கடலூர் மாவட்டம், சிதம்பரம் – கடலூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பி.முட்லூர் ஆணையங்குப்பத்தில் மஸ்ஜிதே முஹம்மத் என்னும் புதிய மசூதி திறப்புவிழா நேற்று முன் தினம் நடைபெற்றது.
பி.முட்லூர் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகி ஏ.பக்கீர் மொய்தீன் சாஹிப் தலைமையில் நடைபெற்ற திறப்புவிழாவில் கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொருளாளரும் பி.முட்லூர் ஜாமிஆ மஸ்ஜித் டிரஸ்டியுமான டி.அப்துல் கப்பார் கான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நீடுர் நெய்வாசல் அரபுக்கல்லூரி முதல்வர் எ. முஹம்மது இஸ்மாயில் பாகவி சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
நீடூர் ஜாமிஆ மிஸ்ஹுல் ஹுதா அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா முஹம்மத் இஸ்மாயில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவர் மௌலானா ஏ.ஷபிகுர்ரஹ்மான், லால்பேட்டை ஜெ.எம்.ஏ. அரபிக்கல்லூரி பேராசிரியர் மௌலானா முஹம்மது காசிம்,ஜெ.எம்.ஹெச்.அரபிக்கல்லூரி பேராசிரியர் மௌலானா அப்துல் ரஹ்மான், கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவரும், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவருமான எம்.எஸ். முஹம்மது யூனுஸ், மற்றும் பலர் உரையாற்றினர்.
லால்பேட்டை ஜெ.எம்.ஏ. அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா ஏ.நூருல் அமீன் ஜும்ஆ பேரூரை நிகழ்த்தினார்
நீடுர் நெய்வாசல் அரபுக்கல்லூரி முதல்வர் எ. முஹம்மது இஸ்மாயில் பாகவி சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
நீடூர் ஜாமிஆ மிஸ்ஹுல் ஹுதா அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா முஹம்மத் இஸ்மாயில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவர் மௌலானா ஏ.ஷபிகுர்ரஹ்மான், லால்பேட்டை ஜெ.எம்.ஏ. அரபிக்கல்லூரி பேராசிரியர் மௌலானா முஹம்மது காசிம்,ஜெ.எம்.ஹெச்.அரபிக்கல்லூரி பேராசிரியர் மௌலானா அப்துல் ரஹ்மான், கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவரும், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவருமான எம்.எஸ். முஹம்மது யூனுஸ், மற்றும் பலர் உரையாற்றினர்.
லால்பேட்டை ஜெ.எம்.ஏ. அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா ஏ.நூருல் அமீன் ஜும்ஆ பேரூரை நிகழ்த்தினார்
மசூதி திறப்பு விழாவில் தமிழக சமூகநலத்துறை முன்னாள் அமைச்சரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான செல்வி ராமஜெயம், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், பரங்கிபேட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அசோகன், ஒன்றிய குழு துணைத் தலைவர் திருமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
லால்பேட்டை, பின்னத்தூர், எள்ளேரி, கொள்ளுமேடு, நெடுஞ்சேரி, பூதகேணி, ஆயங்குடி, சிதம்பரம், கோவிலாம்பூண்டி, கந்தகுமாரன், பரங்கிப்பேட்டை ஆகிய ஊர்களிலிருந்து ஏராளமான முஸ்லிம் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் கலந்துக் கொண்டனர்.
லால்பேட்டை, பின்னத்தூர், எள்ளேரி, கொள்ளுமேடு, நெடுஞ்சேரி, பூதகேணி, ஆயங்குடி, சிதம்பரம், கோவிலாம்பூண்டி, கந்தகுமாரன், பரங்கிப்பேட்டை ஆகிய ஊர்களிலிருந்து ஏராளமான முஸ்லிம் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் கலந்துக் கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக