AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 24 அக்டோபர், 2012

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி துவக்கம்


காட்டுமன்னார்கோவில்: முதல்வர் உத்தரவையடுத்து வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி இன்று தொடங்கியது.
சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சென்னைக்கு தினமும் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கும் புதிய வீராணம் திட்டம், 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேட்டூரில் தண்ணீர் திறந்து விடும்போது அந்த தண்ணீர் வீராணம் ஏரியில் பெறப்பட்டு அந்த பகுதி பாசனத்துக்கு பயன்படுவதோடு சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.


இந்நிலையில், கடந்த மாதம் 17-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும் பருவ மழை பெய்து வருவதாலும் வீராணம் ஏரியில் தற்போது 45.80 அடி தண்ணீர் உள்ளது.

எனவே, வீராணம் ஏரியில் இருந்து சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக தினமும் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

முதல்வர் உத்தரவையடுத்து, சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடியில் வீராணம் ஏரிக்குள் உள்ள நீர்வாங்கி நெடுமாடத்தின் மூலம் சென்னைக்கு தண்ணீர் அனுப்பும் பணி இன்று தொடங்கியது. வினாடிக்கு 38 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் 45.80 அடியாக உள்ளது. ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. சென்னை குடிநீருக்கு மட்டுமே தற்போது ஏரியில் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

Kattumannarkoil: C

0 கருத்துகள்:

கருத்துரையிடுக