AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 30 நவம்பர், 2011

S.S.நூருல்அமீன்-ரஸ்மியா, திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
வாழ்த்துக்களுடன்… 
 MMMMMMMMMMMMMMMS  உவைஸ் MBA    v அஹமது Bcom  

தங்கச்சிமடம் மீனவர்கள் சிறைப்பிடிப்பு-பிரதமருக்கு மனிதநேய மக்கள் கட்சி அவசர கடிதம்


இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எமர்சன், லேங்லெட், பிரசாத், அகஸ்டின், வில்சன் ஆகிய மீனவர்கள் கிளாடுவின் என்பவரின் படகில் (படகு எண் TN-10 MFB 822) இன்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, பகல் 11.30 மணியளவில் இலங்கை கடற்படையினர்  ஐந்து மீனவர்களையும் சிறைப்பிடித்ததுடன் படகையும் பிடித்துச் சென்றுள்ளனர்.

இத்தகவல் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவர்களுக்கு கிடைத்ததையடுத்து அவர் உடனடியாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு அவசர கடிதம் தொலைநகல் (பேக்ஸ்) மூலம் அனுப்பி, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும், சிறைப்பிடிக்கப்பட்ட படகை மீட்கவும் உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

தினமும் 3 கப் காபி குடிப்பது கேன்சர் விட்டு பாதுகாக்கும்!! ஆராய்ச்சி தகவல்


தினமும் 2 அல்லது 3 கப் காபி குடித்தால் புற்றுநோய் ஏற்படாமல் தப்பிக்கலாம் என ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.
Coffee Prevents Cancer
Coffee Prevents Cancer
காபி பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் வேளையில், அவற்றில் இன்னும் ஓர்ஆராய்ச்சி தகவல்.
அமெரிக்காவின் ஹார்வர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஊட்டச்சத்து மற்றும் நோய் இயல்துறை பேராசிரியர் எட்வர்டு ஜியோவன்னுசி தலைமையிலான குழுவினர் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
நர்சஸ் ஹெல்த் ஸ்டடி என்ற தொடர் ஆய்வில் 67,470 பெண்களிடம் நீண்ட கால ஆய்வு நடந்தது. காபி குடிக்கும் பழக்கத்துக்கும் கேன்சர் செல்கள் உருவாவதற்கும் உள்ள தொடர்பு பற்றி இந்த குழுவினர் ஆராய்ந்தனர்.
தினமும் 4 கப்புக்கும் அதிகமாக காபி குடித்தவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 25 சதவீதமும், 2 முதல் 3 கப் வரை குடித்தவர்களுக்கு 7 சதவீதமும் குறைந்திருந்தது.
காபின் என்ற பொருள் நீக்கப்பட்ட காபியை தினமும் 2 கப் குடித்தவர்களுக்கு கருப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 22 சதவீதம் குறைந்து இருந்தது ஆய்வில் தெரியவந்தது.
புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு காபி முக்கிய பங்கு வகிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும், காபியில் இன்சுலின் இருப்பதால் டயபடீஸ் வருவதற்கான வாய்ப்பை குறைக்கும் என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது என ஜியோவன்னுசி தெரிவித்துள்ளார்.

சளி, ஜலதோஷம் – இந்த மழைக்காலத்தில் பரவ காரணம் என்ன?


காலைல லேட்டா எழுந்தாலே முதல்ல இந்தப் பிரச்சினைதான் வரும். ஸ்கூல், காலேஜ், வேலைக்கு போறவங்க எல்லாரும் பரபரப்பா அப்போ தான் கிளம்பிட்டு இருப்பாங்க. அதனால, எல்லா வேலையும், வீட்ல வேகவேகமா நடக்கும். அந்த வேகத்தில குளிச்சா தலையைக் கூட ஒழுங்கா துவட்ட மாட்டோம்.
பொதுவாக மழைக்காலத்தில் ஜலதோஷத்திற்கு காராணமான கிருமிகள் ஏற்ற வெப்பநிலை அடையும். இதன் காரணமாக எளிதில் இக்கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும். நமக்குள் எளிதில் பரவவும் செய்யும்.
அப்படியே அந்த ஈரத்தலைல எண்ணெயைத் தேய்ச்சிடுவோம். அப்புறம் என்ன ஜலதோஷம்தான். தும்மல், இருமல், மூக்கடைப்பு, தலைவலின்னு எல்லாம் வரிசையா வரும்.
சரி, இந்த ஜலதோஷம் நமக்கு மட்டும்தான் வருதான்னு நீங்க ரொம்ப `பீல் (கவலை)’ பண்ணாதீங்க. அதைப் பற்றி சில தகவலை உங்களுkku நமது கல்வி களஞ்சியத்தில் வாயிலாக பதிவு செய்கிறது.
ஜலதோஷம்ங்கறது ஒருவித அலர்ஜி சம்பந்தமான நோய். இது வந்தா, 3 அல்லது 4 நாட்கள் வரை இருக்கும். இந்த நோய் உலகம் முழுவதும் பரவி இருக்குற நோய் தான்.
மனிதர்களுக்கு `ரைனோ’ என்ற வைரசின் மூலம் ஜலதோஷம் உண்டாகுது.
இந்த நோய்க்கு நிவாரணம் இருக்கு ஆனால் குணப்படுத்தவல்ல எவ்வித சிகிச்சையும் இல்லை!!
இந்த வைரஸ் 130 டிகிரி செல்சியஸ் வரை உள்ள வெப்பநிலையை கூடத் தாங்குமாம். இதை முழுமையாக அழிக்க எந்தவிதமான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லையாம்.
ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் எல்லாம் ஜலதோஷத்தால் உருவாகும் தலைவலியை மட்டும்தான் போக்குமாம்.

மக்கள் நலப்பணியாளர்கள்: தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியா நடக்கிறது? – உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி


டெல்லி:தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? என மக்கள் நலப் பணியாளர்கள் பணி நியமன விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளது.
முந்தைய தி.மு.க அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களை எல்லாம் தற்போதைய ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசு முடக்கி வருகிறது.சட்டப்பேரவை கட்டிடம், சமச்சீர் கல்வி, கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்றவற்றில் ஜெ.அரசின் நடவடிக்கைகள் அனைத்து தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமச்சீர் கல்வி, நூலகம் தொடர்பாக தமிழக அரசின் உத்தரவுகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட 15 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களை பணியிலிருந்து நீக்கம் செய்வதாக கடந்த நவம்பர் 8-ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து அரசின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மக்கள் நலப் பணியாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சிறப்பு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஏ.ஆர். தேவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் குருகிருஷ்ணகுமார், “உரிய விதிமுறைகளின் கீழ் மக்கள நலப் பணியாளர்களின் நியமனம் நடைபெறவில்லை. ஏற்கெனவே கிராமங்களில் நலத் திட்டப் பணிகளை மேற்கொள்ள 12,000 ஊராட்சிப் பணியாளர்கள் உள்ளனர். ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் உள்ளிட்டவற்றை இவர்கள் கண்காணித்து வருகின்றனர். இவர்கள் தவிர மேலும் 5,200 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மக்கள் நலப் பணியாளர்களைப் பணியில் வைத்திருப்பதால் அரசுக்குக் கூடுதல் நிதிச் சுமை ஏற்படும்.
அரசுப் பணிகளை மேற்கொள்ள ஏற்கெனவே ஊராட்சிப் பணியாளர்கள் இருக்கும் நிலையில், அரசுக்கு அதிக செலவு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் (மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம்) இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என்று வாதாடினார்.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: மக்கள் நலப் பணியாளர்களை ஒரு அரசு நியமிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சிக்கு வரும் மற்றொரு அரசு, அவர்களைப் பணியில் இருந்து நீக்குகிறது. பின்னர் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அவர்கள் அனைவரும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இதுபோன்று 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம், மக்கள் நலப் பணியாளர்களை நீக்குவதும், பின்னர் மீண்டும் பணியில்
சேர்க்கும் சம்பவமும் நடைபெறுகிறது. தமிழகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? சட்டத்தை சிறிதளவாவது மதிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.

செவ்வாய், 29 நவம்பர், 2011

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து கடை அடைப்பு: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதித்து  இந்திய நாட்டின் சில்லரை வியாபாரிகள் நான்கரை கோடி பேரின் வாழ்வதாரத்தை சீரழிக்கும் மத்திய அரசின் முடிவு வண்மையாக கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தமிழகத்தில் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வர்த்தகர்களின் சார்பாக நடைபெறும் முழு கடை அடைப்பு மிகவும் தேவையானது.

டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் கடை அடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கும்.

திங்கள், 28 நவம்பர், 2011

வரலாறு படைத்த பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு


 பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு..... 


Social Justice conference Grand Public Meet. mulayam singh
புதுடெல்லி:ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது.
அரபிக்கடல் பகுதியில் உருவான நவீன சமூக இயக்கம் யாத்திரைகளுக்கு இடையே கற்களையும், முட்களையும் தாண்டி வரலாற்று நினைவுச் சின்னங்களின் அழகு நிறைந்த மாநகரத்தின் இதயத்தை தன் வசப்படுத்தியது. இரண்டு தினங்களாக நடந்த சமூக நீதி மாநாட்டில் ஏராளமான வரலாற்று சம்பவங்களுக்கு சாட்சியம் வகித்த ராம்லீலா மைதானம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அத்துடன் பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்களின் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமும் ஒன்றிணைந்த பொழுது மாநாடு டெல்லியில் ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் சொந்தமானது.
ராம்லீலா மைதானத்தில் நேற்று மதியம் துவங்கிய பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். சமூகநீதிக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் போராட்டத்தில் நாங்களும் உடனிருக்கிறோம் என முலாயம் கூறினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: ‘சச்சார் கமிட்டி அறிக்கையும், ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கையும் முஸ்லிம்களின் துயரமான நிலையை சுட்டிக்காட்டிய பொழுதும் அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள காங்கிரஸ் காட்சி தயாராகவில்லை. தேர்தல் காலத்தில் மக்களை முட்டாள்களாக்கும் உபகரணமாகவே காங்கிரஸிற்கு இந்த அறிக்கைகள் மாறின. இரண்டு தடவை வாய்ப்பு கிடைத்த பிறகும் காங்கிரஸ் முஸ்லிம்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் நாட்டை ஆட்சிபுரிவது யார்? என்பதை கூட அவர்களால் தீர்மானிக்க முடியும். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என கூறும் மத்திய அமைச்சர், அதற்காக ஒரு மசோதா கூட கொண்டுவர தயாராகவில்லை.’ இவ்வாறு முலாயம்சிங் கூறினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் அவர்களின் தலைமை உரையுடன் மாநாட்டு பொதுக்கூட்டம் துவங்கியது. ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவரா தலைவர் செய்யது ஸலாஹுத்தீன், ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரிய செயலாளர் மெளலானா முஹம்மது வலீ ரஹ்மானி, ராமஜென்மபூமி கோயில் முக்கிய புரோகிதர் மஹந்த் ஆச்சார்யா சத்தியோந்திர தாஸ் மகராஜ், சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், லோக் ஜனசக்தி பொதுச்செயலாளர் அப்துல் ஃஹாலிக், அஜ்மீர் ஷரீஃப் காதிம் ஸய்யித் ஸர்வார் ஸிஸ்தி, ஃபதேஹ்பூரி இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத், ராஷ்ட்ரீய ஸஹாரா எடிட்டர் அஸீஸ் பர்ணி, ஆல் இந்தியா மில்லி கவுன்சில் துணைத்தலைவர் மவ்லானா டாக்டர்.யாஸீன் உஸ்மானி, அம்பேத்கர் சமாஜ்வாதி கட்சி தலைவர் பாயி தேஜ்சிங், ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழக பேராசிரியர் ஹஸீன் ஹாஷியா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மவ்லானா உஸ்மான் பேக், நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் துணைத் தலைவர் எ.எஸ்.ஸைனபா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் அனீஸ்ஸுஸமான் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இப்பொதுக்கூட்டத்தில் தவிர்க்க இயலாத காரணத்தால் கலந்துக்கொள்ளவியலாத லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானின் வாழ்த்துச்செய்தி மாநாட்டில் வாசிக்கப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் வரவேற்புரை நிகழ்த்தினார். ராஜஸ்தான் மாநில தலைவர் முஹம்மது ஷாஃபி நன்றி நவின்றார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா ‘டெல்லி பிரகடனத்தை’ வாசித்தார்.

மோடிக்கு அஞ்சும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களிடம் வாக்கு சேகரிக்க வரவேண்டாம் – பதேஹ்பூரி இமாம்


புதுடெல்லி:முஸ்லிம்களுக்கு எதிரான அக்கிரமங்கள் குஜராத்தில் அனைத்து வரம்புகளையும் மீறி வருகின்றன என பதேஹ்பூரி இமாம் முஹம்மது முகர்ரம் அஹ்மத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.
முஸ்லிம்கள் அதிகமாக பொய்யான தீவிரவாத வழக்குகளில் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மோடிக்கு அஞ்சும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களின் வாக்கு சேகரிக்க வரக்கூடாது. மோடிக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள்தாம் முஸ்லிம்களுக்கு தேவை என இமாம் கூறினார்.
இஷ்ரத் ஜஹான் உள்பட நான்குபேரை போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்ததற்கு மோடியை சிறையில் அடைக்கவேண்டும் என ராஷ்ட்ரீய ஸஹாரா முதன்மை எடிட்டர் அஸீஸ் பர்ணி தனது உரையில் கோரிக்கை விடுத்தார்.

உடற்பயிற்சி செய்தால் அதிகமாக சாப்பிடலாம்


உடற்பயிற்சி செய்தால் கூடுதலாக உண்ணலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் டாக்டர் “மிகைல் அலோன்சோ’ என்பவரின் தலைமையிலான குழுவினரே மேற்கண்ட முடிவைத் தெரிவித்துள்ளனர். பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பின்னரே இம்முடிவை இவர்கள் எட்டியுள்ளதாகத் தெரிகிறது.
ஒரு நபர் தன் உடல் தன்மைக்கு ஏற்ற வகையில் முறையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவாரேயானால், அவர் எடுத்துக் கொள்ளும் உணவும் உடலுக்கு ஏற்ற விதத்திலான அளவிலேயே அமையும் என்பது தெரிந்த விஷயம்தான்.
இப்போது நடைபெற்ற ஆராய்ச்சியில், அது உறுதி செய்யப்பட்டிருப்பதோடு, உணவின் தரமும், அளவும் கூடுதலாகும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சியின் அளவு கூடுதலானால் உட்கொள்ளும் உணவின் தரம், அதாவது சத்து நிறைந்த உணவு கூடுதலாக உண்ணப்படுகிறது. ( உடற்பயிற்சியின் போது உணவுப் பணவீக்க குறியீட்டை தயவு செய்து மறந்து விடுதல் நலம்).
தசைரீதியான உடற்பயிற்சிகள் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளத் தூண்டுகிறது. உடல் எடைக் குறைப்புக்காக செய்யப்படும் உடற்பயிற்சிகள் உடல் பருமனைக் குறைக்கின்றன. அதற்கேற்ற உணவுப் பழக்கத்தை நீண்ட காலத்துக்குப் பின்பற்றி வந்தால் நல்ல பலனைத் தருகின்றன.
முந்தைய ஆராய்ச்சிகளின் மூலம் உடற்பயிற்சிகள் மூளைக்கு நல்ல விளைவை அளிப்பது தெரிய வந்தது. குறிப்பாக உடலுக்கு வலுவை அளிக்காத உணவை உண்பது தவிர்க்கப்பட்டது. உடற்பயிற்சிகளின் விளைவாக மூளையிலுள்ள சாம்பல் நிறப் பகுதிகள் அதிகரிப்பது இப்போதைய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 27 நவம்பர், 2011

உடல்பருமனால் (Obesity) பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள்​! – ஆராய்ச்சி தகவல்


இந்தியாவில் உணவு பழக்கம் மாறி வருவதாலும், ஓடியாடி விளையாடுவது குறைந்து வருவதாலும் 20 சதவீத குழந்தைகள் குண்டாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
Obesity
Obesity
எதிர்காலத்தில் இவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்பட்டு வாழ்நாள் குறையும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் மாறி வரும் உணவு பழக்கம் மற்றும் அதுதொடர்பான பாதிப்புகள் குறித்து போர்ட்டிஸ் டயபடீஸ் மையம் மற்றும் போர்ட்டிஸ் மருத்துவமனையின் மெட்டபாலிக் நோய்கள் மற்றும் எண்டோகிரைனாலஜி துறை இணைந்து ஒரு ஆய்வு நடத்தியது. இதில் கிடைத்த தகவல்கள் குறித்து டயபடீஸ் மையத்தின் தலைவர் அனூப் மிஸ்ரா கூறியதாவது:
உணவு பழக்கம்,உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகள்தான் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம். இது பெரியவர்களை மட்டுமின்றி தற்போது சிறுவர்களையும் அதிகம் பாதிக்கிறது.
இந்தியாவில் சராசரியாக 15 முதல் 21 சதவீத குழந்தைகள் குண்டாக உள்ளனர்.ஃபாஸ்ட்புட், ஜங்க் புட் ஐட்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதாலும் உடலுக்கு பயிற்சி அளிக்காமல் அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பதாலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
9 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 9 சதவீதத்தினர் தொந்தியும் தொப்பையுமாக இருக்கின்றனர். இளம் வயதில் தொப்பை விழுவது இன்சுலின் சுரப்பை நேரடியாக பாதித்து சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளில் 68% பேர் ஓடியாடி விளையாடுவதில்லை.
வெளியே விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல், கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம் என்று அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கின்றனர்.
நமது பாரம்பரிய உணவுகள் குறைந்த கொழுப்பு உள்ளவை, உடலுக்கு ஆரோக்கியமானவை, நார்ச் சத்து அதிகம் உள்ளவை, ஊட்டச்சத்து நிறைந்தவை. இதில் இருந்து விலகிப் போகும் நகர்ப்புற குழந்தைகள் கொழுப்பு சத்து, இனிப்பு அதிகம் உள்ள உணவு பொருட்கள், ஃபாஸ்ட்புட், ஜங்க் புட் நிறைய சாப்பிடுகின்றனர்.
குண்டாக இருக்கும் குழந்தைகளில் 70 சதவீதம் பேர் வயதான பிறகும் குண்டாகவே இருப்பார்கள். இவர்களுக்கு டயபடீஸ், அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். இதன் காரணமாக, இன்னும் 20 ஆண்டுகளில் சராசரி ஆயுள்காலம் குறையும் அபாயமும் இருக்கிறது....

கொள்ளுமேடில் கன மழை











சனி, 26 நவம்பர், 2011

வீராணம் ஏரியில் 500 கன அடி தண்ணீர் திறப்பு…


வீராணம் ஏரியை பாதுகாக்க வெள்ளியங்கால் ஓடையில் 500 கன அடி தண்ணீர் திறப்பு,..25கிராமங்களை பாதிக்கும் அபாயம்!….
நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை யினால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.ஏரியை பாதுகாக்க வெள்ளியங் கால் ஓடையில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் கரையோரத்தில் உள்ள 25 கிராமங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வட வாறு மூலமாகவும், மழைக் காலங்களில் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண் ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வரும்.
ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியாகும்.மழைக்காலத்தில் ஏரியை பாதுகாக்க 44 அடிக்கு மேல் நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதன் பேரில் பொதுப் பணித்துறை அதி காரிகள் மழைக்காலத்தில் 44 அடிக்கு மேல் உயர்த்தாமல் ஏரியை பாதுகாத்து வரு கின்றனர். நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 43.30 அடியாக இருந்தது.
இந்நிலையில் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.இந்த மழை யினால் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வழியாக வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் வருகிறது.வடவாற்றில் இருந்து 100 கன அடிநீரும் வருவதால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து 43.70 அடியை எட்டியது.
தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக இருப்பதால் ஏரியை பாதுகாக்கும் நோக்கில் லால்பேட்டை வெள்ளியங் கால் ஓடை வழி யாக 500 கன அடி திறந்து விடப் பட்டது.சேத்தியாத் தோப்பு வி.என்.எஸ்.மதகு வழி யாக 800 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டது.
  சென்னைக்கு வினாடிக்கு 21 கனஅடி தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.இருப்பினும் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் வெள்ளியங்கால் ஓடைக்கரையோர கிராம மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.கரையோர கிராமங்களான நந்திமங்கலம், கீழக்கரை, கீழவன்னிïர், திரு நாரைïர், வீரநத்தம், எள்ளேரி கிழக்கு, சர்வராஜன் பேட்டை, நெய்வாசல், தொருக்குழி, சோழக்கூர், தெம்மூர்,மெய் யாத்தூர் உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக் கும் அபாயம் ஏற்படும்.
இதேபோல் வெண்ணங்குழி ஓடை நிரம்பி வழிவதால் ரோட்டில் தண்ணீர் செல்கிறது. இதனால் சிதம்பரம்- திருச்சி செல்லும் சாலை துண்டிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது.மேலும் அந்த பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள 1000 ஏக்கர் சம்பா பயிர்களில் தண் ணீர் தேங்கி உள்ளது.கந்தமங்கலம், பழஞ்சநல்லூர், மடப்புரம், வீராணநல்லூர் உள்பட 15-க் கும் மேற்பட்ட கிராம வயல் களில் தண்ணீர் சூழ்ந்து உள்ளது.

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!


புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
இஸ்லாமிய வருடமான ஹிஜ்ரி ஆண்டின் துவக்க நாளாம் முஹர்ரம் முதல் நாள் உலகெங்கும் இஸ்லாமிய புத்தாண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்த இனிய நாளில் உலகெங்கும் பரவி வாழும் KOLLUMEDU நண்பர்களுக்கும்,அனைத்து இஸ்லாமிய நல் உள்ளங்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதி மகிழ்ச்சி அடைகிறோம்..!

கடலூர் மாவட்டத்தில் கனமழை தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை யால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், வாய்க்கால்களில் அளவுக்கு அதிகமாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிரதான ஏரிகளான வீராணம், பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, கொண்டகி ஏரி, வெலிங்டன் நீர்தேக்கம் ஆகியவை நிரம்ப தொடங்கியுள்ளன. 50க்கும் மேற் பட்ட குளம், குட்டைகள் நிரம்பி வழிகின்றன. கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு, உப்பனாறுகள் மற்றும் பாசிமுத்தான்ஓடை, கான்சாகிப் வாய்க்கால், வடவாறு, பிச்சாவரம் உப்ப னாறு, பரவனாறு, கடலூர் துறைமுக ஆறு ஆகியவற்றில் முழு கொள்ளளவில் தண்ணீர் செல்கிறது. கன மழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட குடிசைகளில் மழைநீர் புகுந்துள்ளது. பல இடங்களில் குடிசைகளின் சுவர் இடிந்து விழுந்தன. கடலூர் அருகே எஸ். புதூர் கிராமத்தில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் விவசாய தொழிலாளி காசிநாதன் (40), அவரது மனைவி மங்கையர்கரசி (35) ஆகியோரும், அன்னவல்லி கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி சிவலிங்கம் (31) என்பவரும் படுகாயம் அடைந்தனர்.
 கடந்த ஒரு வாரமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலில் ராட்சத அலைகள் எழும்பி அச்சுறுத்தி வருகின்றன. கடலூர் துறைமுகத்திலும், மீனவர் கிராமங்களிலும் விசைப்
படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீன்பிடி தொழில் முடங்கி, மீன் விற் பனை, ஏற்றுமதி வணிகமும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 10 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. 

கீரிப்பேட்டை, பிஎஸ் பேட்டை, கவரப்பட்டு, பிச்சாவரம் உள்ளிட்ட கிராமங்களில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் புறவழிச்சாலை யில் வடிகால் வாய்க்கால் அமைக்காததால் கண்ணங்குடி, கீரநத்தம், ஆடூர், பூந்தோட்டம் ஆகிய கிராமங்களிலும் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. கடலூர்-சிதம்பரம் சாலை, சிதம்பரம்-வீராணம் ஏரிக்கு செல்லும் கண்ணங்குடிசாலை, குள்ளஞ்சாவடி- சத்திரம் சாலை உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. உழவர்சந்தைக்கு வரும் விவசாயிகள், அரசு ஊழியர்கள், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். 

கடலூர் அண்ணா விளை யாட்டு அரங்கம், எஸ்பி அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்பு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட அரசு அலுவலக வளாகங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கடற்கரைசாலை, குண்டுஉப்பலவாடி சாலை, முதுநகர் சாலை, சிப்காப் சாலை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புருசோத்தமன்நகர், பீமாராவ் நகர், வன்னியர்பாளையம், புதுத்தெரு உள்ளிட்ட பல குடிசைப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

நெய்வேலி: நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் பகுதியில் 2வது சுரங்கம் உள்ளது. இந்த சுரங்க பகுதிகளில் மேல்பாப்பனப்பட்டு, மேல்பாதி, கீழக்குறிச்சி, பெரியாக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் உள் ளன. தொடர் மழையால் இந்த பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் பள்ளமான பகுதிகளில் அமைந்திருந்த வீடு களை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்த மக்கள் அருகில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு என்எல்சி நிர்வாகம் சார்பில் உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்களும் பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். 

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து பெய்யும் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பின. ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வயல்களிலும் தண்ணீர் தேங்கியதால் நெற்பயிர்கள் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடைவீதியில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது. 
வேப்பூர்: வேப்பூர் பகுதி யில் நல்லூர், மங்களூர், அடரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் விவசாய பணி பாதிக்கப்பட்டுள்ளது.நல்லூர் மணிமுக்தாற்றில் அதிகளவு தண்ணீர் ஓடுகிறது.

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நேற்று முன் தினம் இரவு விடிய, விடிய பலத்த மழை, பேருந்து நிலையத்தில் வெள்ள நீர் சூழ்ந் தது. நகரில் கடை வீதி, பெண்ணாடம் ரோடு, கட லூர் ரோடு ஆகிய இடங்களில் சாலை மேல் அதி களவு தண்ணீர் சென்ற தால் வாகனங்கள் நீந்தி செல்ல வேண்டிய நிலை இருந்தது. விருத்தாசலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையில் பேருந்து நிலையத்தில் வெள்ள நீர் சூழ்ந்தது. இத னால் பேருந்துகள் வெள்ள நீரில் நீந்தி செல்ல வேண்டிய நிலை இருந்தது. 

மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து வந்ததால் பேருந்து நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசியது. பயணிகள் பேருந்து ஏறவும், இறங்கவும் மிகவும் சிரமப்பட்டனர். நகரில் கடை வீதி, பெண் ணாடம் ரோடு, கடலூர் ரோடு ஆகிய பகுதிகளில் சாலை மேல் அதிகளவு வெள்ளநீர் சென்றதால் நேற்று காலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

கண்டியாங்குப்பம் கிராமத்தில் கிழக்கு தெருவில் வடிகால் வசதி இல்லாததால் தெரு முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து பலரது வீடுகளிலும் சூழ்ந்தது. வார்டு தேமுதிக கவுன்சிலர் ராஜ்குமார் அவரது சொந்த செலவில் பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால் களை தூர்வாறினார். தகவலறிந்த தொகுதி எம்எல்ஏ முத்துக்குமார், நகர் மன்ற உறுப்பினர் அரங்கநாதன் ஆகியோர் சென்று பார்வையிட்டனர். நகரில் வடிகால்கள் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டதால் வெள்ள நீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. மாத்தூர் கிராமத்திற்கு செல்லும் மூன்று தரைப்பாலத்திலும் மழை நீர் அதிக அளவில் சாலைக்கு மேலே சென்றதால் கிராமமே துண்டிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள நூற்றுக்கணக்கான நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி: பண்ருட்டி பகுதியில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. காய்கறி கடை களில் காய்கறிகள் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கின்றன. சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் கடந்த 2 நாட் களாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சிவசக்திநகர், அரசு மருத்துவமனை, இந்திராநகர், ராஜாநகர், வண்டிகேட் பகுதி, அம்மாபேட்டை, பேருந்து நிலையம் உள் ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சிதம்பரம் நகரை ஒட்டியுள்ள அனைத்து நகர்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கி கிடக் கும் நிலையில் உள்ளனர். கடவாச்சேரி, வல்லம்படுகை, இளநாங்கூர், மாரியப்பாநகர், அண்ணாமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நடவுப்பயிர்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. 

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கரும்பு விவசாயிகளுக்கு இந்த தொடர்மழை மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற பயிர்களும் மழைநீரில் மூழ்கியுள்ளதால் அவற்றை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  

புவனகிரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், சேத்தியாத்தோப்பு, கிள்ளை, மருதூர் உள்ளிட்ட பகுதிகளில்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. 

திட்டக்குடி:
திட்டக்குடி பகுதியில் நேற்று காலை நிலவரப்படி லக்கூரில் 60 மிமீ, ராமநத்தத்தில் 60.2 மிமீ, கீழசெருவாயில் 70.5 மிமீ, கலாந்துறையில் 60 மிமீ மழை பதிவாகி உள்ளது. மழை காரணமாக வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையில் 22.70 அடி தண்ணீர் உள்ளது. தொடர் மழையால் பெருக்கெடுத்து வந்த தண்ணீர் நிதிநத்தம் ஓடை பாலத்தின் ஒரு பகுதியை அரித்து சென்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திட்டக்குடி முருகன்குடி வெள்ளாற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால கட்டுமான பணி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் பரிந்துரை மின் கட்டணம் 2 மடங்கு உயர்வு

சென்னை : மின்கட்டணத்தை 2 மடங்குக்கும் மேல் உயர்த்த கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் அளித்த மனு தொடர்பான விசாரணை நேற்று நடந்தது. மக்கள் கருத்து கேட்டபின் 3 மாதத்துக்குள் புதிய மின்கட்டணம் நடைமுறைக்கு வருகிறது. புதிய பரிந்துரையின்படி வீடுகளுக்கான மின்கட்டணம் யூனிட்டுக்கு 75 பைசாவில் இருந்து ரூ.2 ஆக உயர்கிறது. கடைகளுக்கு ரூ.4.50ல் இருந்து ரூ.7 ஆக கட்டணம் உயரும்.

தமிழக அரசின் பொருளாதார நிலை மோசமாக உள்ளதால் பஸ், மின் கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்துவதாக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்தார். உள்ளூர், வெளியூர் பஸ் கட்டணம், வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிருப்தியடைந்த மக்கள் பல இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 

மின்கட்டணம் உயர்த்தப்படும் என ஜெயலலிதா அறிவித்தாலும் அதை உடனடியாக அமல்படுத்த முடியாது. மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. இதுகுறித்து மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு மின்வாரியம் கோரிக்கை வைக்க வேண்டும். அதன்பின், மக்களின் கருத்தை ஆணையம் கேட்டறிந்து மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். 

மின்வாரியத்துக்கு ஏற்பட்டுள்ள ரூ.8 ஆயிரம் கோடி இழப்பை சரி செய்ய, மின் கட்டணத்தை உயர்த்த ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் கடந்த 17ம் தேதி மனு அளித்திருந்தது. மின்வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்பட்டு வந்ததையடுத்து கடந்த ஆண்டில் ஒரு பிரிவினருக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி, 600 யூனிட்களுக்கு அதிகமாக பயன்படுத்துவோருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.05 கட்டணம் உயர்த்தப்பட்டது. அதாவது ஸி3 ஆக இருந்த கட்டணம் ரூ.4.05 என
நிர்ணயிக்கப்பட்டது.

இந்த கட்டண உயர்வு மூலம் ஆண்டுக்கு ரூ.1,952 கோடி கூடுதல் வருமானம் கிடைத்தது. ஆனாலும், இழப்பை ஈடுகட்ட முடியவில்லை என கூறப்படுகிறது. 2001&ல் மின்வாரியத்தின் கடன் தொகை ரூ.3539 கோடியாக இருந்தது. இது, 2011&ல் ரூ.43,000 கோடியாக அதிகரித்துள்ளது. 2011&12ம் ஆண்டில் கடன் தொகை கூடுதலாக ரூ.10,000 கோடி ஏற்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தற்போது வீட்டு இணைப்புகளுக்கு 6 பிரிவுகளாக மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரண ஏழை மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு அதிகபட்சமாக 75 பைசா மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. 50 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 75 பைசாவும், 51 முதல் 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 85 பைசாவும் 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.1.50ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

புதிய கட்டணம் அறிவிக்கப்படும்போது, இந்த 3 பிரிவுகளையும் ஒன்றாக சேர்த்து, 200 யூனிட் வரை கட்டணமாக ரூ.2 வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது யூனிட்டுக்கு 75 பைசா, 85 பைசா செலுத்தி வருபவர்கள்கூட இனி ரூ.2 செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதுபோல் தொழில் மற்றும் வர்த்தக கடைகளுக்கு அடிப்படை கட்டணமே யூனிட் ஒன்று ரூ.7 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண உயர்வு அறிக்கையை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று ஏற்றுக் கொண்டு மதியம் 2.30 மணிக்கு விசாரணை தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் கட்டணம் உயர்வு தொடர்பான விசாரணை நடத்தியது. இதில் ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர்கள் நாகல்சாமி, வேணுகோபால், செயலாளர் குணசேகரன் மற்றும் மின்வாரிய தலைவர் ராஜீவ்ரஞ்சன், நிர்வாக இயக்குநர் முருகன், நிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பின் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கபிலன் கூறியதாவது: மின்வாரியத்தின் மின்கட்டண உயர்வு தொடர்பான அறிக்கையை, நாங்கள் ஏற்றுக் கொண்டு விசாரணை நடத்தினோம். இன்று மாலையிலேயே கட்டண அறிக்கை தொடர்பான முழு அறிக்கையை தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

விரைவில் தமிழிலும் வெளியிடப்படும். இதன்மூலம் அடுத்த 4 வாரங்களுக்கு இணையதளத்தின் மூலம் மக்கள் கருத்து கேட்கப்படும். இதில் மக்கள் ஆலோசனைகள், எதிர்ப்புகளை தெரிவிக்கலாம். பின்னர் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். தேவைப்பட்டால் வேறுசில நகரங்களிலும் கருத்து கேட்டு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். இவற்றை எல்லாம் முடிந்த பின்னரே அடுத்த 3 மாதத்தில் புதிய மின்கட்டணம் நிர்ணயிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தற்போதைய மின் கட்டணம் 

1 முதல் 50 யூனிட்    75 காசு
51 முதல் 100 யூனிட்    85 காசு
101 முதல் 200 யூனிட்    ரூ.1.50    201 முதல் 600 யூனிட்    ரூ.2.20
601 யூனிட்க்கு மேலே    ரூ.4.05 

வர்த்தக நிறுவனங்களுக்கு

1 முதல் 100 யூனிட்    ரூ.4.30
100 முதல் 200 யூனிட்    ரூ.5.30
200 யூனிட்க்கு மேல்    ரூ.6.50

உயர்த்தவுள்ள புதிய மின்கட்டணம் 

0 முதல் 200 யூனிட்    ரூ.2
201 முதல் 500 யூனிட்    ரூ.3.50
500 யூனிட்டுக்கு மேல்    ரூ.5.75

அந்நிய நேரடி முதலீட்டிற்கான உச்சவரம்பு நீக்கம் மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு இதுவரை இருந்துவந்த உச்சவரம்பை மத்திய அரசு ஏதேச்சதிகாரமாக நீக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது இந்திய நாட்டின் சில்லரை வியாபாரிகள் நான்கரை கோடி பேரை சீரழிக்கும் நடவடிக்கையாகும்.
ஆன்லைன் டிரேட் எனப்படும் யூகபேர வணிகத்தால் விலைவாசி கட்டுப்பாடில்லாமல் உயர்ந்துவரும் சூழ-ல் அதைத் தடுப்பதற்கும் யூகபேர வணிகத்தை தடை செய்வதற்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு, பன்னாட்டு நிறுவனங்களின் பகல் கொள்ளைக்கு துணைபோகும் வகையில் சில்லரை வணிகத்தில் உச்சவரம்பை நீக்கியிருப்பது மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

உடனடியாக மத்திய அரசு தனது அறிக்கையை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அத்தியாவசியப் பொருட்களான புளி, மிளகாய், மிளகு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை உள்நாட்டு பெருநிறுவனங்களும், வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் கொள்முதல் செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

அன்புடன்
(எம்.ஹெச். ஜவாஹிருல்லா)

வியாழன், 24 நவம்பர், 2011

செல்போன் ரீசார்ஜ் செய்ய புதிய வழி – சாதித்த தமிழர்!


சூரியஒளி மூலம் ஒரே நேரத்தில் 4 செல்போன்களை ரீசார்ஜ் செய்யும் புதிய கருவியை சென்னையை சேர்ந்தவர் வடிவமைத்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் நந்தகுமார் (64). பியூசி வரை சென்னையில் படித்தவர். ரேடியோ மற்றும் டி.வி டெக்னாலஜி 2 வருட படிப்பையும் முடித்திருந்தார். தனியார் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் பணியாற்றினார்.
இதை தொடர்ந்து மத்திய அரசின் இசிஐஎல் நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக டி.வி டெக்னிக் பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் சூரியஒளி மூலம் செல்போன்களை ரீசார்ஜ் செய்யும் புதிய கருவியை வடிவமைத்துள்ளார். Ôமொபைல் ரீசார்ஜ்Õ என்ற இந்த கருவி மூலம் ஒரே நேரத்தில் 4 செல்போன் களை ரீசார்ஜ் செய்ய முடியும்.
முழுமையாக ரீசார்ஜ் ஆக 2 மணிநேர சூரியஒளி போதும். அனைத்து வகையான செல்போன்களை ரீசார்ஜ் செய்ய முடியும்.
இதுகுறித்து டி.எஸ்.நந்தகுமார் கூறுகையில்,
‘‘சூரியஒளி மூலம் செல்போன் களை ரீசார்ஜ் செய்யும் கருவியை வடிவமைக்க 3 மாதமாக முயற்சி மேற்கொண்டேன். ரூ.1500 முதலீடு செய்துள்ளேன்.
மின்சாரத்தை சேமிக்க இது ஒரு நல்ல வழி. இந்த கருவியை கண்காட்சிகளில் வைத்து விளக்க உள்ளேன். ஒரு கருவி ரூ.180க்கு விற்க முடிவு செய்துள்ளேன் அடுத்தகட்டமாக சூரியஒளியை பயன்படுத்தி, குறைந்த செலவில் வீடுகளுக்கு மின்விளக்கு தர முயற்சி செய்கிறேன்’’ என்றார்.