AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 3 ஜூலை, 2013

M.S.முஹம்மது பைசல் - முபுஸிரா பானு திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில்ஒன்றிணைத்து வைக்கட்டும்}   
வாழ்த்துக்களுடன்.. .
கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்  WWW.KOLLUMEDU.COM

சிம் கார்டு வாங்க கைரேகை கட்டாயமாகிறது…!


டெல்லி: மொபைல் போன் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கிய சிம் கார்டு நம்பர் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன் கைரேகை அல்லது உடல்சார்ந்த ஏதேனும் ஒரு சான்றை கட்டாயமாக அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறைக்கு அளித்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக சிம் கார்டு வாங்குபவர்கள் உடல்சார்ந்த சான்று அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

செவ்வாய், 2 ஜூலை, 2013

சவூதி வாழ் இந்தியர்களுக்கு ஓர் நற்செய்தி


சவூதி  அரேபிய சட்டத்திற்கு புறம்பாக வாழும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடியுரிமையை சரி செய்துக்கொள்ள மூன்று மாத கெடு நாளையோடு (ஜூலை 3)  முடிவடைவதாக அறிவித்திருந்தது.. அதன்பிறகு சிறைவாசம் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்து வந்தது.


இதனடிப்படையில் அந்தந்த நாட்டு தூதரகங்கள் தன் மக்களுக்கு உதவும் விதமாக  வேலைவாய்ப்பு முகாம் மற்றும் நாடு திரும்ப விரும்புபவர்களுக்கு சட்ட சிக்கல்களை முடித்துக்கொடுப்பது போன்ற உதவிகளை  செய்துவந்தது. இறுப்பினும் ஐம்பது விழுக்காடுகூட முடிவடையாத நிலையில் இருந்துவந்தது. இதற்கான கால அவகாசம் போதவில்லை என்று தூதரகங்கள்,பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள்  மற்றும் சவூதி அரசாங்க அலுவலகங்களும் கூறிவந்தது. இந்த கோரிக்கையை அரசர் அப்துல்லாஹ் இன்று ஏற்றுக்கொண்டு இதற்கான கெடு முஹர்ரம் 1, 1435 (நவம்பர் 4,2013) வரை  நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.