AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கொள்ளுமேடு டைம்ஸ் இணையத்தளத்திற்கு வரவேற்கின்றோம்..

புதன், 3 ஜூலை, 2013

M.S.முஹம்மது பைசல் - முபுஸிரா பானு திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில்ஒன்றிணைத்து வைக்கட்டும்}   
வாழ்த்துக்களுடன்.. .
கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்  WWW.KOLLUMEDU.COM

சிம் கார்டு வாங்க கைரேகை கட்டாயமாகிறது…!


டெல்லி: மொபைல் போன் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கிய சிம் கார்டு நம்பர் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன் கைரேகை அல்லது உடல்சார்ந்த ஏதேனும் ஒரு சான்றை கட்டாயமாக அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறைக்கு அளித்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக சிம் கார்டு வாங்குபவர்கள் உடல்சார்ந்த சான்று அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

செவ்வாய், 2 ஜூலை, 2013

சவூதி வாழ் இந்தியர்களுக்கு ஓர் நற்செய்தி


சவூதி  அரேபிய சட்டத்திற்கு புறம்பாக வாழும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடியுரிமையை சரி செய்துக்கொள்ள மூன்று மாத கெடு நாளையோடு (ஜூலை 3)  முடிவடைவதாக அறிவித்திருந்தது.. அதன்பிறகு சிறைவாசம் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்து வந்தது.


இதனடிப்படையில் அந்தந்த நாட்டு தூதரகங்கள் தன் மக்களுக்கு உதவும் விதமாக  வேலைவாய்ப்பு முகாம் மற்றும் நாடு திரும்ப விரும்புபவர்களுக்கு சட்ட சிக்கல்களை முடித்துக்கொடுப்பது போன்ற உதவிகளை  செய்துவந்தது. இறுப்பினும் ஐம்பது விழுக்காடுகூட முடிவடையாத நிலையில் இருந்துவந்தது. இதற்கான கால அவகாசம் போதவில்லை என்று தூதரகங்கள்,பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள்  மற்றும் சவூதி அரசாங்க அலுவலகங்களும் கூறிவந்தது. இந்த கோரிக்கையை அரசர் அப்துல்லாஹ் இன்று ஏற்றுக்கொண்டு இதற்கான கெடு முஹர்ரம் 1, 1435 (நவம்பர் 4,2013) வரை  நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஞாயிறு, 30 ஜூன், 2013

அமீரகத்தின் TOP 10 இந்தியர்கள்


துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட மாகாணங்களை கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் தொழில் தொடங்கி வெற்றியாளர்களாக விளங்கும் இந்தியர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு, அவர்களின் பணியாட்களின் எண்ணிக்கை, வர்த்தக வரவு – செலவு, அவர்கள் அறப்பணிக்கு செலவிடும் தொகை, அவர்களின் ஆளுமை என பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலின் படி வளைகுடாவில் 100க்கும் மேற்பட்ட லூலு அங்காடிகளை கொண்டுள்ள எம்கே குழுமத்தின் தலைவர் யூசுப் அலி முதலிடத்திலும், மேக்ஸ், செண்டர் பாயிண்ட் முதலான ரீடெயில் வணிக கடைகளை வைத்துள்ள லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவர் மிகி ஜக்தியானி இரண்டாம் இடத்திலும் யூ.ஏ.ஈ எக்ஸ்சேஞ்ச் மற்றும் என்.எம்.சி மருத்துவமனைகளின் தலைவர் பி.ஆர்.ஷெட்டி மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

வெள்ளி, 28 ஜூன், 2013

நோன்பு கஞ்சிக்கான அரிசியை முன்கூட்டியே வழங்க தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை


சென்னை: ரமலான் நோன்பு துவங்கும் முன்பே நோன்பு கஞ்சிக்கான அரிசியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கட்சி தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், பொருளாளர் எம்.எல்.ஏ.ஷாஜகான், எம்.அப்துல் ரகுமான் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதன், 26 ஜூன், 2013

தி.மு.க.,விற்கு ஆதரவு அளித்ததால் மனித நேய மக்கள் கட்சினர் விலகல்

  • மனித நேய மக்கள் கட்சியில் இருந்து கடலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் திடீரென விலகியுள்ளனர்.மனித நேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சிக்கு அங்கீகாரம் கொடுத்த அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவிக்காமல் தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவித்த கட்சியின் தலைமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காட்டுமன்னார்கோவிலில் எதிர்ப்புக் கூட்டம் போடப்பட்டது.

செவ்வாய், 25 ஜூன், 2013

கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக-மமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழு

 கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக-மமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழு இன்று (25-06-2013 செவ்வாய் கிழமை) சிதம்பரத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் மமகவின் இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது மமக மாநில அமைப்பு செயலாளர்கள் மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன் எஸ்.சம்சுதீன் நாசர் உமரி மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.


கடந்த மாதம் ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரையின் படி கட்சியிலிருந்து மானியம் ஆடூர் மெஹராஜுதீன் நீக்கப்பட்டதற்கான காரணங்களை கழக செயல் வீரர்களுக்கு தலைமை நிர்வாகிகள் தகுந்த ஆதாரத்துடன் விளக்கினர்.