AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

குடும்ப அட்டை (Family Card) பெறுவது எப்படி !?


புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?
 தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.
குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?
தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும். மேலும்http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு இணை தளத்திலும் தரைஇறக்கம் செய்து கொள்ளலாம்.
 விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி ( TSO ) அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.
விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?
விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
தேவையான ஆவணங்கள் :
1.  இருப்பிடச் சான்று
2.  தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை
3. வீட்டு வரி செலுத்திய / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டணம் செலுத்திய போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் ( இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை )
4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் ( TSO )  பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.
5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான “ குடும்ப அட்டை இல்லா “ சான்று.
6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.
7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.
மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?
1.       தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
2.       வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.
3.       விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.
புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?
அரசால் ரூ 5 /- கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்

திங்கள், 27 பிப்ரவரி, 2012

4 மணி நேரம் பவர் கட் : மக்கள் கடும் அவதி

சென்னை: மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய மின்வெட்டு, இன்று முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் முதல்முறையாக 2 மணி நேரம் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது. தமிழகத்தில் நாளொன் றுக்கு 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது.  இதனால் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத மின்வெட்டு நீடிக்கிறது. கிராமப்புறங்களில் 10 மணி நேரம் வரையும் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் சுழற்சி முறையில் 8 மணி நேரமும் மின்தடை செய்யப்பட்டது. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரம் தவிர பகலில் 3 மணி நேரம், இரவில் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டது. இதனால் தொழில்துறையினரும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் மக்கள் தொடர்ந்து போராட் டம் நடத்தி வருகின்றனர்.

மின் பற்றாக்குறையால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கோபத்தை சமாளிக்க வழி தெரியாமல் மின்வாரியம் தவித்து வருகிறது. இதை தவிர்ப்பது குறித்து கடந்த 17 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மின்வாரிய தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இதையடுத்து சென்னை உள்பட மாநிலம் முழுவதும் சீரான மின்தடை ஏற்படுத்தவும், தொழிற்சாலைகளுக்கு மின்சார விடுமுறை விடவும் அரசு தீர்மானித்தது. அதன்படி, புதிய மின்வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள புதிய மின்வெட்டு திட்டம் இன்று அமலுக்கு வந்தது. சென்னையில் 2 மணி நேரமும், மற்ற மாவட்ட பகுதிகளுக்கு 4 மணி நேரமும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல்முறையாக 2 மணி நேரம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு 40 சதவீத மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. வணிக பயனீட்டாளர்களுக்கு மாலை 6 முதல் இரவு 10 மணி வரை மின்தடை இருக்கும் என்றும் புதிய மின்வெட்டு மூலம் 1,200 மெகாவாட் மின்சாரம் சேமிக்க முடியும் என்றும் மின் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 1-ம் தேதி முதல் தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் Ôமின் விடுமுறைÕ அமல்படுத்தப்பட உள்ளது. ஞாயிறு தவிர, மற்ற 6 நாட்களுக்கு 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் தொழிற்சாலைகளுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும்.

இதன்படி, ஈரோடு மண்டல தொழில் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமையும், சென்னை தெற்கு மண்டலம், திருப்பத்தூர் பகிர்மான வட்டத்துக்கு செவ்வாய், சென்னை வடக்கு, மதுரை மண்டலத்துக்கு புதன், கோவை மண்டலம் திருப்பூர், நீலகிரி பகிர்மானவட்டம் தவிர்த்து பிற பகுதிகளுக்கு வியாழன், நெல்லை மண்டலம் மற்றும் திருப்பூர், நீலகிரி மின்பகிர்மான வட்டத்துக்கு வெள்ளிக்கிழமை, திருச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் மண்டலம் திருப்பத்தூர் பகிர்மான வட்டம் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் சனிக்கிழமைகளில் மின் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை விடப்படுவதால் சிறு மற்றும் குறுந் தொழில்கள் பெரிதும் பாதிக்கப்படும். இதனால் 50 சதவீத வருவாய் இழப்பு ஏற்படும் என தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி.....!

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.
இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. 
உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
நாட்கள் காலை 6 மணி மதியம் 12 மணி மாலை 6 மணி மொத்தம் பழங்கள் 1வது நாள் 1 1 1 3 2வது நாள் 2 2 2 6 3வது நாள் 3 3 3 9 4வது நாள் 4 4 4 12 5வது நாள் 4 4 4 12 6வது நாள் 4 4 4 12 7வது நாள் 3 3 3 9 8வது நாள் 2 2 2 6 9வது நாள் 1 1 1 3
ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப் பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளாபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளாபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து அருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும். செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் இழந்த சக்தியையும், உற்சாகத்தையும் நாம் பெறலாம்.

செய்து பார்க்கலாமே!

கந்தகுமாரன் தமுமுக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் தமுமுக மாநில செயலாளர் சகோதரர் கோவை சையது அவர்கள் சிரப்புரையாற்றினார்





அஸ்ஸலாமு அழைக்கும்  26-02-2012  கந்தகுமாரன் தமுமுக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் தமுமுக மாநில செயலாளர் சகோதரர் கோவை சையது அவர்கள் சிரப்புரையாற்றினார் தலைமை M .H  மெஹராசுட்டீன்  N.அமானுல்லாஹ்   கந்தகுமாரன்  கிளை சகோதரர்கள் நிகழ்ச்சிக்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில் திரளான மக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.  இரவு உணவு வழங்கப்பட்டது. கந்தகுமாரன்  கிளை தமுமுக தலைவர் சகோதரர் N.முஹம்மது  நன்றி கூறினார்  எல்லாப்புகழும் இறைவனுக்கே

கடலூர் மாவட்டத்தில் புதிய மசூதி!



கடலூர் மாவட்டம்,  சிதம்பரம் – கடலூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பி.முட்லூர் ஆணையங்குப்பத்தில் மஸ்ஜிதே முஹம்மத் என்னும் புதிய மசூதி திறப்புவிழா நேற்று முன் தினம் நடைபெற்றது.
பி.முட்லூர்  ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகி ஏ.பக்கீர் மொய்தீன் சாஹிப் தலைமையில் நடைபெற்ற திறப்புவிழாவில் கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொருளாளரும்   பி.முட்லூர்  ஜாமிஆ மஸ்ஜித்  டிரஸ்டியுமான டி.அப்துல் கப்பார் கான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

நீடுர் நெய்வாசல் அரபுக்கல்லூரி முதல்வர் எ. முஹம்மது இஸ்மாயில் பாகவி சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

நீடூர் ஜாமிஆ மிஸ்ஹுல் ஹுதா அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா முஹம்மத் இஸ்மாயில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவர் மௌலானா ஏ.ஷபிகுர்ரஹ்மான், லால்பேட்டை ஜெ.எம்.ஏ. அரபிக்கல்லூரி பேராசிரியர் மௌலானா முஹம்மது காசிம்,ஜெ.எம்.ஹெச்.அரபிக்கல்லூரி பேராசிரியர் மௌலானா அப்துல் ரஹ்மான், கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவரும், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவருமான எம்.எஸ். முஹம்மது யூனுஸ், மற்றும் பலர் உரையாற்றினர்.

லால்பேட்டை ஜெ.எம்.ஏ. அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா ஏ.நூருல் அமீன் ஜும்ஆ  பேரூரை நிகழ்த்தினார்
மசூதி திறப்பு விழாவில் தமிழக சமூகநலத்துறை முன்னாள் அமைச்சரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான செல்வி ராமஜெயம், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், பரங்கிபேட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அசோகன், ஒன்றிய குழு துணைத் தலைவர் திருமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

லால்பேட்டை, பின்னத்தூர், எள்ளேரி, கொள்ளுமேடு, நெடுஞ்சேரி, பூதகேணி, ஆயங்குடி, சிதம்பரம், கோவிலாம்பூண்டி, கந்தகுமாரன், பரங்கிப்பேட்டை ஆகிய ஊர்களிலிருந்து ஏராளமான முஸ்லிம் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் கலந்துக் கொண்டனர்.

இனாயத்துல்லாஹ் - அப்ரோஜா கனி திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}    வாழ்த்துக்களுடன்…
                                        கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்  

சனி, 25 பிப்ரவரி, 2012

முஹம்மது ரில்வான் - ரோஸினா பேகம் திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}    வாழ்த்துக்களுடன்…
                                        கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்                                                 

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

கந்தகுமாரன் தமுமுக மார்க்க விளக்க பொதுக்கூட்டம்...

ந்தகுமான் தமுமுக  மார்க்க விக்க பொதுக்கூட்டம்... 

இந்திய தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் டெல்லி கருத்தரங்கில் மமக பொதுச்செயலாளர் பங்கேற்பு!


இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 9,10,11 தேதிகளில் மூன்றுநாள் தேசிய அளவிலான பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.

தற்போது இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் தொகுதி வாரியான தேர்தல் முறைக்கு மாற்றாக ஜெர்மனி, இலங்கை போன்ற நாடுகளில் அமலில் இருக்கும் விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறையை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இம்மாநாடு நடைபெற்றது.

Campaign for Electoral Reforms in India - CERI என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற இம்மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் பல்வேறு பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவரது உரையிலிருந்து சுருக்கமாக...

இந்தியாவில் தற்போது நடைமுறையிலிருக்கும் தேர்தல் முறையில் சிறுபான்மையினரும். ஒடுக்கப்பட்ட மக்களும் தேர்தல் அதிகாரத்தை எளிதில் நெருங்க முடியாத நிலை உள்ளது. யாருடனாவது கூட்டணி வைத்தால் மட்டுமே வெல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

இலங்கை, ஜெர்மனியில் உள்ளதுபோல் தொகுதி வாரி தேர்தல் முறைக்கு மாற்றாக; ஒரு கட்சிக்கு கிடைக்கும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் MP, MLAக்களை பெறும் முறைதான் வரவேண்டும்.

இது போன்ற தேர்தல் முறையை அயோத்திதாசர் பண்டிதர் அப்போதே வலியுறுத்தினார். முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா பாராளுமன்றத்தில் இது குறித்து பேசியபோது, அப்போதையை பா.ஜ.க. வின் சட்ட அமைச்சர் அருண்ஜெட்லி அது இந்தியாவுக்கு ஆபத்தானது என்று நிராகரித்தார்.

இத்தேர்தல் முறையை கொண்டு வரவும், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவும் மனிதநேய மக்கள் கட்சி எல்லா வகையிலும் உதவும் என்றார்.

இது குறித்து CERI அமைப்பு வெளியிட்ட நூலை தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி வெளியிட்டார்.

இரண்டாம் நாள் அமர்வில் சச்சார் அறிக்கையை சமர்பித்து உலகப்புகழ் பெற்றவரான நீதீபதி ராஜேந்திர சச்சார் உரையாற்றினார். அவருடன் மமக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உரையாடினார்.

சச்சார் அறிக்கையில் இந்திய முஸ்லிம்களின் நிலையை துல்லியமாக அம்பலப்படுத்தினீர்கள். 20 கோடி முஸ்லிம்களும் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம் என அவரிடம் கூறியதும், அவர் அப்படி நான் என்ன பெரிதாக செய்து விட்டேன் என்றார். இன்றைய இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து இருவரும் உரையாடினார்கள். அப்போது மக்கள் உரிமை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஜி.அத்தேஷ் உடன் இருந்தார்.

மூன்று நாள் நடைபெற்ற மாநாடு நாடு தழுவிய பிரச்சாரத்திற்கு வழிகோலியிருக்கிறது.

நிகழ்ச்சியில் உரையாற்றும் தேர்தல் ஆணையர் குரேஷி
சச்சாருடன் பொதுச் செயலாளரும், அத்தேஷ்வும்
நீதியரசர் ராஜேந்திர சச்சாருடன்
மாநாட்டில் பொதுச் செயலாளர்

திங்கள், 20 பிப்ரவரி, 2012

பிப்ரவரி 21, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் சமய நல்லிணக்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி

 திருச்சி : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பெரும்புலவர் டாக்டர் சி. நயினார் முகம்மது சமய நல்லிணக்க அறக்கட்டளைச் சொற்பொழிவு 21.02.2012 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கல்லூரிக் கலையரங்கில் நடைபெற இருக்கிறது.
முதல்வர் முனைவர் ஆர். காதர் மொய்தீன் தலைமை வகிக்கிறார். செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.கே. காஜா நஜிமுதீன் மற்றும் பொருளாளர் கே.ஏ. கலீல் அகமது ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பேரா. முனைவர் அப்துல்லா ( பெரியார்தாசன் ) சிறப்புரையாற்றுகிறார்.


நெய்வேலி டவுன்ஷிபில் தப்லீக் இஜ்திமா பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிபில் பிப்ரவரி 18 ,19 . தேதிகளில் மாபெரும் தப்லீக் இஜ்திமா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

ரஷியாவில் உலகிலேயே மிகப் பெரிய குர்ஆன்

மாஸ்கோ, பிப். 19-

உலகிலேயே மிகப்பெரிய குர்ஆன் ரஷியாவில் கஷான் நகரில் உள்ள குவாயிஸ் ஹாரிப் மசூதியில் உள்ளது. இது ஸ்காட்லாந்து பேப்பரில் அச்சிடப்பட்டுள்ளது.

150 செ.மீட்டர் நீளமும், 200 செ.மீட்டர் அகலமும் உடைய இந்த குர்ஆன் 632 பக்கங் களை கொண்டது. இது 800 கிலோ எடை உடையது. இந்த குர்ஆன் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கடார்ஸ்டான் மாகாண கவுன்சிலர் மின்டி டன் ஷாய் மெயேவ் தெரிவித்துள்ளார்.

பி‌எஸ்‌என்‌எல் (BSNL) வழங்கும் வேலைவாய்ப்பு பயிற்சி!


இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்களை செல்போன் சர்வீஸ் இன்ஜினியரிங்ளாக மாற்றி அவர்களுக்கு வேலைவாய்ப்பும் தொழில் வாய்ப்பும் அளித்து வரும் ஐ‌எல்‌எஸ் பயிற்சி மையம் தற்போது நாட்டின் மிகப் பெரிய அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி‌எஸ்‌என்‌எல் உடன் கூட்டிணைந்து செல்போன் இன்ஜினியரிங் பயிற்சியை வழங்குகிறது.

ஜி‌எஸ்‌எம் மொபைல் ஆர் எஃப் இன்ஜினியரிங் என்ற பி‌எஸ்‌என்‌எல் சான்றளிக்கப்படும் இந்தப் பயிற்சி சென்னை இல் இயங்கும் பி‌எஸ்‌என்‌எல் டெலிகாம் பயிற்சி மையத்தில் அளிக்கப் படுகிறது.

ஐந்து வாரங்கள் நடக்கும் இந்த பயிற்சியில் முதல் நான்கு வாரங்கள் புத்தக வடிவ பயிற்சி மற்றும் சென்னை பி‌எஸ்‌என்‌எல் பயிற்சி மையத்தில் நேரடி செயல்முறை பயிற்சி ஆகியவை நடத்தப்படும்.

கடைசி வாரம் தமிழ்நாடு தொலைத்தொடர்பு மண்டலத்தின் மாவட்ட தலைமையகத்தில் செயல்முறை பயிற்சி அளிக்கப் படும்.இந்த ஜி‌எஸ்‌எம்
மொபைல் ஆர் எஃப் இஞ்சீனியர் பயிற்சியானது தற்போதுள்ள தொலைத்தொடர்பு துறையின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.பயிற்சியை முடிக்கும் மாணவர் மிக எளிதாக ஒயர்லெஸ் நெட்வொர்க் யை திட்டமிடுதல் நிறுவுதல் இயக்குதல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய பணிகளை மிக எளிதாக மேற் கொள்ளலாம்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இயங்கும் இந்தப் பிரிவுகளில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பும் பெறலாம்.இந்தப் பிரிவுகளில் பணியாற்ற சரியான நிபுணர்கள் இல்லாமல் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திண்டாடுவது குறிபிடத்தக்கது.
இப்பயிற்சியில் பொறியியல் இ‌சி‌இ சி‌எஸ்‌இ ஐ‌டி எம்‌எஸ்‌சி எம்‌சி‌ஏ டிப்ளோமா இ‌சி‌இ சி‌எஸ் ஐ‌டி மாணவர்கள் அல்லது தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றுபவர்கள் சேர்ந்து பலன் பெறலாம்.தொலைதூர மானவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணங்களில் தங்கும் வசதியும் செய்து தரப்படுகிறது.

இப்பயிற்சிக்கான சேர்க்கை நடைமுறைகளை மற்றும் கட்டணங்கள் வசூலிப்பிற்காக ஐ‌எல்‌எஸ் பயிற்சி மையத்தை அதிகாரப் பூர்வமாக நியமித்துள்ளது பி‌எஸ்‌என்‌எல்.

சேர்க்கை மற்றும் மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 

ஐ‌எல்‌எஸ்
எண் 224,என்‌எஸ்‌சி போஸ் சாலை,
பாரிமுனை,
சென்னை-600001.
(உயர்நீதி மன்றம் எதிரில்),
தொலைபேசி-9444002994.
நன்றி : mpmpages

சனி, 18 பிப்ரவரி, 2012

வேலையில்லாத சிறுபான்மையினர்களுக்கு இலவச திறன்வளர்ப்பு பயிற்சி தஞ்சை கலெக்டர் தகவல்.


சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தினர் மூலம் தமிழக அரசின் நிதி உதவியோடு தமிழ்நாடு அரசு சாலை போக்குவரத்து நிறுவனம் சார்பில் இலகுரக மற்றும் கனரக ஓட்டுனர் பயிற்சி வகுப்பு நடத்தப்படஉள்ளன. சென்னை தரமணி சாலைபோக்குவரத்து நிறுவனம், திருச்சி சாலைபோக்குவரத்து நிறுவன ஓட்டுனர் பயிற்சி பள்ளி ஆகியவற்றில் இலகுரக வாகன ஓட்டுனர் பயிற்சி மற்றும் நேர்காணல் நடக்கிறது.
 
 
விழுப்புரம், வேலூர் திருச்சி, புதுக்கோட்டை, கும்பகோணம், காரைக்குடி, சேலம், தருமபுரி, ஈரோடு, பொள்ளாச்சி, மதுரை,திருநெல்வேலி, நாகர்கோவில், திண்டுக்கல், விருதுநகர், கும்முடிபூண்டி ஆகிய ஊர்களில் கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி மற்றும் நேர்காணல் வருகிற 23  ம் தேதி மேற்கண்ட பயிற்சி மையங்களில் நடக்கிறது.
 
 
குடும்ப ஆண்டு வருமானம் ரூ 1 லட்சத்திற்கு மிகாமலும், 1 .1 .2012  அன்று 20 வயது நிறைவு பெற்ற இஸ்லாமிய,கிருஸ்தவ,சீக்கிய, புத்த மற்றும் பார்சிய மதத்தை சேர்ந்த சிறுபான்மையினர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
 
 
இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம்.  தஞ்சை மாவட்ட சிறுபான்மையின மக்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன் பெற வேண்டும் என்று தஞ்சை கலக்டர் பாஸ்கரன் தெரிவித்து உள்ளார்.

டெல்லி,மும்பை வாழ்க்கை செலவுகள் குறைவான நகரங்கள்!


புதுடெல்லி:பொருளாதார,ஆட்சி மையங்களாக திகழும் இந்திய நகரங்களான மும்பை, டெல்லி ஆகியன உலகில் வாழ்க்கை செலவுகள் குறைவான நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
எக்னாமிக்ஸ் இண்டலிஜன்ஸ் யூனிட் உலகமுழுவதும் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. மும்பை 2-வது இடத்தையும், புதுடெல்லி 4-வது இடத்தையும் பிடித்துள்ளன. கராச்சி முதல் இடத்தை வகிக்கிறது. ஈரானின் தலைநகரான டெஹ்ரான் முதல் நான்கில் இடம் பிடித்துள்ளது. இவற்றைத் தவிர மஸ்கட், டாக்கா, அல்ஜீர்ஸ், காட்மாண்டு, பனாமா சிட்டி, ஜித்தா ஆகிய நகரங்களும் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஸூரிச் வாழ்க்கை செலவு கூடிய நகரங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. டோக்கியோ, ஜெனீவா, ஒஸாகா கோபே, ஆஸ்லோ, பாரிஸ், சிட்னி, மெல்பர்ன், சிங்கப்பூர், ப்ராங்க்ஃப்ர்ட் ஆகிய நகரங்களும் செலவு கூடிய நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
உணவு, குடிநீர், ஆடை, வீட்டு வாடகை, போக்குவரத்து, கல்வி ஆகியவற்றை அளவுகோல்களாக வைத்து இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. விலை குறைப்பு நடவடிக்கைகள் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளின் நகரங்களில் வாழ்க்கை செலவு குறைந்துள்ளதாக சர்வே கூறுகிறது.

ஹஜ் கொள்கை:மத்திய அரசிடம் விளக்கம் கேட்கும் உச்சநீதிமன்றம்!


புதுடெல்லி:ஹஜ் மானியம், அரசு பிரதிநிதிகள் குழு, தனியார் ஆபரேட்டர்களுக்கான ஒதுக்கீடு ஆகிய விவகாரங்களில் கொள்கையை விளக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக வருகிற 24-ஆம் தேதி அட்டர்னி ஜெனரல் நேரடியாக ஆஜராகவேண்டும் என்று நீதிபதிகளான அஃப்தாப் ஆலம், ரஞ்சனா பிரசாத் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு புதிய கொள்கையை உருவாக்க வேண்டும். பிரதிநிதிக் குழுவை ஹஜ் கிரியைகளின் ஒரு பகுதியா? அது தேவைதானா? இது எப்பொழுது துவங்கியது?எவ்வளவு உறுப்பினர்கள் பிரதிநிதிக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்?அரசு ஒதுக்கீடு எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது? எந்த சூழலில் ஹஜ் மானியம் வழங்கப்படுகிறது? தனியார் டூர் ஆபரேட்டர்கள் புனித பயணிகளை மோசடி செய்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்துள்ள சூழலில் அதனை தொடரவேண்டுமா? எந்த அளவுகோலை உபயோகித்து ஹஜ் புனித பயணிகளை ஹஜ் கமிட்டி தேர்வுச் செய்கிறது? ஆகிய விஷயங்களில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 40 ஹஜ் தனியார் ஆபரேட்டர்கள் மத்திய அரசின் ஹஜ் கொள்கை காரணமாக தாங்கள் நிராகரிக்கப்பட்டதா சுட்டிக்காட்டி மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகியதை தொடர்ந்து இவ்வழக்கு துவங்கியது. மத்திய அரசிடம் மீதமுள்ள 800 இடங்களை மனுதாரர்களுக்கும், தகுதியில்லாதவர்கள் என நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் அளிக்கவேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. உச்சநீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதித்தது. ஆனால், அடுத்த ஆண்டு முதல் ஹஜ் கொள்கையை பரிசோதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

மாணவர்கள்,பெற்றோர்களுக்கு நேர்காணல்-பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை!

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின்போது, மாணவர்களுக்கோ,பெற்றோர்களுக்கோ, நேர்காணல் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என  பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது, அதன்படி விதிகளை மீறிபவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் என்பது குறித்தும் வெளியிட்டுள்ளது,
அதன்படி, மாணவர்கள் சேர்க்கைக்காக பெற்றோருக்கோ, குழந்தைகளுக்கோ தேர்வு எதையும் நடத்தக் கூடாது. இந்த விதியை மீறினால் பள்ளிகளுக்கு முதலில் ரூ. 25 ஆயிரமும், அதன்பிறகு இந்தத் தவறு நடைபெற்றால் ஒவ்வொரு முறையும் ரூ. 50 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்படும்.
மேலும் அந்தந்த கல்வியாண்டு துவங்கி  6 மாதம் வரை குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கலாம் எனவும் நீட்டிக்கப்பட்ட கால அளவுக்குப் பிறகு சேர்க்கப்படும் குழந்தைக்கு சிறப்புப் பயிற்சி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

பிப் 19-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

கடலூர் மாவட்டத்தில் வரும் 19-ம் தேதியும், ஏப்ரல் 1-ம் தேதியும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன.
ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் வரும் 19 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய நாள்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக மேற்கண்ட நாள்களில், கடலூர் மாவட்டத்தில் 1,613 சிறப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்படும். இந்த முகாம்களில் சுமார் 6,452 களப் பணியாளாளர்கள் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். 5 வயதுக்கு உள்பட்ட 2,46,732 குழந்தைகளுக்கு இம்முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து புகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உள்பட்ட குழந்தைகள் அனைவருக்கும், மேற்கண்ட நாட்களில், ஏற்கனவே போலியோ சொட்டுமருந்து கொடுத்திருந்தாலும், தவறாமல் மீண்டும், சொட்டு மருந்து அளிக்க வேண்டும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மேற்கண்ட நாட்களில் முகாமிற்கு அழைத்து வந்து, சொட்டு மருந்து புகட்ட வேண்டும்.
மேலும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், இந்த நாட்களில் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள, 5 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளின் பெற்றோரிடம், போலியோ சொட்டு மருந்தின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி, அவர்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ள உதவ வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

புதன், 15 பிப்ரவரி, 2012

எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிப்பு: பள்ளி மாணவன் முகம்மது ஹம்தான். சாதனை

குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.



அதுபற்றிய விவரம் வருமாறு:-

தென்காசியை சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர். காதர் முகைதீன், ஷமீமா தம்பதிகளின் மகன் முகம்மது ஹம்தான். இவர் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பலரின் முன்னிலையில் எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்பதை செய்து காண்பித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

நான்கு எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி மற்றும் காப்பர் கம்பியை செருகினார். இதன் பின்னர் காப்பர் கம்பியை தனி வயரிலும், இரும்பு ஆணியை தனி வயரிலும் இணைத்து சிறிய 2 வோல்ட் திறன் கொண்ட சிறிய பல்பினை எரிய வைத்து இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார்.

இந்த கண்டு பிடிப்பு குறித்து மாணவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

"எனது தந்தை காதர் முகைதீன் மெக்கானிக்கல் என்ஜினீயர். அவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்தார். நானும் அங்கு வசித்தேன். நான் அங்குள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தேன். இந்நிலையில் எனது தந்தை நெல்லையில் ஏற்றுமதி-இறக்குமதி கம்பெனி தொடங்கியதால் நாங்கள் தென்காசி வந்துவிட்டோம். நான் பழைய குற்றாலத்தில் உள்ள ஹில்டன் பள்ளியில் சேர்ந்து 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். அறிவியல் பாடத்தில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று படித்தேன்.

அப்போதுதான் புது வழியில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் அதிலிருந்து மின்சாரம் எடுக்க நினைத்தேன். அதன்படி எலுமிச்சம் பழத்தில் இரும்பு மற்றும் செம்பு கம்பிகளை சொருகி அவற்றை மின்கம்பிகளால் இணைத்து பார்த்த போது மின்சாரம் வந்தது. ஒரு எலுமிச்சம்பழத்தில் இருந்த 0.5 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். 4 பழங்களில் இருந்து 2வாட்ஸ் பல்பு எரிகிறது.

மேலும் "எலுமிச்சை, பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என எனக்கு பாடம் நடத்திய ஆசிரியை கூறினார்கள். அதனை நான் செயல்படுத்தி மின்சாரம் கிடைப்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்."

இவ்வாறு மாணவன் முஹம்மது ஹம்தான் கூறினார்.



அதுபற்றிய விவரம் வருமாறு:-
தென்காசியை சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர். காதர் முகைதீன், ஷமீமா தம்பதிகளின் மகன் முகம்மது ஹம்தான். இவர் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பலரின் முன்னிலையில் எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்பதை செய்து காண்பித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
நான்கு எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி மற்றும் காப்பர் கம்பியை செருகினார். இதன் பின்னர் காப்பர் கம்பியை தனி வயரிலும், இரும்பு ஆணியை தனி வயரிலும் இணைத்து சிறிய 2 வோல்ட் திறன் கொண்ட சிறிய பல்பினை எரிய வைத்து இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார்.
இந்த கண்டு பிடிப்பு குறித்து மாணவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
"எனது தந்தை காதர் முகைதீன் மெக்கானிக்கல் என்ஜினீயர். அவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்தார். நானும் அங்கு வசித்தேன். நான் அங்குள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தேன். இந்நிலையில் எனது தந்தை நெல்லையில் ஏற்றுமதி-இறக்குமதி கம்பெனி தொடங்கியதால் நாங்கள் தென்காசி வந்துவிட்டோம். நான் பழைய குற்றாலத்தில் உள்ள ஹில்டன் பள்ளியில் சேர்ந்து 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். அறிவியல் பாடத்தில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று படித்தேன்.
அப்போதுதான் புது வழியில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் அதிலிருந்து மின்சாரம் எடுக்க நினைத்தேன். அதன்படி எலுமிச்சம் பழத்தில் இரும்பு மற்றும் செம்பு கம்பிகளை சொருகி அவற்றை மின்கம்பிகளால் இணைத்து பார்த்த போது மின்சாரம் வந்தது. ஒரு எலுமிச்சம்பழத்தில் இருந்த 0.5 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். 4 பழங்களில் இருந்து 2வாட்ஸ் பல்பு எரிகிறது.
மேலும் "எலுமிச்சை, பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என எனக்கு பாடம் நடத்திய ஆசிரியை கூறினார்கள். அதனை நான் செயல்படுத்தி மின்சாரம் கிடைப்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்."
இவ்வாறு மாணவன் முஹம்மது ஹம்தான் கூறினார்.

இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் வழங்க தயார் – சவூதி மன்னர் அப்துல்லாஹ்


ரியாத்:இந்தியாவுடன் அனைத்து துறைகளிலும் நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்பையும் அதிகரிக்கவும், இந்தியாவுக்கு கூடுதலான கச்சா எண்ணெயை வழங்கவும் சவூதி அரேபியா தாயாராக இருப்பதாக அந்நாட்டின் ஆட்சியாளர் மன்னர் அப்துல்லாஹ் கூறியுள்ளார்.
பாதுகாப்பு துறையில் சவூதி அரேபியாவுடன் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக இரண்டு தினங்கள் சுற்றுப்பயணத்திற்காக சவூதி அரேபியா சென்றுள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மன்னர் அப்துல்லாஹ்வுடன் சந்திப்பை நடத்திய பிறகு அளித்த பேட்டியில் இத்தகவலை கூறினார்.
இந்தியாவுடன் பொருளாதாரம், அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம் ஆகிய முக்கிய துறைகளில் ஒத்துழைப்பையும், நல்லிணக்கத்தையும் அதிகரிக்க சவூதி அரேபியா விரும்புவதாக மன்னர் அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியின் அளவை அதிகரிக்கலாம் என்றும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிக்க மகிழ்ச்சியை தருவதாகவும் அப்துல்லாஹ் கூறியுள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியத்தை எடுத்து கூறிய மன்னரிடம், தீவிரவாதத்தை ஒழிப்பதிலும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதிலும் இரு நாடுகளுக்கும் ஒரே மனோநிலைதான் என்றும், அந்த லட்சியத்தில் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என கூறியபொழுது மன்னர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் என்று அந்தோணி கூறினார்.
இன்று சவூதி பாதுகாப்புத்துறை அமைச்சரும், இளவரசருமான சல்மான் பின் அப்துல் அஸீஸுடன் அந்தோணி பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் 24.5 லட்சம் கோடி – சி.பி.ஐ


புதுடெல்லி:வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பண முதலீட்டில் இந்தியர்கள் முன்னிலையில் இருப்பதாக சி.பி.ஐ இயக்குநர் எ.பி.சிங் கூறியுள்ளார். வரி ஏய்ப்பிற்காக இவர்கள் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ள தொகை கிட்டத்தட்ட 50 ஆயிரம் கோடி டாலர்(24.5லட்சம் கோடி) என்று சிங் கூறினார்.
ஊழலுக்கு எதிராகவும், சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்வதற்குமான இண்டர்போல் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் எ.பி.சிங்.
அவர் கூறியது: கறுப்பு பணத்தை பதுக்கியிருப்பவர்கள் குறித்து தகவல்கள் முழுமையாக கிடைப்பதற்கு கூடுதல் கால அவகாசம் தேவையாகும். கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நாடுகளில் விசாரணை அதிகாரிகள் சட்டரீதியான மனுக்களை அளித்து ஒவ்வொன்றாக வெளிக்கொணர்ந்து வருகின்றனர்.
உலகில் 53 நாடுகளில் குறைந்த அளவிலான ஊழல் நடைபெறுகிறது. இந்நாடுகளில் அதிக அளவிலான கறுப்பு பணம் முதலீடு செய்யப்படுகிறது.
ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தை வகிக்கிறது. சிங்கப்பூர் 5-வது இடத்தையும், சுவிட்சர்லாந்து ஏழாவது இடத்தையும் வகிக்கின்றன. ஆனால், கறுப்புப் பணத்தை ஏற்றுக்கொள்ளும் நாடுகளில் இவர்கள்தாம் முன்னணியில் உள்ளனர்.
கறுப்பு பணத்தை முதலீடாக ஏற்றுக்கொண்ட நாடுகள் முதலீட்டாளர்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை. காரணம், இத்தகைய கறுப்பு பண முதலீடுகள் தங்கள் நாடுகளின் பொருளாதார பாதுகாப்பிற்கு அளிக்கும் நன்கொடையை குறித்து அவர்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள்.
ஊழல் மூலம் சம்பாதித்த இத்தகைய முதலீடுகளை திரும்ப கொண்டுவருதல், முடக்குதல், கண்டுபிடித்தல் ஆகியன சட்டரீதியாக சவால்களை விடுக்கும், சிக்கலான நடைமுறையாகும் என்று எ.பி.சிங் கூறினார்.

கடலூரில் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். 

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

கொள்ளுமேடு கடைதெருவில் த.மு.மு.க நடத்திய தெருமுனை பிரச்சாரம்......






















அஸ்ஸலாமு அலைக்கும் 
        கொள்ளுமேடு நகர தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஒரு சிறப்பான மற்றும் விரைவான முடிவில் உருவான தெருமுனை பிரச்சாரம் 
மக்களின் கூட்டம் மாநாடு போல உருவெடுத்தது.சிறப்பு அழைப்பாளர் கோவை சையது (த.மு.மு.க மாநில செயலாளர்) மற்றும் ஜின்னா (மாநில து.  செயலாளர்) மற்றும் மாவட்ட, கழக நிர்வாகிகளுடன் சிறப்பாக நடந்து முடிந்தது.     ல்ஹம்துலில்லாஹ்.......