AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 31 மே, 2012

லால்பேட்டையில் இ.யூ.முஸ்லிம்லீக் சார்பில் ஆம்புலன்ஸ்



லால்பேட்டையில் இ.யூ.முஸ்லிம் லீக் ஆம்புலன்ஸ் இன்ஷா அல்லாஹ் விரைவில்..அர்ப்பணிப்பு விழா…

வியாழன், 24 மே, 2012

புனித ஹஜ் பயணத்திற்கு திருச்சியி​லிருந்தும் விமானம் ஹஜ் மாநாட்டில் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி கோரிக்கை


மானியம் என்ற பெயரால் புனித ஹஜ் பயணத்திற்கு வழங்கப் படும் விமான கட்டண சலுகை ஆயுளில் ஒரு முறை வழங்கப்பட வேண்டும் என்றும், புனித ஹஜ் பயணத்திற்கு திருச்சியிலிருந்து விமான இயக்கப்பட வேண்டும் என்றும் காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய ஹஜ் குழுவின் சார் பில் ஹஜ் தொடர்பான மாநாடு டெல்லி- வித்தியான் பவனில் மே 22 செவ்வாய் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெற்றது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஹஜ் குழு தலைவர், முஹ்சினா கித்வாய் துணைத்தலைவர் அபூபக்கர், இந்தியாவிற்கான சவூதி அரேபியா தூதர் அலி ஆசிப் ராவ், மும்பை ஹஜ் கமிட்டி-முதன்மை நிர்வாக அலுவலர் ஜாகிர் உசேன், தமிழக ஹஜ் கமிட்டி செயலாளர் அலாவுதீன் ஐ.ஏ.எஸ்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில பொதுச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி,.காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஹஜ் குழு உறுப்பினர் கள், அலுவலர்கள், உலமா பெரு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் எம்.அப்துர் ரஹ்மான் பேசியதாவது:
ஹஜ் மானியம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித் ததற்கு பின் இந்த கலந்த ஆலோசனை மாநாடு நடைபெரு கிறது. புனித ஹஜ் பயணத்திற்கு வழங்கப்படுவது மானியம் அல்ல, அது விமான கட்டண சலுகை அது தொடர்ந்து நீடிக்க வேண்டும்.
இதில் மத்திய அரசு உறுதி யாக இருக்க வேண்டும் இந்த சலுகை ஆயுளில் ஒரு முறையே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
தனியார் ஹஜ் பயண ஏற் பாட்டாளர்கள் சிலர் முறைகேடு களில் ஈடுபடுவதால் புனித ஹஜ் பயணிகள் பலர் ஏமாற்றப் படுவதாக கடந்த ஆண்டில் தகவல் வந்தன. புனித பயணத் திற்கு எண்ணம் கொண்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டு உற்றார் உறவினர் களிடம் சொல்லிவிட்டு நூற் றுக்கணக்கான மையில் பயணம் செய்து வந்த பின் சவூதி செல்ல வேண்டிய நேரத்தில் உங்களுக்கு அனுமதி கிடைக்க வில்லை என்று அவர்களிடம் சொன்னால் மன நிலை எப்படி இருக்கும். ஊருக்கு கூட திரும்பி செல்ல முடியாமல் வெட்கப்பட்டு வேதனைப்பட்டது கடந்த காலத்தில் நடைபெற்றது.
இதனை தடுப்பதற்கு பிரத் யோக ஏற்பாடு செய்ய வேண்டும் இதற்காக படிவங்கள் அச்சிடப் பட்டு பெயர்,பாஸ்போட் எண் உள்ளிட்ட தகவலோடு 50 அல் லது 100 என தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளருக்கு வழங்கி அதைவிட அதிகபடி யான எண்ணிக்கை அவர்கள் பெறாமல் இருப்பதற்கும் பெறப் பட்ட படிவங்களை தவறாக பயன்படுத்த இருப்பதற்கும் இதன் மூலம் உறுதி செய்யப் படும். திருச்சியிலிருந்து விமானம்
புனித ஹஜ் பயணத்திற்கு தமிழ் நாட்டில் சென்னையிலி ருந்து மட்டுமே விமானம் இயக் கப்படுகிறது. தென் மாவட்டங் களிலிருந்து அதிக எண்ணிக் கையில் ஹஜ் பயணிகள் பய ணிப்பதை கருத்தில் கொண்டு திருச்சியில் இருந்தும் விமானம் இயக்கப்படவேண்டும் அதன் மூலம் தென் மாவட்ட மக்கள் மிகுந்த பயன் அடைவார்கள்.
ஹஜ் நல்லெண்ண தூதுக் குழு தொடர்ந்து அனுப்பப் படவேண்டும். அதில் இடம் பெறக்கூடியவர்களை சரியான முறையில் தேர்வு செய்ய வேண் டும்.
இந்த தூதுக்குழுவின் நோக் கம் நமது நாட்டின் நன்றி விசு வாசம் அத்துடன் சவூதி அர சுக்கு வாழ்த்துக்களை தெரி விப்பதோடு ஹஜ்ஜுக்கு இந்தி யாவில் இருந்து செல்பவர் களின் பிரச்சனை தெரிந்து அதனை தீர்த்து வைக்க கூடியதும் ஆகும்.
எனவே நல்லெண்ண குழு தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும் புதிய வழிகாட்டின் நெறிமுறை களை அரசு வகுக்க வேண்டும்.
இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.குறிப்பிட்டார்..

கொள்ளுமேடில் விசமிகள் அட்டுழியம்


அன்பார்ந்த கொள்ளுமேடு நண்பர்களே அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ் ) நமதூரில் சில  நாட்களாக விசமிகளின் அராஜகம்,அட்டுழியம் எல்லை கடந்து செல்கிறது. இரவு நேரத்தில் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட மது அருந்துவது ,வேசிகளை வரவைத்து கும்மாளம் அடிப்பதும் இவர்களுடைய அட்டுழியம் எல்லையில்லாமல் செல்கிறது.இன்றுஇரவு மளிகையில் 200 லிட்டர் எண்ணெய் பாரலை தரையில் சாய்த்து நாசமாக்கி இருக்கிறார்கள் சில தினங்களாக இந்த கயவர்கள் கோழைத்தனமான செயல்களில் ஈடுப்படுகிரார்கள். இதைக்கொண்டு நாசகார கும்பல் சந்தோசம் அடையலாம் ஆனால் அநீதி இழைக்கப்பட்டவரின் சாபத்திலிருந்து ஒருபோதும் அவர்கள் மீல முடியாது, இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கு இதைவிட மிக பெரிய இழப்பை அல்லாஹ் ஏற்ப்படுத்துவான்الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ“அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”. 23:28

புதன், 23 மே, 2012

ஹஜ்:சவூதி ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸிற்கு அனுமதி!

இவ்வாண்டு புனித ஹஜ் பயணத்திற்கான சர்வீஸ்களை நடத்த சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஹஜ் பயண சர்வீஸ் நடத்துவதில் இருந்து ஏர் இந்தியா முற்றிலும் வாபஸ் பெற்றுள்ளது. மேலும் கடந்த ஹஜ் சர்வீஸ் நடத்திய நாஸ் ஏர் நிறுவனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த ஹஜ் கமிட்டி கூட்டத்தில் இதுத்தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. சவூதி அரேபியாவும், இந்தியாவும் பல ஆண்டுகளாக சமமான அளவில் ஹஜ் சர்வீஸ்களை நடத்தி வருகின்றன. ஏர் இந்தியாவும், சவூதி ஏர்லைன்சும் விமான சேவைகளை கவனித்துக் கொண்டன. ஆனால், இவ்வாண்டு ஏர் இந்தியா பூரணமாக விமான போக்குவரத்து சேவை மற்றும் க்ரவுண்ட் ஹேண்ட்லிங் பணிகள் ஆகியவற்றில் இருந்து விலகிவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஹஜ் சர்வீஸிற்கு அனுமதி வழங்கப்பட்ட சவூதி தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான நாஸ் ஏர், இவ்வாண்டிற்கான பயணத்திற்கான விலைப்புள்ளி 
அதிகம் அளித்ததால் அந்நிறுவனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 விமானக் கட்டணத்தை பிற விமானப் போக்குவரத்து நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான விலைப்புள்ளி அளித்த ஜெட் ஏர்வேஸிற்கு அனுமதி வழங்கப்பட்டது. 30 சதவீத ஹஜ் விமான சர்வீஸ்களை ஜெட் ஏர்வேஸும், மீதமுள்ளவற்றை சவூதி ஏர்லைன்சும் நடத்தும்

பிளஸ் 2வில் 6 பாடத்தில் பெயிலானாலும் உடனடி தேர்வு

திண்டுக்கல்: பிளஸ் 2 தேர்வில் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்தால் மட்டுமே சிறப்பு உடனடி தேர்வு எழுத முடியும் என்ற நிலை இந்த ஆண்டு முதல் மாற்றப்பட்டுள்ளது. அனைத்துப் பாடங்களிலும் பெயிலாகி இருந்தாலும், தேர்வு எழுதாதவர்களும் இந்த ஆண்டு  சிறப்பு உடனடி தேர்வை எழுதலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வுகள் நேற்று வெளியாகின. இதில் தோல்வியடைந்தவர்கள் சிறப்பு உடனடித் தேர்வு எழுதி தங்கள் கல்வியைத் தொடரலாம் என்ற நடைமுறை சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. 

இதற்காக 2 பாடங்களில் தவறியவர்கள் உடனடித் தேர்வு எழுதி அந்த ஆண்டிலேயே கல்லூரி செல்ல வழிவகை செய்யப்பட்டது. பின்பு 3 பாடங்கள் தோல்வியடைந்தவர்கள் உடனடித் தேர்வு எழுதலாம் என்ற நடைமுறை மாற்றப்பட்டது. தற்போது இந்த விதிமுறையை மேலும் தளர்த்தி, அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்தவர்களும், தேர்வே எழுதாதவர்களும் அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் எழுதலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குனர்(மேல்நிலை) ஆரோக்கியசாமி அறிவித்துள்ளார்.

தோல்வியடைந்த பள்ளி மாணவர்கள் எஸ்.எச். எனக் குறிப்பிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து பெற்று விண்ணப்பிக்க வேண்டும். வரும் 28ம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்து பயின்ற பள்ளியிலேயே சமர்ப்பிக்க வேண்டும். இவற்றை சரிபார்த்து புகைப்படத்தில் தலைமையாசிரியரின் சான்றொப்பமிட வேண்டும். மிக முக்கியமாக மார்ச் 2012 மேல்நிலைத் தேர்விற்கு மாணவருக்கு வழங்கப்பட்ட பதிவெண்ணை விண்ணப்பத்தின் முதல்பக்கத்தின் மேல் அதற்கு உரிய கட்டங்களில் பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பங்களுடன் தேர்வுக்கட்டணத்தையும் பணமாக பெற்றுக் கொள்ளலாம். கட்டண விவரம்: ஒரு பாடத்திற்கு ரூ.85, இரண்டு பாடங்களுக்கு ரூ.135, மூன்றுபாடங்களுக்கு ரூ.185, நான்கு பாடங்களுக்கு ரூ.235, ஐந்து பாடங்களுக்கு ரூ.285, ஆறுபாடங்களுக்கு ரூ.335. தேர்வுகள் வரும் ஜூன், ஜூலையில் நடைபெறும். தேர்வு எழுதுவதற்கான அனுமதிச்சான்று பள்ளி மூலமாக தேர்வு தொடங்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 12 மே, 2012

k.முஹம்மது அனஸ் - முபீனா பர்வீன் திருமணம் & k.இம்தியாஸ் - ஆயிஷா பர்வீன் திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
அன்புடன்:  V.அஹமது B.com., M.Z.சல்மான் B.sc., வாழ்த்துக்களுடன்..  கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்..


வெள்ளி, 11 மே, 2012

செவ்வாய், 8 மே, 2012

கொள்ளுமேடு பொது மக்களுக்கு ஓர் நர்செய்தி


கொள்ளுமேடு அல் அமான் நர்சரி&பிரமேரி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைப்பெற்று வருவதை தங்கள் அறிவீர்கள். அல்லாவின் மாபெரும் கிருபையால் இன்று அல் அமான் பள்ளிக்கு தமிழ் நாடு அரசு ஒப்புதல் கிடைத்துயிருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ் 
என்பதை பள்ளியின் தாளாலர் அமானுல்லாஹ் பொது மக்களுக்கு  மகிழ்ச்சிவுடன் தெரிவித்தார். மேலும் தங்களின் ஆதரவும் பள்ளியின் வளர்ச்சிக்கு தாங்கள் அனைவரும் இறைவனிடம் பிராத்தனை செய்யுமாறு 

  • கொள்ளுமேடு டைம்ஸ்

    இணைய தளத்தின் முலம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.    AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU

    APPROVED BY TAMILNADU GOVERNMENT
    REG NO: 03/165/2012
     


 
 

திங்கள், 7 மே, 2012

ஜூன் 6ல் வெள்ளி கிரகம் வெறும் கண்ணால் பார்க்க கூடாது : விஞ்ஞானிகள் எச்சரிக்கை

புதுக்கோட்டை: வரும் ஜூன் 6ஆம் தேதி வெள்ளி கிரகம், சூரிய தட்டு வழியே கடக்கும் அபூர்வ நிகழ்வு நடக்கிறது. அப்போது யாரும் வெறும் கண்ணால் சூரியனை பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளி கோளானது சூரிய தட்டின் வழியே ஒரு புள்ளி போன்று நகர்ந்து செல்லும் வெள்ளி இடைநகர்தல் நிகழ்வு வரும் ஜூன் 6ம் தேதி வானில் நிகழ்கிறது. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி பார்த்தசாரதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரப்புதலுக்கான தேசியக்குழுவின் உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியது: ஜூன் 6ஆம் தேதி வெள்ளி கோள் சூரிய தட்டு வழியே ஒரு புள்ளி போன்று கடந்து செல்கிறது. இதனை இந்திய நேரப்படி காலை 5.30 மணி முதல் 10 மணி வரை தொலைநோக்கிகள் மூலம் காணலாம். இது ஒரு அற்புத நிகழ்வு.  வெறும் கண்ணால் பார்க்க கூடாது. பாதுகாப்பான முறையில் இந்த அரிய நிகழ்வை அனைவரும் காண வேண்டும்.  இதுபோல் 1641ஆம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை 7 முறை மட்டுமே தெரிந்துள்ளது. இதன் பிறகு டிச.2017ல் தான் இது நிகழும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெள்ளிக்கோளின் இடை நகர்வு நிகழ்வை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொலைநோக்கி மூலமாக பார்க்க ஏற்பாடு செய்து வருகிறது என்று கூறியுள்ளனர் விஞ்ஞானிகள்.

செவ்வாய், 1 மே, 2012

ஆயுளை அதிகரிக்கும் அம்சமான உணவுகள்!

நாம் உண்ணும் உணவுதான் நம் ஆயுளை தீர்மானிக்கிறது. கொழுப்பு சத்துள்ள உணவுகள்தான் ரத்தநாளங்களில் படிந்து இதயத்தை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் காரணமாகிறது. இதயத்திற்கு இதம் தரும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியத்தோடு ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

ஆயுள் அதிகரிக்கும் தயிர்

தயிர் அதிசயம் மிக்க உயிருள்ள உணவு. தயிரின் மகத்துவம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே 3000 வருடங்களுக்கு முன்பே மொஹஞ்சோதாரே ஹரப்பா நகரத்தில் தெரிந்துள்ளது. அமெரிக்காவில் ஜலர்ஜியா மாகாணத்தில் மட்டும் அதிகம் பேர் 100 வயதிற்கு மேல் வாழ்வதை ஆராய்ந்தபோது அவர்கள் அதிகம் உணவில் தயிர் சேர்த்துக் கொள்கின்றனர் என தெரிய வந்தது.

தயிரில் லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை நம் வயிற்றில் தீய கிருமிகள் வராமல் தடுக்கிறது. நமது கிராம மக்கள் கூறுவது போல் "ரத்தம் செத்துப்போகாமல்'' செய்து தயிரின் ஸ்பெஷல் ஆக்சன் குடல் சுழற்சி, குடல் புண், பெருங்குடல் புற்றுநோய் வராமல் தயிர் காப்பாற்றும்.

தயிரிலுள்ள கால்சியம் எலும்புகள் தேயாமல் காப்பாற்றுகிறது. எலும்பில் உள்ள மஜ்ஜையில் அதிக அளவில் செல் உருவாக தயிர் உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. மலச்சிக்கல் இல்லாமல் வாழ ரத்தக்கசிவை தடுக்கும் விட்டமின் கே உருவாக உதவும். வழி வகுக்கிறது. இது பி. காம்ப்ளக்ஸ் வைட்டமின் குறைபாட்டை தவிர்க்கிறது. வயிற்றில் அதிக வாயு ஏற்படுவதை தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. தோலை மினு மினுப்பாக வைக்கிறது.

இதயத்தை சீராக்கும் மீன்

மீன் மனிதனின் ஆயுள் மற்றும் அறிவை வளர்க்கும் திறன் கொண்டது. 30 வருடங்கள் முன்பு அலாஸ்காவில் மற்றும் பின்லாந்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு இதயநோய் வராமலே இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டு ஆராயும்போது அவர்கள் தினமும் அதிக அளவு மீன் சாப்பிடுவதுதான் காரணம் எனத் தெரிந்தது.

மீனிலிருந்து ஒமேகா-3 என்ற செறிவற்ற கொழுப்பு கிடைப்பதால் அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. இருதய துடிப்பை சீராக வைக்கும். திறமை மீனுக்கு உண்டு.

இதயத்திற்கு ஏற்ற சாக்லேட்

பனாமா நாட்டைச் சேர்ந்த சன்ப்ளாஸ் தீவில் வாழும் மக்களுக்கு உள்நாட்டு பகுதியில் வாழ்வோரைக் காட்டிலும் 6 மடங்கு குறைவாகவே இதயநோய் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் தண்ணீர் சாப்பிடுவது போல அவர்கள் எக்கச்சக்கமாக தினம் கோகோ பானம் அருந்துவது தான். இதிலுள்ள இசபிளரனாய்ட்ஸ் என்ற பொருள். ரத்தக்குழாய்களை இளமையாக வைக்கிறது. இதனால் அவர்களின் உடலில் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி மடை திறந்த வெள்ளம் போல் உடலின் பல பாகங்களுக்கும் பாய்வதால் அவர்களிடம் ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு சர்க்கரை நோய் மூளைச்சிதைவு நோய் எட்டியும் பார்ப்பதில்லை. ஆனால் டார்க் சாக்லேட்தான் சாப்பிடவேண்டும். மில்க் சாக்லேட்டில் செறிவு கொழுப்பு இருப்பதால் அதனால் இதுபோன்ற நன்மைகள் கிடைக்காது.

கருப்பு திராட்சை சத்துக்கள்

கருப்பு திராட்சையில் உள்ள சத்துக்கள் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் உடலை ஆரோக்கியமாக வைக்கும். ஞாபகசக்தியை வளர்க்கும். தினம் தினம் கறுப்பு திராட்சை சாப்பிட்டால், தலைமுடி நரைக்காமல், இரும்பு போன்ற இதயத்துடன் வாழலாம். அதேபோல் பாதாம், முந்திரி, காரைப் பருப்பு, வால்நட் ஆகியவற்றில் செறிவற்ற கொழுப்பு உள்ளதால் அவை இதயத்தை பாதுகாக்கும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

அமெரிக்காவை விட ஒகினாவா என்ற ஜப்பானிய தீவில் 100 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 மடங்கு அதிகம். இதற்கு சர்க்கரை வள்ளிக்கிழங்குதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. ஆலிவ் எண்ணெய் அளவிற்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு உடலை ஆரோக்கியமாக வைக்கின்றன. இவற்றில் வைட்டமின் தாதுப்பொருட்கள் மற்றும் அபூர்வமான ஆன்டி ஆக்சிடேன்ட்டு உள்ளன.

ஆலிவ் ( olive) என்பதிலேயே Live என்று ஆசிர்வாதம் செய்வதும் பொதிந்துள்ளது. 40 வருடங்கள் மேலைநாடுகளில் செய்த ஆராய்ச்சிகளில் ஆலிவ் எண்ணெயில் செறிவற்ற கொழுப்பு இருப்பதால் அது நம் உடலில் ஆக்ஸிகரணம் ஏற்படுவதை தடுத்து மூப்பு ஏற்படாமல் தடுப்பது தெரிய வந்துள்ளது. ஆலிவ் எண்ணெயை நாம் செய்யும் காய்கறி சாலட்களில் கலந்து சாப்பிடுவது நல்லது. இது இதயத்தை காக்கும்.

மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.

ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.

அதிக தாகத்தைப் போக்கும்.மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.

மாதுளம்பூவின் பயன்கள்

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்;த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

*வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சு கள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

*வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

*ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `லேடீஸ் பிங்கர்’ என்று அழைக்கின்றனர்.

*பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட வேண்டும்? எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள்.

*வெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள்.

*அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.

*வெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு.வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.

*இளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால், வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

*வெண்டைக்காயை பிரிஜில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல் பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி வைக்கும் டிரேயில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும். சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். 

*இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.