டெல்லி: மொபைல் போன் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கிய சிம் கார்டு நம்பர் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன் கைரேகை அல்லது உடல்சார்ந்த ஏதேனும் ஒரு சான்றை கட்டாயமாக அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறைக்கு அளித்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக சிம் கார்டு வாங்குபவர்கள் உடல்சார்ந்த சான்று அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதற்காக மொபைல் வாடிக்கையாளர்கள் குறித்த உடல்சார்ந்த சான்றிதழ் புள்ளிவிபரமாக கையாளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு நோக்கில், தேசிய புலனாய்வு அமைப்பகத்துடன் இணைந்து அனைத்து வாடிக்கையாளர்களிடமும் உடல்சார்ந்த சான்று சேகரிக்கப்பட உள்ளது.
புதன், 3 ஜூலை, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக