AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 31 ஜனவரி, 2012

இஸ்லாமியர்கள் குறித்து துவேஷத்தைத் தூண்டும் வழக்கு.சாமி மன்னிப்பு கடிதம்

"இனிமேல் முஸ்லிம்கள் குறித்து துவேஷமாக எதுவும் எழுத மாட்டேன்" என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தைக் கொடுத்துள்ளார்.
"முன்னர் முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்கவேண்டும்" என்று அவர் எழுதியிருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பிணை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவ்வாறு அவர் எழுதிக்கொடுத்ததால், அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.


"இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு துவேஷக் கருத்துக்களுடன் கூடிய கட்டுரையை  முன்பு சுப்ரமணிய சாமி எழுதியிருந்தார். இதற்கு  இந்திய முஸ்லிம்களிடையே  கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், சு.சாமியின் மதத்துவேஷம் காரணமாக, தனது பல்கலைகழகத்தில் பாடம் எடுப்பதற்கும் ஹார்வர்ட் பல்கலைகழகம் தடை விதித்தது. துவேஷக் கருத்து எழுதியதால் சாமி மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

இவ்வழக்கில் சுப்ரமணிய சாமி பிணை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார்.  நீதிபதி முன்பாக இனிமேல் இதுபோன்ற கட்டுரைகளை எழுத மாட்டேன் என்று சாமி எழுதிக் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்குப் பிணை வழங்கிய நீதிபதி, "கைது செய்யப்பட்டால் ரூ. 25,000 அபராதம் செலுத்தி பிணையில் வெளிவரலாம்" என்று அவருடைய மனுமீது தீர்ப்பு கூறினார்.

திங்கள், 30 ஜனவரி, 2012

புயல் பாதித்த மாவட்டங்களில் ரூ.1000 கோடியில் 1 லட்சம் கான்க்ரீட் வீடுகள்-ஆளுநர்


சென்னை: தானே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ரூ. 1000 கோடி செலவில் 1 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ரோசய்யா தனது உரையில் தெரிவித்தார்.
2012ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம் இன்று தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரை நிகழ்த்தினார்.
கூட்டம் காலை 10 மணிக்குத் தொடங்கியது. இறை வணக்கத்துடன் கூட்டம் தொடங்கியது. முன்னதாக அவைக்கு வந்த ஆளுநர் ரோசய்யாவை, சபாநாயகர் ஜெயக்குமார், முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர். ரோசய்யாவுக்கும் இதுதான் தமிழக சட்டசபையில் ஆற்றவுள்ள முதல் உரையாகும்.
இதையடுத்து ஆளுநர் ரோசய்யா தனது உரையை வாசிக்கத் தொடங்கினார்.
அவர் கூறுகையில், தானே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தமிழக அரசு புயல் நிவாரண நடவடிக்கைகளை துரிதமாகவும், தீவிரமாகவும் மேற்கொண்டு வருகிறது.
அந்த இரு மாவட்டங்களிலும் ஒரு லட்சம் கான்க்ரீட் வீடுகளை அரசு கட்டித் தரும். இந்தத் திட்டம் ரூ. 1000 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
அண்டை மாநிலங்களுடன் தமிழக அரசு நல்லுறவைப் பேணி வருகிறது.
தமிழகத்தில் மாநில அரசு வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாகவும், முனைப்புடனும் செயல்படுத்தி வருகிறது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளை பலப்படுத்துவதிலும் தமிழக அரசு உறுதியுடன் செயல்படுகிறது.
அரசு-தனியார் நிதிக் கொள்கை
முக்கியத் திட்டங்களை செயல்படுத்த உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி ஏற்படுத்தப்படும். மேலும் இவற்றை செயல்படுத்த அரசு-தனியார் நிதி ஆதாரம் ஒருங்கிணைக்கப்படும். மேலும் ஒகருங்கிணைந்த அரசு-தனியார் நிதிக் கொள்கையும் ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தில் விலையில்லாத் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் அரசு தீவிர அக்கறை காட்டுகிறது. அவற்றை உரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்:
- இரண்டாம் பசுமைப் புரட்சி தேவை: விவசாய வேளாண் உற்பத்தியை பெருக்க திட்டம். வரும் ஆண்டில் விவசாய வேளாண் உற்பத்தி 100 லட்சம் டன்னைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு இது 75.95 டன்னாக இருந்தது.
- தமிழகத்தில் அரசு அலுவலங்கள் செயல்படும் பழைமையான, தொன்மையான கட்டடங்களின் உறுதித்தன்மையை உறுதி செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- நிலப்பறிப்பு தொடர்பாக ஏழைகளை மிரட்டிப் பறித்தவர்கள் மீது நடவடிக்கை தொடரும்.
- 12 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 1லட்சத்து 85ஆயிரம் கோடியாக உள்ளது. 11 வது ஐந்தண்டு திட்டத்தில் 85 ஆயிரம் கோடியாக இருந்தது.
- திட்டங்களை வடிவமைக்கும் போது மத்திய அரசு அதனை சுட்டிக் காட்டினால் போதும். மாநிலங்களே அவற்றின் விதிகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்த மாநிலங்களுக்கு சுதந்திரம் தர வேண்டும்.
- மத்திய ஆட்சிமொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். இதற்காக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.
- உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி உள்கட்டமைப்பு திட்டங்களை கண்டறிந்து தனியார் – அரசு கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படும்.
- கிராமப்புற ஏழ்மை போக்கப்பட்டுள்ள நிலையில், நகர்ப் புறங்களில் ஏழ்மையை நீக்குவதற்கு விரிவான திட்டம் உருவாக்கப்படும். வறுமை நிலையை தீர்க்க ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
- வன்பொருள் உற்பத்தியை மேம்படுத்த, முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஆலோசனைக் குழு அமைக்கப்படும். தொழில்துறை மற்றும் அரசுத் துறை இணைந்து இந்த ஆலோசனைக் குழு அமைக்கப்படும்.
- மத்தியத் தொகுப்பில் இருந்து தமிழகம் மின்சாரம் கேட்டதற்கு மத்திய அரசு பாராமுகமாக இருப்பதால் தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- பொறியியல் மருத்துவம் போன்ற உயர்நிலைப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம். எங்கள் மாணவர் நலனுக்கு பாதிப்பு என்பதால் இதனை எதிர்க்கிறோம்.
- பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகளை நீண்டகாலம் தாக்குபிடிக்கும் வலுவான சாலைகளாக, நீடித்த சாலைகளாக அமைக்க விரிவான திட்டம் செயல்படுத்தப்படும்.

அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் பெண்களுக்கான இஸ்லாமிய நிகழ்ச்சி



அல்லாஹ்வின் கிருபையால் அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் பெண்களுக்கான இஸ்லாமிய உள்ளரங்கு நிகழ்ச்சி 27-01-2012 மக்ரிப் தொழுகைக்கு பின்னர் நடைபெற்றது.கத்தாரா கிளை தமுமுக தலைவர் காட்டுமன்னார்குடி சகோதரர் அஸ்கர் அலி தலைமை தாங்கினார்.மண்டல உலமாக்கள் அணி செயலாளர் கொள்ளுமேடு முஹம்மது ரிபாயி திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்த்தினார்.
அமீரக தமுமுக தலைவர் சகோதரர் அதிரை அப்துல் ஹாதி தியாகம் என்ற தலைப்பில்,சஹாபா பெண்மணிகள் தங்களது ஈமானுக்கு கொடுத்த முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.நமது மறுமை வாழ்க்கைக்காக இம்மையில் நாம் தயாரிப்பு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து தனது உரையில் வலியுறுத்தினார்.
இறுதியாக மண்டல பொருளாளர் நாச்சிகுளம் சகோதரர் அசாலி அஹமது நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில் அல் அய்னில் வசிக்கும் தமிழக சகோதரிகள் தங்களது கணவர், குழந்தைகளுடன் பெருமளவு கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

மனிதனின் ஞாபக சக்தியும்!! அதன் எண்ணற்ற சிறப்பு அம்சங்களும்


மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று, அவனது நீளமான, ஆழமான ஞாபகத் திறன்.
ஆனால் ஓர் உண்மை தெரியுமா?
மனித மூளையின் செல்களில் 96 சதவிகிதம், ஞாபக சக்தி தொடர்பான பணிகளில் ஈடுபடுவதில்லை. மனிதன் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4 சதவிகிதத்தைத்தான் பயன்படுத்துகிறான். உலக மக்களில் ஒரு சதவிகிதத்தினரே தங்களின் ஞாபகசக்தியைத் திறமையுடன் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்திருக்கிறது.
அபார ஞாபகத்திறன் கொண்டவர்களும் உள்ளனர். அளப்பரிய உண்மைகளையும், எண்ணிக்கைகளையும் அவர்களால் நினைவில் வைத்திருக்க முடிகிறது.
அதேபோல, கால்குலேட்டர் போல விரைவாகக் கணக்குகளைச் செய்து முடிக்கும் நபர்களும் உள்ளனர். அத்தகையவர்கள் தங்களின் நினைவாற்றல் திறனில் ஏறக்குறைய 50- 60 சதவிகிதத்தையே பயன்படுத்துகின்றனர்.
புலன் அறிவு
பல்வேறு வழிகளில், பல்வேறு புலன்களின் மூலம் நாம் பலவற்றை அறிகிறோம். பார்வை, கேள்வி, சுவை, தொடுபுலன், செயல் ஆகிய பல உணர்வுகளின் மூலம் நமக்கு நினைவு பெறப்படுகிறது. பல்வேறு புலன்களின் மூலம் நமது நினைவுக்குப் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரப்படுகின்றன.
சாதாரணமாக, ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களின் மூலமாகவே நினைவு ஏற்படுகிறது. பெருமளவுச் செய்திகள் பார்வையின் மூலமாகவே பெறப்படுகின்றன.
இதைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும். எனினும், பிற புலன்களையும் நன்கு தூண்டிவிடுவது அவசியமாகும். பல்வேறு புலன்களின் மூலம் பெறப்படும் விவரங்களைத்தான் மனிதனால் நன்கு நினைவு வைத்துக்கொள்ள முடிகிறது. ஒரு முக்கியமான வாசகத்தைப் படித்துப் புரிந்துகொண்ட பின், அதை உரக்க மீண்டும் சொல்வது பயனளிக்கும். அதன்மூலம் கேள்விப் புலனும், செயல் பதிவும் நன்கு வலுப்பெறும்.
பிம்ப நினைவு
கிடைத்த விவரங்களை நினைவில் கொண்டிருப்பதை `பிம்ப நினைவு’ என்று கூறலாம். அந்த விவரங்கள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து, பழையவற்றுக்கும், புதியவற்றுக்கும் தொடர்புகளை நிறுவுவது `தர்க்க நினைவு’ ஆகும்.
அதனால்தான் நாம் சரிவர அறிந்திராதவற்றை விட, நன்கு அறிந்துள்ளவற்றை நினைவில் வைத்திருப்பது எளிதாக உள்ளது. பொருள் புரியும் வார்த்தைகளை நினைவில் கொள்வது, பொருளற்ற சொற்குவியலை நினைவில் வைத்திருப்பதை விட எளிதல்லவா?
உணர்ச்சி நினைவுகள்
உணர்ச்சி நினைவும் மக்களுக்கு உண்டு. அறிவு அல்லது தர்க்க நினைவைக் காட்டிலும் உணர்ச்சி நினைவு வலுவானது. அதனால்தான் சுவையான புத்தகங்களை வாசிப்பது, திரைப்படங்களையும், நாடகங் களையும் காண்பது போன்றவை நம் நினைவை விட்டு அகலாதிருக்கின்றன.
ஆகவே நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றில் சில சுவையான அம்சங்களைக் கண்டுபிடித்தால் அவற்றை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்.

தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில்


இன்று நடைபெற்ற தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு......
தமுமுக மற்றும் மமக மாநில தலைவராக
மௌலவி JS. ரிபாயி
JS Rifaai

தமுமுக மாநில பொதுச்செயலாளராக
P. அப்துல் சமது
Abdul samad

தமுமுக மற்றும் மமக மாநில பொருளாளராக
O.U. ரஹ்மத்துல்லாஹ்
OU Rahmathullah

மமக மாநில பொதுச்செயலாளராக
M. தமிமுன் அன்சாரி


Thamimun Ansari

ஆகியோர் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.....

தமுமுக-மமக வின் மாநில பொதுக்குழு

 பொதுக்குழு புகைப்படங்கள்:









 பொதுக்குழு புகைப்படங்கள்:









தமுமுக-மமக வின் மாநில செயற்குழு நேற்று நடைபெற்று முடிந்ததை அடுத்து, இன்று காலை தாம்பரம் அருகே உள்ள மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் தொடங்கியதமுமுக- மமக வின் பொதுக்குழு பேரா. டாக்டர் M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் அறிமுக உரையை தொடர்ந்து, தமுமுகவின் பொதுசெயலாளர், சகோ. செ. ஹைதர் அலி அவர்களின் உரையோடு நடைபெற்றது.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

10 மற்றும் 12ஆம் படிக்கும் மாணவர்களுக்கு போட்டோவுடன் (Photo) மதிப்பெண் சான்றிதழ் தயாராகிறது!


பிளஸ் 2 மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்று தயாராகி வருகிறது. இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில், 7.5 லட்சம் பேரும், பத்தாம் வகுப்பு தேர்வில் 11 லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி 2ம் வாரத்தில் பிராக்டிக்கல் தேர்வு நடக்க உள்ளதால், அவர்களுக்கு பதிவு எண்கள் விரைவில் வழங்கப்பட உள்ளது. இம்மாத இறுதியில் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு பதிவெண்கள் வழங்கப்படும்.
இந்த ஆண்டு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதனால், மாணவர்களின் போட்டோ, சான்றிதழில் பதிவு செய்யப்பட்டு, பதிவெண்கள் பதிவு செய்யும் பணிகள் இரவு பகலாக நடக்கிறது.
கிண்டியில் உள்ள டேட்டா சென்டரில் தினமும் ரூ.200 சம்பளத்தில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சமச்சீர் கல்வி அமலாக்கப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த ஆண்டு, அறிவியல் பாடத்திற்கு பிராக்டிக்கல் தேர்வு நடக்க உள்ளது. இதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளே நடத்திக் கொள்ள அதிகாரமளித்துள்ளனர்.

இன்று கூடியது மாநில செயற்குழு


தமுமுக- மமக வின் மாநில நிர்வாகக்குழு இன்று காலை 10 மணிக்கு தாம்பரத்தில் நடைபெற்றது. தொடர்ந்து 11 மணி அளவில் தலைமை செயற்குழு தொடங்கியது. இந்த செயற்குழுவில் தமிழகம் முழுவதும் உள்ள தமுமுக - மமக மாவட்ட நிர்வாகிகளும், மாநில செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, நாளை மேடவாக்கத்தில் தமுமுக-மமக வின் மாநில பொதுக்குழு நடைபெற உள்ளது (இன்ஷா அல்லாஹ்).


செயற்குழு புகைப்பட காட்சிகள்
மாநில செயற்குழு










62 வது குடியரசு தினத்தை முன்னிட்டு 8 பகுதிகளில் மருத்துவ மற்றும் இரத்த தான முகாம்


62 வது குடியரசு தினத்தை முன்னிட்டு வட சென்னை சார்பாக 8 பகுதிகளில் மருத்துவ மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மாநில பொதுசெயலாளர் செ. ஹைதர் அலி, மாநில செயலாளர் P.S. ஹமீது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


R.K. நகர தமுமுக சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்




இராயபுரம் பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாம்



துறைமுகம் பகுதியில் நடைபெற்ற கண் சிகிச்சை மற்றும் தைராய்டு முகாம்.



பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாம்




குளத்தூர் பகுதியில் நடைபெற்ற மகளிர் பொது மருத்துவ முகாம்.




திருவிக நகர் பகுதியில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாம்.



எழும்பூர் பகுதியில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாம்



வில்லிவாக்கம் பகுதியில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாம்