துபாய் : சவூதி அரேபியாவின் உச்சநீதிமன்றம் அக்டோபர் 25ம் தேதி வியாழக்கிழமையை அரஃபா தினமாகவும், அக்டோபர் 26ம் தேதி வெள்ளிக்கிழமையை ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாளாகவும் (ஹஜ்ஜுப் பெருநாள்) அறிவித்துள்ளது. எனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹிஜ்ரி 1433ம் ஆண்டின் ஈதுல் அழ்ஹா பெருநாள் தினம் அக்டோபர் 26ம் தேதி கொண்டாடப்படும்.
செவ்வாய்க்கிழமை துல்கஃதா பிறை 30 என்றும், புதன்கிழமை துல்ஹஜ் பிறை 1 எனவும் சவூதி அரேபியாவின் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஆனால் தமிழக தலைமை காழி அக்டோபர் 26ஐ அரஃபா தினமாகவும், அக்டோபர் 27 ஐ ஹஜ்ஜுப் பெருநாள் தினமாகவும் அறிவித்துள்ளார். எனவே தமிழகத்தில் அவ்வண்ணமே அக்டோபர் 27 அன்று தியாகத் திருநாள் கொண்டாடப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக