் முழுவதிலிருந்தும் ஹாஜிகள் மக்கா, மதீனாவை நோக்கி வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவிலிருந்து இவ்வாண்டு இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ள யாத்திரிகர்களுக்கான விமானச் சேவை செப்டம்பர் 17 அன்று துவங்கியது. அக்டோபர் 16 வரை 392 விமானங்கள் மூலம் 114,600 யாத்திரிகர்கள் ஜித்தாவிலும், மதீனாவிலும் தரை இறங்கி உள்ளனர்.
அதே சமயம் மரணங்களும் நிகழ்கின்றன. ஹஜ் பயணம் மேற்கொண்டு சவூதி வந்த ஹாஜிகளில் 54 இந்தியர்கள் இதுவரை மரணமடைந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து இவ்வாண்டு மொத்தம் 1,70,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதில் சுமார் 45,000 பேர் தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலம் பயணம் செய்கின்றனர்.
அந்த யாத்திரிகர்களின் பயணம் குறித்த பல தகவல்களை (மக்காவில் தங்கும் ஹோட்டல் விவரம், மதீனாவில் தங்கும் ஹோட்டல் விவரம், தொடர்பு தொலைபேசி எண் போன்ற) இணையதளம் மூலம் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி ஜித்தாவில் உள்ள இந்திய தூதரக இணையதளத்தில் பராமரிக்கப்படுகிறது. இணையதள முகவரி: http://212.62.120.219/PTOsearch.aspx
ஏன் நிம்மதியாக தூங்கமுடியவில்லை?
இரவுத் தூக்கம் நிம்மதியாக இருந்தால் உடலில் வேறெந்த பெரிய நோயும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.
தூக்கமின்மையை சாதாரணமாகக் கருதி கண்டுகொள்ளாமல் விடுவது தவறு.
சிறு வயதினருக்கு தேர்வு பயம், தலைவலி உள்ளிட்ட சிறிய தொந்தரவுகளினால்கூட தூக்கம் தடைபடலாம். அது விரைவில் சரியாகி விடும்.
30 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை தொடங்குகிறது. உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்த அழுத்தம், சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதிக உடல் எடை காரணமாகவும் தூக்கம் தடைபடும். பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் உறக்கம் பிரச்னையே.
இரவில் நீண்ட நேரம் தொலைக்காட்சி, கணனி பார்ப்பது மற்றும் மனக்குழப்பம், மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல் இருந்தாலும் தூக்கம் பிரச்னையாக மாறும்.
தூக்கமின்மையின் காரணமாக எந்த விஷயத்திலும் இவர்களால் முழு ஈடுபாடு காட்ட முடியாது. கவனக்குறைவால் மற்ற வேலைகளும் கெடும். தூக்கம் தடைபட்டு அடிக்கடி எழுந்திருத்தல் போன்ற தொல்லைகள் தொடரும்.
இதனால் உடல் சோர்வு, தெளிவாக முடிவெடுக்கத் தெரியாமல் திண்டாடுதல், உடல் தளர்ச்சி, யோசிக்க முடியாமல் திணறுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். தூக்கமின்மை தொடங்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ளலாம்.
மூளையில் சுரக்கும் செரோட்டின் அளவு குறையும் போது தான் தூக்கமின்மை பிரச்னை உருவாகிறது. குழந்தைகளுக்கு சிறு வயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம், குழந்தைகள் பயங்கரமான கனவுகளால் விழிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு கனவு பற்றி சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மரபு ரீதியான இரவு நேர பய உணர்வும் தூக்கத்தின் எதிரியே. தூக்கத்தில் எழுந்து நடப்பது, தானாகப் பேசுவது போன்ற குறைபாடுகளும் குழந்தைகளிடம் காணப்படலாம். இது குறித்து மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகள் நிம்மதியான தூக்கம் பெற முடியும்.
பாதுகாப்பு முறை: தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட வேண்டும்.
எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை மட்டுமே இரவில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
தூக்கம் பிரச்னை உள்ளவர்கள் காபி குடிப்பதை கைவிட வேண்டும். காபியில் இருக்கும் காபின் காரணமாக மூளையில் செரோட்டின் சுரப்பு அளவு குறையும்.
இரவு படுக்கைக்கு செல்லும் முன் வெந்நீரில் குளித்தால் நன்றாக தூக்கம் வரும். தினமும் முறையான நேரத்துக்கு தூங்கச் செல்லுதல், தூங்கும் இடத்தில் அதிக வெளிச்சம் இன்றி இருத்தல், மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் தவிர்த்தல், மனக் கவலைகளை ஓரம் கட்டுதல் வேண்டும்.
படுக்கையில் அலுவலகப் பணிகள் செய்வதைத் தவிர்க்கவும். இரவில் ஒரு டம்ளர் பால் அருந்தவும்.மூளையைத் தூண்டும் மருந்துகளைத் தவிர்க்கவும். புகை பிடிப்பதும் நல்லதல்ல. பரபரப்பான வாழ்க்கை முறையை மாற்றி நிதானப்படுத்திக் கொள்ளவும்.
மன அமைதிக்கான பயிற்சிகள், போதுமான உடற்பயிற்சியும், சத்தான உணவுகளும் இனிய தூக்கத்துக்கு வழிவகுக்கும்.
அக். 25 அரஃபா தினம்! அக். 26 ஈதுல் அழ்ஹா! – சவூதி அறிவிப்பு
துபாய் : சவூதி அரேபியாவின் உச்சநீதிமன்றம் அக்டோபர் 25ம் தேதி வியாழக்கிழமையை அரஃபா தினமாகவும், அக்டோபர் 26ம் தேதி வெள்ளிக்கிழமையை ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாளாகவும் (ஹஜ்ஜுப் பெருநாள்) அறிவித்துள்ளது. எனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹிஜ்ரி 1433ம் ஆண்டின் ஈதுல் அழ்ஹா பெருநாள் தினம் அக்டோபர் 26ம் தேதி கொண்டாடப்படும்.
செவ்வாய்க்கிழமை துல்கஃதா பிறை 30 என்றும், புதன்கிழமை துல்ஹஜ் பிறை 1 எனவும் சவூதி அரேபியாவின் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஆனால் தமிழக தலைமை காழி அக்டோபர் 26ஐ அரஃபா தினமாகவும், அக்டோபர் 27 ஐ ஹஜ்ஜுப் பெருநாள் தினமாகவும் அறிவித்துள்ளார். எனவே தமிழகத்தில் அவ்வண்ணமே அக்டோபர் 27 அன்று தியாகத் திருநாள் கொண்டாடப்படும்.
மாபெரும் முற்றுகை போர்
நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பு அக்டோபர் 22 காலை 11 மணிக்கு (இன்ஷா அல்லாஹ்)
காவிரி நதி நீரின் உரிய பங்கினை தமிழகத்திற்கு தர மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் கொடுக்காதே !
எனக்கோரி நெய்வேலியில் மாபெரும் அனல் மின் நிலைய முற்றுகை போர், தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெறும்.
அநீதிக்கு எதிராக ஆர்ப்பரித்து வாரீர்...
அழைக்கிறது மனிதநேய மக்கள் கட்சி,,,
இந்திய வரலாற்றில் மிகப் பெரிய பணக்காரர் ஐதராபாத்தின் கடைசி நிஜாம்
லண்டன் : இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய பணக்காரர் என்றால், யாருடைய பெயர் உங்களுக்கு நினைவுக்கு வருகிறது? எல்லோரும் நினைப்பதுபோல் டாடா, பிர்லா, அம்பானிகளை நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்தியாவின் முதல் பெரும் கோடீஸ்வரர், ஐதராபாத்தின் கடைசி நிஜாமான உஸ்மான் அலி கான்தான் அவர். உலக அளவில் விலைவாசி அடிப்படையில் கோடீஸ்வரர்கள் பட்டியலை, செலிபிரிட்டி நெட் வொர்த் என்ற இணையதளம் தயாரித்துள்ளது.
அந்த காலத்தில், அதாவது 1913ம் ஆண்டில் ரூ.530 கோடி சொத்து வைத்திருந்தால், அது தற்போது ரூ.12 லட்சத்து815 கோடியாக கருதப்படும். இதன் அடிப்படையில் 25 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை தயாரிக்க இந்த இணையதளம் திட்டமிட்டது. ஆனால், அதில் 24 பேர் மட்டுமே இடம்பெற்றதாக அது தெரிவித்துள்ளது.
இப்பட்டியலின்படி, இந்திய வரலாற்றில் மிகப் பெரிய பணக்காரர் உஸ்மான் அலி கான். இவர் 1886 முதல் 1967ம் ஆண்டு வரையில் ஐதராபாத்தை ஆண்டுள்ளார். அவர் 1967ல் காலமானார். அவரது சொத்து மதிப்பு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்து 800 கோடி. உலக அளவில் அவர் 6வது இடத்தை பிடித்துள்ளார். ஆப்ரிக்காவின் 14ம் நூற்றாண்டு அரசரான முதலாம் மான்சா மூசாதான், வரலாற்றிலேயே முதல் பெரும் கோடீஸ்வரர். அவரது சொத்து மதிப்பு ரூ.21 லட்சத்து 20 ஆயிரம் கோடி. இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ரோத்ஸ்சைல்டு குடும்பம். இவர்களின் வாரிசுகள் இன்னமும் கூட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
18ம் நூற்றாண்டில் மேயர் ஆம்ஸ்செல் ரோத்ஸ்சைல்டு வங்கி நிதி நிறுவனத்தை ஆரம்பித்தார். அவரது சொத்து மதிப்பு ரூ.18 லட்சத்து 55 ஆயிரம் கோடி. பட்டியலில் 3வது இடத்தில் இருப்பவர், அமெரிக்காவின் ஜான் டி ராக்பெல்லர். 1937ம் ஆண்டில் இருந்த அவரது சொத்தின் தற்போதைய மதிப்பு ரூ.18 லட்சத்து 2 ஆயிரம் கோடி. அமெரிக்க வரலாற்றின் முதல் பெரும் கோடீஸ்வரர் இவர். ஆயிரம் ஆண்டுகள் அடிப்படையில் கோடீஸ்வரர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டபோதும், சிலரது சொத்து விவரங்கள் வரலாற்று அளவில் ஆராயப்பட்டுள்ளன. ஆனால், இந்த பட்டியல் முழுவதிலுமே பெண்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை.
அந்த காலத்தில், அதாவது 1913ம் ஆண்டில் ரூ.530 கோடி சொத்து வைத்திருந்தால், அது தற்போது ரூ.12 லட்சத்து815 கோடியாக கருதப்படும். இதன் அடிப்படையில் 25 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை தயாரிக்க இந்த இணையதளம் திட்டமிட்டது. ஆனால், அதில் 24 பேர் மட்டுமே இடம்பெற்றதாக அது தெரிவித்துள்ளது.
இப்பட்டியலின்படி, இந்திய வரலாற்றில் மிகப் பெரிய பணக்காரர் உஸ்மான் அலி கான். இவர் 1886 முதல் 1967ம் ஆண்டு வரையில் ஐதராபாத்தை ஆண்டுள்ளார். அவர் 1967ல் காலமானார். அவரது சொத்து மதிப்பு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்து 800 கோடி. உலக அளவில் அவர் 6வது இடத்தை பிடித்துள்ளார். ஆப்ரிக்காவின் 14ம் நூற்றாண்டு அரசரான முதலாம் மான்சா மூசாதான், வரலாற்றிலேயே முதல் பெரும் கோடீஸ்வரர். அவரது சொத்து மதிப்பு ரூ.21 லட்சத்து 20 ஆயிரம் கோடி. இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ரோத்ஸ்சைல்டு குடும்பம். இவர்களின் வாரிசுகள் இன்னமும் கூட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
18ம் நூற்றாண்டில் மேயர் ஆம்ஸ்செல் ரோத்ஸ்சைல்டு வங்கி நிதி நிறுவனத்தை ஆரம்பித்தார். அவரது சொத்து மதிப்பு ரூ.18 லட்சத்து 55 ஆயிரம் கோடி. பட்டியலில் 3வது இடத்தில் இருப்பவர், அமெரிக்காவின் ஜான் டி ராக்பெல்லர். 1937ம் ஆண்டில் இருந்த அவரது சொத்தின் தற்போதைய மதிப்பு ரூ.18 லட்சத்து 2 ஆயிரம் கோடி. அமெரிக்க வரலாற்றின் முதல் பெரும் கோடீஸ்வரர் இவர். ஆயிரம் ஆண்டுகள் அடிப்படையில் கோடீஸ்வரர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டபோதும், சிலரது சொத்து விவரங்கள் வரலாற்று அளவில் ஆராயப்பட்டுள்ளன. ஆனால், இந்த பட்டியல் முழுவதிலுமே பெண்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை.
செவ்வாய், 16 அக்டோபர், 2012
பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ தலைமையில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் தடை சட்டம் குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு கலெக்டர் ராஜேந்திரரத்னூ தலைமை தாங்கி பேசியதாவது:-
18 வயதிற்கு குறைவான நபர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் உள்ள பகுதியில் 100 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளில் சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள், பஸ் நிலையங்கள், ஓட்டல்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் போன்ற அனைத்து பொது இடங்களிலும் புகைபிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக்கேடு குறித்த எச்சரிக்கை குறி மற்றும் வாசகங்கள் அமைக்கப்பட வேண்டும்.
அனைத்து பொது இடங்களிலும் மற்றும் அரசு வளாகங்களிலும் புகை பிடித்தலை தடை செய்யப்பட்ட பகுதி. இங்கு புகை பிடித்தால் குற்றச்செயலாகும் என்ற விவரம் அடங்கிய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இச்சட்டத்தை செயல்படுத்தும் அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ராஜேந்திரரத்னூ கூறினார்.
கூட்டத்துக்கு கலெக்டர் ராஜேந்திரரத்னூ தலைமை தாங்கி பேசியதாவது:-
18 வயதிற்கு குறைவான நபர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் உள்ள பகுதியில் 100 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளில் சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள், பஸ் நிலையங்கள், ஓட்டல்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் போன்ற அனைத்து பொது இடங்களிலும் புகைபிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக்கேடு குறித்த எச்சரிக்கை குறி மற்றும் வாசகங்கள் அமைக்கப்பட வேண்டும்.
அனைத்து பொது இடங்களிலும் மற்றும் அரசு வளாகங்களிலும் புகை பிடித்தலை தடை செய்யப்பட்ட பகுதி. இங்கு புகை பிடித்தால் குற்றச்செயலாகும் என்ற விவரம் அடங்கிய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இச்சட்டத்தை செயல்படுத்தும் அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ராஜேந்திரரத்னூ கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் நோய் அதிவேகமாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் நோய் அதிவேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பீதி முடிவுக்கு வருவதற்குள் மர்ம காய்ச்சல் நோய் தீவிரமடைந்து வருகிறது.”தானே’ புயல் காரணமாக மரக்கிளைகள் ஒடிந்தும், இலைகள் உதிர்ந்தும் கடலூர் மாவட்டமே குப்பை மேடாகியது.
சென்னை மற்றும் பல்வேறு நகராட்சிகளில் இருந்து வந்த துப்புரவு பணியாளர்கள் ஓரளவுக்கு குப்பைகளை அகற்றினர்.இருப்பினும் இம்மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக கடலூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் நோய் பரவி வருகிறது. குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்து விட்டால் அது மற்றவர்களுக்கும் பரவுகிறது.பண்ருட்டி பகுதியில் 6 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் சேவை இல்ல குழந்தைகள் காப்பகத்தில் மாணவி ஒருவர் இறந்துள்ளார்.டெங்கு காய்ச்சல் ஒருபுறம் மிரட்டிக்கொண்டிருக்கிற வேளையில், அதை விட அதிகமாக மர்ம காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் எலும்பு பாதிக்கப்பட்டு நடக்கக்கூட முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கடலூர் தலைமை மருத்துவமனைக்கு வரும் வெளி நோயாளிகளில் 4ல் ஒரு பங்கு மர்ம காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்ட வழிசோதனை பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவர் நேற்று ஆண்களுக்கான மருத்துவ வார்டில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து சுகாதார துணை இயக்குனர் ஜவகர்லால் கூறுகையில், “காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அவசியமாக மருத்துவமனையில் சேர்ந்து டெங்கு காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் யாரும் பயப்படத்தேவையில்லை. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் மொட்டை மாடியிலோ, அல்லது தேங்காய் மட்டையிலோ மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.
திங்கள், 15 அக்டோபர், 2012
பயங்கரவாதத்திற்கெதிரான சட்டங்கள் முஸ்லிம்களுக்கெதிராக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன!:PUCL செயலாளர்
புது தில்லி : “பயங்கரவாதத்திற்கெதிரான சட்டங்கள் விளிம்பு நிலை மக்களுக்கெதிராகவும், மதச் சிறுபான்மையினருக்கெதிராகவும், குறிப்பாக முஸ்லிம்களுக்கெதிராக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. போலீஸ் அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கெதிராக குரோத நோக்கத்துடன் செயல்பட்டுள்ளதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன” என்று PUCL தேசியப் பொதுச் செயலாளர் வி. சுரேஷ் கூறினார்.
“சட்டவிரோத நடவடிக்கைகளைத் தூண்டுதல், பயங்கரவாதத்திற்கெதிரான சட்டங்கள், ஜனநாயகம்” என்ற தலைப்பில் புது தில்லியிலுள்ள இந்திய சட்டக் கல்வி நிறுவனத்தில் நடந்த பேராசிரியர் இக்பால் அன்சாரி நினைவு உரையாற்றும்பொழுது வி. சுரேஷ் இவ்வாறு கூறினார்.
“தடா, பொடா சட்டங்களை விட ஆபத்தானது இப்பொழுது நிலவிலுள்ள திருத்தப்பட்ட சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், 1967 (Unlawful Activities Prevention Act, 1967 – UAPA). தடா, பொடா சட்டங்களிலுள்ள ஒருசில தவறாகப் பயன்படுத்தப்படாமல் தடுப்பதற்குரிய பாதுகாப்பு அம்சங்கள் கூட இந்த UAPA சட்டத்தில் இல்லை” என்று மேலும் கூறினார் வி. சுரேஷ்.
மனித உரிமைகள் என்பது ஆடம்பரமோ, சலுகையோ, சொகுசோ அல்ல, அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை என்று குறிப்பிட்ட அவர், “தவறு செய்யும் அதிகாரிகள் மீது வழக்கு நடவடிக்கைகள் எடுக்க சரியான தருணம் இது” என்று கூறினார்.
மீன் எண்ணை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.
அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.
ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.
மீன் எண்ணெய் என்றால் என்ன?
இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.
இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம். ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.
எதற்கு சாப்பிட வேண்டும்?
இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.
எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.
இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.
இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.
முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.
மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்
ஞாயிறு, 14 அக்டோபர், 2012
கறிவேப்பிலை-புற்று நோய்க்கு நல்ல மருந்து
உணவில் கறிவேப்பிலையை பார்த்தாலே, பலருக்கும் வெறுப்பாக தான் இருக்கும். அதை தூக்கி எறிந்து விட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள்.
கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி இந்தியாவில் உள்ள சாந்திநிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகம், கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடுயூட் ஆப் கெமிகல் பயாலஜி மற்றும் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களின் ஆய்வில் பல்வேறு அதிசயத்தக்க உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், அஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகளும் உள்ளன.
இதனால் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதோடு, நல்ல மணத்தையும் தருகிறது. இதன் காரணமாக புரஸ்ட்டேட் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதேபோல் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கறிவேப்பிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கருவேப்பிலை சாப்பிடுவதால் இதய நோய் வராது, மேலும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்றும் கூறும் ஆய்வாளர்கள், கறிவேப்பிலைக்கு புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.
சென்னையில் 2 மாணவர்கள் பலி; 50 பேருக்கு பாதிப்பு டெங்கு பரவுகிறது : 7 மாவட்டங்களில் 100 பேருக்கு சிகிச்சை
சென்னை : தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. சென்னையில் 2 மாணவர்கள் இறந்தனர்; 50 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், டெங்கு காய்ச்சலை தடுக்க தென்மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் சென்னையில் ஆலோசனை நடத்தினார். பின் டெங்கு குறித்து பயப்படத் தேவையில்லை என்றார். ஆனால் தமிழகத்தில் பரவலாக டெங்கு பரவி வருகிறது. சென்னையில் நேற்று டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். சென்னை ஐஸ் அவுஸ் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் டேவிட் ஜெயசிங். இவர், ஏழுகிணறு காவல் நிலையத்தில் சப்,இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் டேவிட் இறந்துவிட்டார். இவரது மகன் சாம்ஜி. இவர், துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 3 வாரமாக சாம்ஜி கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், 11ம் தேதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தனி வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். நேற்று காலை சாம்ஜி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், சாம்ஜி காய்ச்சல் காரணமாக, தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் உறுப்புகள் பெரும்பாலும் செயலிழந்த நிலையில் தான், இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் பல்லுறுப்புகள் செயலிழந்ததால், அவர் உயிரிழந்தார்’’ என்றார். திருவேற்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். கட்டிட மேஸ்திரி. இவரது மகன் சுதாகர் (17). அரும்பாக்கத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். ஒரு வாரமாக சுதாகர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து, அவரை உடனடியாக வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சுதாகரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து, அரசு பொது மருத்துவமனையில் சேர்ப்பதற்காக, நேற்று மாலை சுதாகரை ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து உறவினர்கள் கூறுகையில், ‘‘சுதாகருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. அதனால் தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளும் காணப்பட்டது. ஆனால், டெங்கு காய்ச்சலா என்பது தெரியவில்லை’’ என்று கண்ணீருடன் கூறினர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் கடந்த 3 நாட்களில் 50 பேர் சிகிச்சைக்கு வந்துள்ளனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 குழந்தைகளும், எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 7 குழந்தைகளும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு பெண் உட்பட 3 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 13 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் சென்னை மற்றும் புறநகரில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று முன்தினம் வரை 26 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில், ‘‘சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார். மாவட்டங்களில்: சென்னை தவிர, 7 மாவட்டங்களில் டெங்கு பரவி வருகிறது. அங்கும் 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் ஏற்கனவே பலியாகியுள்ள நிலையில், தற்போது மேலும் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது சுகாதார துறை, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சரத்குமாருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
நாகை மாவட்டத்தில் 15 பேருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது.
கோவையில் டெங்கு பாதிப்புக்கு 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு டெங்கை கட்டுப்படுத்த, கிராமங்களில் முகாமிட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் இரு நாட்களுக்கு மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானார். 3 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 7 பேர் பலியாகினர். மேலும் 12 சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 3 சிறுமிகள் பலியாகி உள்ளனர். இப்படி வேறு சில மாவட்டங்களில் இருந்தும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், அதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று முன்தினம் வரை 26 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில், ‘‘சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார். மாவட்டங்களில்: சென்னை தவிர, 7 மாவட்டங்களில் டெங்கு பரவி வருகிறது. அங்கும் 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் ஏற்கனவே பலியாகியுள்ள நிலையில், தற்போது மேலும் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது சுகாதார துறை, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சரத்குமாருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
நாகை மாவட்டத்தில் 15 பேருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது.
கோவையில் டெங்கு பாதிப்புக்கு 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு டெங்கை கட்டுப்படுத்த, கிராமங்களில் முகாமிட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் இரு நாட்களுக்கு மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானார். 3 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 7 பேர் பலியாகினர். மேலும் 12 சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 3 சிறுமிகள் பலியாகி உள்ளனர். இப்படி வேறு சில மாவட்டங்களில் இருந்தும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், அதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதன், 10 அக்டோபர், 2012
பாகிஸ்தானில் 20,000 இணையதளங்களுக்குத் தடை!
இஸ்லாமாபாத் : ஆட்சேபகரமான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளன என்று குற்றம் சாட்டி யூ டியூப் உட்பட சுமார் 20,000 வரை இணையதளங்களும், வலையூட்டுகளும் பாகிஸ்தான் அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.
இஸ்லாத்திற்கு விரோதமான சினிமா இணையதளங்களில் வெளியிடப்பட்டதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னதாக சர்ச்சைக்குரிய திரைப்படத்தைத் தடை செய்ய முடியாமல் போனது சம்பந்தமாக பாக்., தொலைத்தொடர்பு அதிகாரத்தின் தலைவருக்கெதிராக வழக்கு தொடுக்கப்படவேண்டும் என்று லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
யூ டியூபின் மீதுள்ள தடையை தற்பொழுது நீக்கும் எண்ணம் இல்லை என்று அதிகாரிகள் கூறினார்கள். அந்தத் திரைப்படத்தை யூ டியூப் தடை செய்யாதவரை அதன் தடையை நாங்கள் நீக்கப்போவதில்லை என்று பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)