அல்லாஹ்வின் கிருபையால் அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் பெண்களுக்கான இஸ்லாமிய உள்ளரங்கு நிகழ்ச்சி 27-01-2012 மக்ரிப் தொழுகைக்கு பின்னர் நடைபெற்றது.கத்தாரா கிளை தமுமுக தலைவர் காட்டுமன்னார்குடி சகோதரர் அஸ்கர் அலி தலைமை தாங்கினார்.மண்டல உலமாக்கள் அணி செயலாளர் கொள்ளுமேடு முஹம்மது ரிபாயி திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்த்தினார்.
அமீரக தமுமுக தலைவர் சகோதரர் அதிரை அப்துல் ஹாதி தியாகம் என்ற தலைப்பில்,சஹாபா பெண்மணிகள் தங்களது ஈமானுக்கு கொடுத்த முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.நமது மறுமை வாழ்க்கைக்காக இம்மையில் நாம் தயாரிப்பு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து தனது உரையில் வலியுறுத்தினார்.
இறுதியாக மண்டல பொருளாளர் நாச்சிகுளம் சகோதரர் அசாலி அஹமது நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில் அல் அய்னில் வசிக்கும் தமிழக சகோதரிகள் தங்களது கணவர், குழந்தைகளுடன் பெருமளவு கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக