இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எமர்சன், லேங்லெட், பிரசாத், அகஸ்டின், வில்சன் ஆகிய மீனவர்கள் கிளாடுவின் என்பவரின் படகில் (படகு எண் TN-10 MFB 822) இன்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, பகல் 11.30 மணியளவில் இலங்கை கடற்படையினர் ஐந்து மீனவர்களையும் சிறைப்பிடித்ததுடன் படகையும் பிடித்துச் சென்றுள்ளனர்.
இத்தகவல் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவர்களுக்கு கிடைத்ததையடுத்து அவர் உடனடியாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு அவசர கடிதம் தொலைநகல் (பேக்ஸ்) மூலம் அனுப்பி, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும், சிறைப்பிடிக்கப்பட்ட படகை மீட்கவும் உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக