கலிபோர்னியா: செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவின், முதல் மனிதக் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. . அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, கியூரியாசிட்டி விண்கலம் அங்கு தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012
செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரல் பதிவு
ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012
விபத்துக்களை தவிர்க்க மாணவர்கள் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் கலெக்டர் ராஜேந்திரரத்னூ அறிக்கை
விபத்துக்களை தவிர்க்க மாணவர்கள் சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டும்
கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதில் உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தவிர்த்திட மாணவர்கள் சாலைவிதியை கடைபிடிப்பது பற்றி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் எடுத்துரைக்க வேண்டும்.
சனி, 25 ஆகஸ்ட், 2012
SDPI நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி!
சென்னை, ஆக.25-
தி.மு.க.வுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே தொன்றுதொட்டு உறவு இருந்து வருகிறது என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பெருநாள் சந்திப்பு
இந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்.டி.பி.ஐ.) சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெக்லான் பாகவி தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளர் எஸ்.எம்.ரபீக் அகமது, துணைத்தலைவர் ஏ.பிலால் ஹாஜியார், செயலாளர்கள் கே.சையது இப்ராகீம், ஜி.அப்துல் சத்தார், வி.எம்.அபுதாகீர், ஏ.செய்யது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வியாழன், 23 ஆகஸ்ட், 2012
நமதூர் பள்ளிவாசல் தெருவில் ஓர் வபாத் செய்தி
திங்கள், 20 ஆகஸ்ட், 2012
லால்பேட்டை அருகே நடந்த விபத்தில் ஒருவர் மரணம். ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!
லால்பேட்டை மினாதெருவில் இருக்கும் சைலப்பை அப்துல் ரவூப் மகன் ஃபவ்ஜுல் அமீன்,மேலத் தெருவில் இருக்கும் கோஸ் அமானுல்லாஹ்வின் மகன் முஹம்மது ஃபஹத் ஆகிய இருவரும் இன்று மாலை ௪ மணியளவில் மோட்டார் சைக்கிளில் லால்பேட்டை அருகில் உள்ள திருச்சின்னபுரத்தில் இருந்து ஊர் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றோர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.உடனடியாக சிதம்பரம் அண்ணாமலை நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இதில் ஃபவ்ஜுல் அமீன் (வயது18) சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கொள்ளுமேடு - ஓர் வபாத் செய்தி
நமதூர் மாமனத்தார் ஜெகரியாவின் மகன் சலாஹுத்தீன் அவர்கள் இன்று (20.08.12 )கத்தாரில் தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடு டைம்ஸ் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடு டைம்ஸ் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012
கொள்ளுமேடு தமுமுகவின் 2012 பிஃத்ரா விநியோகம்
தமுமுக &அல் ஹைராத் சமுக சேவை மையத்தின் சார்பில் இந்த ஆண்டும் பிஃத்ரா என்னும் தர்ம்மம் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலான குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது . மேலும் இந்த ஆண்டு சிறப்பு அம்சங்களாக காய்கறிகள் சேர்த்து வழங்கப்பட்டதை மக்கள் மிகவும் சந்தோசம் வரவேற்றனர் . இதுவரை யாரும் செய்திடாத வகையில் தமுமுக சிறப்பாக விநியோகம் செய்துயுள்ளதை தமுமுகவிற்கு நிகர் தமுமுகதான் என்று மக்கள் பாராட்டினர் .
எல்லா புகழும் இறைவனுக்கே !
மொத்தம் 126 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட பொருள்கள் 18 அதன் விபரம் ;
அரிசி,சினி ,கோதுமை,து.பருப்பு ,சிக்கன் மசாலா ,எஸ் வி எஸ் ஆயில் , சேமியா ,டால்டா ,பால் , மேரி பிஸ்கட் ,
வழங்கப்பட்ட காய்கறிகள் ;
கத்திரிகாய், தக்காளி பல்லாரி,ஊருளை,தேங்காய் ,ப.மிளகாய் ,கேரட் ,பொதினாமல்லி .
மேற்கண்ட உணவு பொருள்கள் அனைத்து குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
ரமலானில் அறிந்தும் அறியாமலும் செய்த நம்முடைய 'பாவங்களை வல்ல இறைவன் மன்னித்து அருள் புரிவானாக"ஆமின் "
மேலும் சிறப்பு அம்சமாக
வசூல் செய்யப்பட்ட பிஃத்ராயும் , வழங்கப்பட்ட பொருள்கள் விபரத்தையும் , ஊர் பொதுமக்களுக்காக வரவு செலவு கணக்குகளை பிஃத்ரா விநியோகம் செய்யப்பட்டவுடன் அன்று இரவே தமுமுகாவின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டதை ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர் . அல்ஹம்துலில்லாஹ் !!
எல்லா புகழும் இறைவனுக்கே !
மொத்தம் 126 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட பொருள்கள் 18 அதன் விபரம் ;
அரிசி,சினி ,கோதுமை,து.பருப்பு ,சிக்கன் மசாலா ,எஸ் வி எஸ் ஆயில் , சேமியா ,டால்டா ,பால் , மேரி பிஸ்கட் ,
வழங்கப்பட்ட காய்கறிகள் ;
கத்திரிகாய், தக்காளி பல்லாரி,ஊருளை,தேங்காய் ,ப.மிளகாய் ,கேரட் ,பொதினாமல்லி .
மேற்கண்ட உணவு பொருள்கள் அனைத்து குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
ரமலானில் அறிந்தும் அறியாமலும் செய்த நம்முடைய 'பாவங்களை வல்ல இறைவன் மன்னித்து அருள் புரிவானாக"ஆமின் "
மேலும் சிறப்பு அம்சமாக
வசூல் செய்யப்பட்ட பிஃத்ராயும் , வழங்கப்பட்ட பொருள்கள் விபரத்தையும் , ஊர் பொதுமக்களுக்காக வரவு செலவு கணக்குகளை பிஃத்ரா விநியோகம் செய்யப்பட்டவுடன் அன்று இரவே தமுமுகாவின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டதை ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர் . அல்ஹம்துலில்லாஹ் !!
கொள்ளுமேட்டில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பிஃத்ரா விநியோகம்
நமதூர் தவ்ஹீத் ஜமாத்தின் வருடாந்திர பிஃத்ரா விநியோகம் கடந்த வருடத்தைப் போன்றே இந்த ஆண்டும் சிறப்பாக செய்யப்பட்டது.நமதூர் மட்டுமில்லாமல் பக்கத்துக்கு ஊர்களான T.புத்தூர் மற்றும் கந்தகுமாரன் ஊர்களில் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் பிஃத்ரா விநியோகம் செய்யப்பட்டது.அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது தவ்ஹீத் கிளையின் பணிகள் பக்கத்து ஊர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.அல்ஹம்துல்லிலாஹ்...
வசூல் விபரம்:
உள்ளூர் வசூல் (தவ்ஹீத் குடும்பங்கள் மட்டும்) 13,250/-
வெளிநாடு வசூல் : 11,325/-
TNTJதலைமை மூலம் : 10,000/-
மொத்த வசூல்:34,575/-
கொடுக்கப்பட்ட பொருட்கள்:
1.அரிசி
2.கோதுமை ரவா
3.சீனி
4.கருப்பு உளுந்து
5.து.பருப்பு
6.ஆயில்
7.பொ.கடலை
8.செமியா
9.கோழி
thanks kollumeduxpess
வசூல் விபரம்:
உள்ளூர் வசூல் (தவ்ஹீத் குடும்பங்கள் மட்டும்) 13,250/-
வெளிநாடு வசூல் : 11,325/-
TNTJதலைமை மூலம் : 10,000/-
மொத்த வசூல்:34,575/-
கொடுக்கப்பட்ட பொருட்கள்:
1.அரிசி
2.கோதுமை ரவா
3.சீனி
4.கருப்பு உளுந்து
5.து.பருப்பு
6.ஆயில்
7.பொ.கடலை
8.செமியா
9.கோழி
thanks kollumeduxpess
சனி, 18 ஆகஸ்ட், 2012
கொள்ளுமேடு டைம்ஸ் இணையதளம் சார்பாக எல்லோருக்கும் என் இனிய நோன்பு பொருநாள் நல்வாழ்த்துக்கள்...
கொள்ளுமேடு டைம்ஸ் இணையதளம் சார்பாக எல்லோருக்கும் என் இனிய நோன்பு பொருநாள் நல்வாழ்த்துக்கள்...
கொள்ளுமேடு அல்-அமான் நர்சரி & பிரைமரி பள்ளி - இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்
இணைந்தது சமுதாயம்..............!! அதிர்ந்தது எதிரிகளின் கூடாரம்.............!!
அல்லாஹு அக்பர்.............!! அல்லாஹு அக்பர்.............!!
இஸ்லாமிய உலகில் ஏற்பட்ட பிளவுகளே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணம் – மன்னர் அப்துல்லாஹ்
சவூதி அரேபியாவின் புனித நகரான மக்காவில் உலகளாவிய அளவில் நடைபெற்ற இஸ்லாமிய எழுச்சி உச்சி மாநாட்டில் இரு புனித பள்ளிகளின் ஊழியரும், சவூதி அரேபியாவின் மன்னருமான அப்துல்லாஹ், இஸ்லாமிய உலகில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாகவே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டார்,
சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் அவர்களின் இருக்கைக்கும் அருகில் ஈரான் அதிபர் அஹமதி அவர்களுக்கு இருக்கை போடப்பட்டது குறிப்பிடத்தக்கது,
இந்த மாநாட்டில் ஈரான் அதிபர் அஹமதி நிஜாத் அவர்களை மையமாக வைத்து பல சுற்றுகள் பேசப்பட்டது, மேலும் அஹமதி நிஜாத் அவர்கள் கூறுகையில் உலகளாவிய அளவில் முஸ்லிம்களின் நிலை என்ன என்பதை தெளிவாக விவரித்திருந்தார், முன்னதாக அவர் திங்களன்று புனித நகரான மதீனாவுக்கு சென்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
மேலும் செய்தியாளர்களை சந்தித்த அஹமதி நிஜாத் அவர்கள்.... இன்றைய உலகம் மிகவும் நுட்பமான நிலையில் இருப்பதாக எதிரி நாடுகளை பற்றி கருத்து தெரிவித்திருந்தார்,
சிரிய விவகாரத்தில் ஷியா, சுன்னி என இருநாடுகளும் பிரிந்து செயற்படும் நிலையில் மாநாட்டின் முதல் நாளில் இரு நாட்டு தலைவர்களும் அருகருகே அமர்ந்து புன்முருவலுடன் அளவளாவிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அல்ஹம்துலில்லாஹ்..........
இஸ்லாமிய உலகில் ஏற்பட்ட பிளவுகளே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணம் – மன்னர் அப்துல்லாஹ்
சவூதி அரேபியாவின் புனித நகரான மக்காவில் உலகளாவிய அளவில் நடைபெற்ற இஸ்லாமிய எழுச்சி உச்சி மாநாட்டில் இரு புனித பள்ளிகளின் ஊழியரும், சவூதி அரேபியாவின் மன்னருமான அப்துல்லாஹ், இஸ்லாமிய உலகில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாகவே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டார்,
சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் அவர்களின் இருக்கைக்கும் அருகில் ஈரான் அதிபர் அஹமதி அவர்களுக்கு இருக்கை போடப்பட்டது குறிப்பிடத்தக்கது,
இந்த மாநாட்டில் ஈரான் அதிபர் அஹமதி நிஜாத் அவர்களை மையமாக வைத்து பல சுற்றுகள் பேசப்பட்டது, மேலும் அஹமதி நிஜாத் அவர்கள் கூறுகையில் உலகளாவிய அளவில் முஸ்லிம்களின் நிலை என்ன என்பதை தெளிவாக விவரித்திருந்தார், முன்னதாக அவர் திங்களன்று புனித நகரான மதீனாவுக்கு சென்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
மேலும் செய்தியாளர்களை சந்தித்த அஹமதி நிஜாத் அவர்கள்.... இன்றைய உலகம் மிகவும் நுட்பமான நிலையில் இருப்பதாக எதிரி நாடுகளை பற்றி கருத்து தெரிவித்திருந்தார்,
சிரிய விவகாரத்தில் ஷியா, சுன்னி என இருநாடுகளும் பிரிந்து செயற்படும் நிலையில் மாநாட்டின் முதல் நாளில் இரு நாட்டு தலைவர்களும் அருகருகே அமர்ந்து புன்முருவலுடன் அளவளாவிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அல்ஹம்துலில்லாஹ்..........
வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012
அஸ்ஸாமில் மீண்டும் கலவரம்: ஒன்பது பேர் கவலைக்கிடம்!
கொக்ராஜர்:அஸ்ஸாமில் கொக்ராஜரில் மீண்டும் உருவான கலவரத்தில் ஒன்பது பேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. காமரூப் மாவட்டத்திலும் கலவரம் பரவியுள்ளது.
கொக்ராஜரில் கோஸாயிகான் நகரத்தில் ஷேர் ஆட்டோவில் பயணித்த சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த குடும்பத்தினர் மீது ஆசிட் வீசப்பட்டது. இதில் காயமடைந்த 9 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு தொடருகிறது. காமரூப் மாவட்டத்தில் ரங்கியா பகுதியில் கலவரம் பரவியுள்ளது. இங்கு ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின. இதனைத் தொடர்ந்து இங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காமரூப் மாவட்டத்தில் ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளது. பக்ஸாரில் இருந்து ரங்கியாவுக்கு சென்றுகொண்டிருந்த கார் ஒன்று காந்திபாரியில் வைத்து புதன்கிழமை இரவு தீவைத்துக் கொளுத்தப்பட்டது. காரின் ஓட்டுநர் ஷாஹிதுல் ஹுஸைனை காணவில்லை. தகவல் அறிந்த ஊர்மக்கள் ரங்கியாவில் தேசிய நெடுஞ்சாலையை மறித்தனர். வியாழக்கிழமை ரங்கியா எஸ்.டி.ஒ பர்ணாலி தேகாவின் காரையும் தாக்க முயற்சி நடந்தது. இதுத்தொடர்பான வழக்கில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
வன்முறையைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகையை பிரயோகித்து வானை நோக்கி சுட்டனர். எஸ்.டி.ஒ பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், குவஹாத்திக்கு சென்றுக்கொண்டிருந்தஒரு பேருந்தையும், தேசிய பாதையில் சிக்கிய ஏராளமானவாகனங்களையும் கேகாஹந்தியில் ஒரு மரப்பாலத்தையும் வன்முறைக் கும்பல் தீவைத்துக் கொளுத்தியுள்ளது.
உயர் மாவட்ட அதிகாரி அப்பகுதியில் முகாமிட்டுள்ளார். காம்ரூப் மாவட்டத்தில் வன்முறை தொடர்ந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கொக்ராஜரில் கோஸாயிகான் நகரத்தில் ஷேர் ஆட்டோவில் பயணித்த சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த குடும்பத்தினர் மீது ஆசிட் வீசப்பட்டது. இதில் காயமடைந்த 9 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு தொடருகிறது. காமரூப் மாவட்டத்தில் ரங்கியா பகுதியில் கலவரம் பரவியுள்ளது. இங்கு ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின. இதனைத் தொடர்ந்து இங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காமரூப் மாவட்டத்தில் ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளது. பக்ஸாரில் இருந்து ரங்கியாவுக்கு சென்றுகொண்டிருந்த கார் ஒன்று காந்திபாரியில் வைத்து புதன்கிழமை இரவு தீவைத்துக் கொளுத்தப்பட்டது. காரின் ஓட்டுநர் ஷாஹிதுல் ஹுஸைனை காணவில்லை. தகவல் அறிந்த ஊர்மக்கள் ரங்கியாவில் தேசிய நெடுஞ்சாலையை மறித்தனர். வியாழக்கிழமை ரங்கியா எஸ்.டி.ஒ பர்ணாலி தேகாவின் காரையும் தாக்க முயற்சி நடந்தது. இதுத்தொடர்பான வழக்கில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
வன்முறையைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகையை பிரயோகித்து வானை நோக்கி சுட்டனர். எஸ்.டி.ஒ பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், குவஹாத்திக்கு சென்றுக்கொண்டிருந்தஒரு பேருந்தையும், தேசிய பாதையில் சிக்கிய ஏராளமானவாகனங்களையும் கேகாஹந்தியில் ஒரு மரப்பாலத்தையும் வன்முறைக் கும்பல் தீவைத்துக் கொளுத்தியுள்ளது.
உயர் மாவட்ட அதிகாரி அப்பகுதியில் முகாமிட்டுள்ளார். காம்ரூப் மாவட்டத்தில் வன்முறை தொடர்ந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
லால்பேட்டை அபுதாபி ஜமாஅத் சார்பில் நடைபெற்ற லைலத்துல் கதர் இரவு நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் வழக்கம்போல் இவ்வருடமும் ரமலான் பிறை 27 அன்று லைலத்துல் கதர் சிறப்பு சொற்பொழிவு தஸ்பீஹ் தொழுகை சிறப்பு துஆ உள்ளிட்ட அமல்கள் நடைப்பெற்றது.
காலிதியாவில் உள்ள மஸ்ஜிதே அபு உபைதாவில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு செயற்குழு உறுப்பினர் சுகைபுதீன் தலைமை வகித்தார். ஜமாத்தின் மூத்த தலைவர் ஹாஜி முஹம்மது ஹசன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ஜாபர் அலி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அபுதாபி லைலத்துல் கதர் கமிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்த தமிழ் நாடு மாநில ஜமாத்துல் உலமா சபைத் தலைவரும்,லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பேராசிரியருமான ஷைகுல் ஹதீஸ் மவ்லானா ஏ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரை நிகழ்த்தி விட்டு விடைபெற்று சென்றார்.
தொடர்ந்து லைலத்துல் கதர் சிறப்புக்களை விளக்கி ஹாபிள் ஹுசைன் மக்கி ஆலிம் அவர்களும்,ஜமாஅத் ஒற்றுமையை வலியுறுத்தி மெளலானா இம்ரானுல்லா பிலாலி அவர்களும் உரை நிகழ்த்தினர்.இறுதியில் தஸ்பீஹ் தொழுகையை ஹாபிள் இர்ஷாத் அஹமத் நடத்தினார்.ஹாபிள் ஹுசைன் மக்கி ஆலிம் சிறப்பு துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியை லால்பேட்டை அபுதாபி ஜமாத்தின் பொதுச்செயலாளர் யாசிர் அரபாத் அலி,பொருளாளர் முஹம்மது இலியாஸ்,தணிக்கையாளர் அப்துல் மாலிக், மற்றும் ஜமாஅத் உறுப்பினர்கள் சிறப்பாக ஒருங்கினைத்திருன்தனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சஹர் உணவு வழங்கப்பட்டது.
புதன், 15 ஆகஸ்ட், 2012
கொள்ளுமேடு அல்-அமான் நர்சரி & பிரைமரி பள்ளி 66 வது சுதந்திர தின கொண்டாட்டம்
நோன்புப் பெருநாள் தர்மம்
முன்னுரை
ஜகாத்துல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம் முஸ்லிம்களால் மறக்கடிக்கப்பட்டதும், தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதுமான கடமையாகும். நாம் அதன் முழுவிபரங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
1. கடமை:
‘முஸ்லிமான ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, அடிமையல்லாதவர் ஆகிய அனைவர் மீதும் ரமளானில் நோன்புப் பெருநாள்
தர்மமாக பேரீத்தம் பழம், கோதுமை ஆகியவற்றில் ஒரு ‘ஸாஉ’ கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புகாரி 1503, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா)
‘கடமையாக்கினார்கள்’ என்ற வாசகத்திலிருந்து நோன்புப் பெருநாள் தர்மம் கடமை என்பதை புரிந்து கொள்ளலாம்.
2. நேரம்:
‘நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்னால் கொடுத்து விடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புஹாரி 1509, முஸ்லிம், அஹ்மது, அபூதாவூது, நஸயீ, திர்மிதி)
நபித்தோழர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாகவே கொடுத்து விடுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புஹாரி)
நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்பே கொடுத்துவிட வேண்டும். அவற்றை ஏழைகளுக்கு வினியோகிக்கும் பொருட்டு முன்னரே கொடுப்பது நல்லது.
3. நோக்கமும் பயனும்:
‘நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபடுவதற்குப் பரிகாரமாகவும் எழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்றுக்கொள்ளப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூற்கள்: அபூதாவூது, இப்னுமாஜா, தாரகுத்னீ)
இந்த ஹதீஸில் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாக்கப்பட்டதின் நோக்கம் கூறப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகைக்கு பின்பு நிறைவேற்றுவது ஸகாத்துல் பித்ராக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, சாதாரண தர்மமாகவே அமைந்து விடும்.
4. அளவு:
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாஉ, பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ, பாலாடைக் கட்டியில் ஒரு ஸாஉ, உலர்ந்த திராட்சையில் ஒரு ஸாஉ என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்’ என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
ஒரு ஸாஉ என்பது நான்கு முத்துக்கள் ஆகும், ஒரு முத்து என்பது இரண்டு கைகளை சேர்த்து ஒரு முறை அள்ளப்பட்ட கொள்ளளவாகும். அதாவது ஒரு ஸாஉ என்பதன் தோராயமான அளவு 2.5 கிலோ எடையாகும்.
5. கூட்டாக வசூல் செய்வது:
‘ரமளானில் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 3275)
நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ என்று நோன்புப் பெருநாள் தர்மத்தை நிர்ணயம் செய்திருந்தார்கள். ஒரு மனிதர் மட்டமான பேரீத்தம் பழங்களைக் கொண்டு வந்தார். அதை நபி (ஸல்) அவர்கள் இந்த பேரீத்தம் பழங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி), நூல்: ஹாக்கிம்)
நோன்புப் பெருநாள் தர்மத்தை கூட்டாக வசூல் செய்து பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது என்பதை இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. ‘ரமளானில் ஸகாத்தைப்’ என்ற வாசகம் அது நோன்புப் பெருநாள் தர்மம்தான் என்பதைச் சொல்கிறது.
முறையாக வசூல் செய்து வினியோகம் செய்யும் போது நோன்புப் பெருநாள் தர்மம் ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் சென்று குவிந்து விடாமல் தடுக்கப்படுவதோடு, ‘பெருநாளின் போது ஏழைகளை கையேந்த வைக்காதீர்கள்’ என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு ஏற்ப ஏழைகளை அடையாளம் கண்டு அவர்களிடம் சென்று வினியோகம் செய்ய வேண்டும்.
முடிவுரை:
நோன்புப் பெருநாள் தர்மத்தை வசூல் செய்து வினியோகம் செய்ய ஒரு குழுவினரை நியமிப்பது அவசியம். அந்த கடமையை நிறைவேற்றுபவர்கள் தனியொரு நபருக்கு கொடுப்பதை தவிர்த்து, இப்படிப்பட்ட குழுவினரை அடையாளம் கண்டு செலுத்துவதும் அவசியத்திலும் அவசியம்.
கொள்ளுமேடு ஓர் வபாத் செய்தி
நமதூர் தெற்கு தெருவில் வசித்த மர்ஹும் மங்கலத்தார் ஜியாவுதீன் அவர்களின் தாயார் எஹ்சான் பீவி அவர்கள் இன்று தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடு டைம்ஸ் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012
ஆகஸ்ட் - 15 சுதந்திர தின வாழ்த்துக்கள்.
நமது இணையதள வாசகர்களுக்கும், சமுதாய சொந்தங்களுக்கும் AL-AMAN N&P SCHOOL-KOLLUMEDU
kollumedutimes.com இணையதளம் சார்பாக எங்களது சுதந்திர தின நல வாழ்த்துகள்... இந் நன்னாளில் மதவெறியை மாய்த்து, தேச துரோக சூழ்சிகளை தவிடுபொடியாக்கி இந்தியாவிற்கு எதிராக எழும் தடைகளையும் தகர்த்தெறிந்து இந்திய தேசத்தின் சுதந்திரத்தை பேனிக்காக எல்லோரும் உறுதிமொழி எடுப்போம். இந்திய சுதந்திரப்போராட்ட தியாகிகளின் வரலாற்றையும் நினைவுபடுத்துவோம்.
kollumedutimes.com இணையதளம் சார்பாக எங்களது சுதந்திர தின நல வாழ்த்துகள்... இந் நன்னாளில் மதவெறியை மாய்த்து, தேச துரோக சூழ்சிகளை தவிடுபொடியாக்கி இந்தியாவிற்கு எதிராக எழும் தடைகளையும் தகர்த்தெறிந்து இந்திய தேசத்தின் சுதந்திரத்தை பேனிக்காக எல்லோரும் உறுதிமொழி எடுப்போம். இந்திய சுதந்திரப்போராட்ட தியாகிகளின் வரலாற்றையும் நினைவுபடுத்துவோம்.
திங்கள், 13 ஆகஸ்ட், 2012
தமுமுக முன்னால் தலைவர் எஸ்.எம். ஜின்னா மறைவு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முன்னால் துனைத் தலைவரும் கடலூர் மாவட்ட முன்னால் தலைவருமான எஸ்.எம். ஜின்னா அவர்கள் இன்று 13.08.2012 காலை 10 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாசா அவரின் சொந்த ஊரான சிதம்பரம் அருகில் உள்ள பின்னத்தூரில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடு தமுமுக கொள்ளுமேடு டைம்ஸ் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
தமுமுகவின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் ஜின்னா மரணம்
தமுமுகவின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் ஜின்னா மரணம்
தமுமுகவின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தின் தலைவராகவும், பின்பு மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றிய S.M. ஜின்னா அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்
தமுமுகவின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தின் தலைவராகவும், பின்பு மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றிய S.M. ஜின்னா அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்
கள். (இன்னாலில்லாஹி...). அவருக்கு வயது 64. அவருக்கு ஒரு மனைவியும் 4 ஆண் பிள்ளைகளும், 3 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்தாலும், தொடர்ந்து இயக்கப் பணிகளில் ஈடுபாடு காட்டி வந்தார். கடந்த ஜூலை 14 அன்று லால்பேட்டையில் நடைபெற்ற தமுமுக பொதுக்கூட்டத்தில் சிறப்பாக உரையாற்றினார். எப்போதும் கலகலப்பாக இருப்பதும், எதையும் இலகுவாக எடுத்துக்கொள்வதும் அவரது சிறப்பு குணங்களாகும்.
இன்று காலை சஹர் முதல் அவருக்கு ஏற்பட்ட மூச்சு திணறல் அவரை இறைவனிடம் சேர்த்து விட்டது.
தகவல் அறிந்த கடலூர் மாவட்ட தமுமுக, மமக வினர் அவரது சொந்த ஊரான பின்னத்தூருக்கு விரைந்து சென்று அங்கேயே முகாமிட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதிலிருந்து சமுதாய ஆர்வலர்களும், பொதுமக்களும் அவரது ஜனாஸாவை பார்க்க சென்று கொண்டுள்ளனர்.
நாளை காலை 9 மணிக்கு அவரது ஜனாஸா சிதம்பரம் அருகே அவரது சொந்த ஊரான பின்னத்தூரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
அதில் தலைமை நிர்வாகிகள், அண்டை மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.
விவசாய சங்கங்களின் நிர்வாகியாகவும் பணியாற்றியதோடு, பல தரப்பு மக்களோடும் நல்லுறவை வைத்திருந்த S.M. ஜின்னா அவர்களின் இழப்பு இயக்கத்திற்கு ஒரு பேரிழப்பு என்றும், அவரது மறுமை வாழ்வுக்காக அனைவரும் பிராத்திப்போம் என்றும் தமுமுக தலைவர் J.S. ரிபாயி தெரிவித்துள்ளார்.
சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்தாலும், தொடர்ந்து இயக்கப் பணிகளில் ஈடுபாடு காட்டி வந்தார். கடந்த ஜூலை 14 அன்று லால்பேட்டையில் நடைபெற்ற தமுமுக பொதுக்கூட்டத்தில் சிறப்பாக உரையாற்றினார். எப்போதும் கலகலப்பாக இருப்பதும், எதையும் இலகுவாக எடுத்துக்கொள்வதும் அவரது சிறப்பு குணங்களாகும்.
இன்று காலை சஹர் முதல் அவருக்கு ஏற்பட்ட மூச்சு திணறல் அவரை இறைவனிடம் சேர்த்து விட்டது.
தகவல் அறிந்த கடலூர் மாவட்ட தமுமுக, மமக வினர் அவரது சொந்த ஊரான பின்னத்தூருக்கு விரைந்து சென்று அங்கேயே முகாமிட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதிலிருந்து சமுதாய ஆர்வலர்களும், பொதுமக்களும் அவரது ஜனாஸாவை பார்க்க சென்று கொண்டுள்ளனர்.
நாளை காலை 9 மணிக்கு அவரது ஜனாஸா சிதம்பரம் அருகே அவரது சொந்த ஊரான பின்னத்தூரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
அதில் தலைமை நிர்வாகிகள், அண்டை மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.
விவசாய சங்கங்களின் நிர்வாகியாகவும் பணியாற்றியதோடு, பல தரப்பு மக்களோடும் நல்லுறவை வைத்திருந்த S.M. ஜின்னா அவர்களின் இழப்பு இயக்கத்திற்கு ஒரு பேரிழப்பு என்றும், அவரது மறுமை வாழ்வுக்காக அனைவரும் பிராத்திப்போம் என்றும் தமுமுக தலைவர் J.S. ரிபாயி தெரிவித்துள்ளார்.
சிதம்பரம்-ஆத்தூர் புதிய ரயில்பாதை திட்டத்தை அறிவிக்கக் கோரிக்கை
சிதம்பரம், ஆக. 11: சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில், மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், அரியலூர் வழியாக ஆத்தூர் வரையிலான புதிய ரயில் பாதை திட்டத்துக்கு புதுதில்லி ரயில்வே போர்டு அனுமதி வழங்க வேண்டும் என தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.வி.எம்.எஸ்.சரவணக்குமார், ரயில்வே அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
÷கடித விவரம்: கடந்த 2008-2009 ரயில்வே பட்ஜெட்டில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பரிந்துரையின் பேரில் சிதம்பரத்திலிருந்து ஆத்தூர் வரை (சிதம்பரம், குமராட்சி, காட்டுமன்னார்கோயில், மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், குன்னம், அரியலூர், ஆத்தூர்) புதிய ரயில்பாதையை அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார். அதனடிப்படையில் 2009 ஜூன் மாதம் ரயில்வே போர்டுக்கு இத்திட்டத்தின் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு முதல் புதுதில்லி ரயில்வே போர்டு அனுமதிக்காக இத்திட்டம் காத்திருக்கிறது. இந்த புதிய ரயில்பாதைக்கு அனுமதி வழங்குவதன் மூலம் மிகவும் பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம் பொருளாதார ரீதியாக முன்னேற வாய்ப்புள்ளது. இத்திட்டம் ஆங்கிலேயர் காலத்தின் கனவு திட்டமாக உள்ளது.
எனவே இத்திட்டத்துக்கு மத்திய ரயில்வே போர்டு அனுமதி வழங்கி திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மயிலாடுதுறை முதல் சென்னை வரை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க அறிவிப்பு வெளியிட வேண்டும். சிதம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதலாக டிக்கெட் புக்கிங் கவுன்ட்டர் திறக்க வேண்டும் என சரவணக்குமார் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012
மஸ்ஜிதுல் அக்ஸா:ஜும்ஆ தொழுகையில் 3.5 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்பு!
ஜெருசலம்:இஸ்லாத்தில் மூன்று முக்கிய புனித மஸ்ஜிதுகளில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸாவில் ரமலானின் நான்காவது வெள்ளிக்கிழமையன்று மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையில் பங்கேற்றனர்.
இஸ்ரேலின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி லட்சக்கணக்கான மக்கள் பரிசுத்தமான மஸ்ஜிதில் நடந்த ஜும்ஆவில் கலந்துகொண்டனர்.
மஸ்ஜிதுல் அக்ஸாவில் ஜும்ஆ உரை நிகழ்த்திய இமாம் தனது உரையில் கூறியது: ‘ஃபலஸ்தீன் மற்றும் புனித மஸ்ஜிதான மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பது உலக முஸ்லிம்களின் கடமையாகும். இவற்றின் பாதுகாப்பு என்பது உலக முஸ்லிம்களின் நம்பிக்கையில் உட்பட்டதாகும். எல்லா வேற்றுமைகளையும் மறந்து முஸ்லிம்கள் ஒன்றிணைந்து குத்ஸின் விடுதலைக்காக பாடுபட வேண்டும்’ என கூறினார்.
மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் குப்பத்துஸ்ஸுஹ்ராவின் முற்றங்கள் ஆண்கள் மற்றும் பெண்களால் நிரம்பி வழிந்தன. ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஃபலஸ்தீன் மற்றும் இதர நாடுகளில் உயிர் தியாகம் புரிந்த முஸ்லிம்களுக்கு ஜனாஸா தொழுகையும்(இறந்தவர்களுக்கான பிரார்த்தனை) சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றன.
ஜெயலலிதாவின் திமிர்தன அரசியலும், கலைஞரின் வெற்றியும்… எம்.தமிமுன் அன்சாரி
- எம்.தமிமுன் அன்சாரி
‘டெசோ’வின் சார்பில் ஈழத்தமிழன் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு இன்று (12.08.2012) சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடக்க விருந்த நிலையில், தமிழக அரசு அந்த மாநாட்டுக்கு அனுமதி மறுத்திருக்கிறது.
இது கலைஞருக்கு கிடைத்திருக்கும் அரிய வெற்றியாகும். இம்மாநாடு குறித்து பெரும் கண்டனங்களையும், கடும் விவாதங்களையும் சந்தித்த கலைஞரை, முதல்வர் ஜெயலலிதாவின் இச்செயல் காப்பாற்றியிருக்கின்றது.
ஈழத்தமிழர் விவகாரத்தில் திமுக இந்த அளவுக்கு முன்னேறியிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். ஈழத்தமிழர்கள் கடைசிக் கட்ட போரில் பரிதவித்து நின்றபோது. காங்கிரஸ் ‘கூட்டணியின்’ நலனுக்காக அவர் செயலற்று இருந்தார். அந்த கருப்பு நாட்களை கழுவ கலைஞருக்கு இம்மாநாடு ஒரு சிறிய வாய்ப்பை வழங்கியுள்ளது.
தனித்தமிழ் ஈழம் கோரும் மாநாடாக இது அமைந்திருந்தால், உலகத் தமிழ்ர்களின் பெரும் வரவேற்பை இம்மாநாடு பெற்றிருந்திருக்கும்.
ஆனால், மத்திய அரசியல் பங்கேற்றுக் கொண்டு இந்திய வெளியுறவு ‘கொள்கைக்கு’ எதிராக செயல்பட ‘கூட்டணி தர்மம்’ அனுமதிக்கவில்லை.
அதைவிட முக்கிய காரணம் ஒன்று உண்டு. அதை யாருமே கவனிக்கவில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு கோறும் தீர்மானத்தை திமுக நிறைவேற்றினால், அது இந்தியாவை பீதிக்குள்ளாக்கும்.
காரணம், காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் என பாகிஸ்தான் செய்து வரும் சர்வதேச பிரச்சாரத்தை அது வேறு வகையில் நியாயப்படுத்தி விடும்.
மத்திய உளவுத் துறையும், வெளியுறவு ராஜதந்தீரிகளும் இதை மன்மோகன் சிங்கிடமும், ப.சிதம்பரத்திடமும் சுட்டிக் காட்டிய பிறகுதான் அவர்கள் தங்களின் ‘தர்மசங்கடத்தை’ கலைஞரிடம் சுட்டிக் காட்டி, தனி ஈழ தீர்மானத்தை கைவிட செய்திருக்கிறார்கள்.
இவ்விஷயத்தில் கலைஞர் பின் வாங்கியது, ஈழத்தமிழர் விவகாரத்தில் அவரை ஒரு சந்தர்ப்பவாதியாக தோற்றம் ஏற்படுத்திவிட்டது என்னவோ உண்மை!
அவை எல்லாவற்றையும் மீறி கலைஞரின் ‘டெசோ’ முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. எப்படி? மாநாட்டிற்கு தமிழக அரசு விதித்த தடைதான் அதற்கு காரணம்!
முதல்வர் ஜெயலலிதாவின் ‘திமிர்’ தன அரசியல், கலைஞரே எதிர்பார்க்காத வெற்றியை அவருக்கு கொடுத்திருக்கிறது.
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012
லைலத்துல் கத்ர் இரவு
முன்னுரை:
‘இந்த திருக்குர்ஆனை மகத்துவமிக்க இரவில் நாம் இறக்கினோம். மகத்துவமிக்க இரவைப் பற்றி உமக்குத் தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும்’. (அல்குர்ஆன் 97:1-3)
லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். பல வருடங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஒரு இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
1. சிறப்புகள்:
‘இந்த திருக்குர்ஆனை மகத்துவமிக்க இரவில் நாம் இறக்கினோம். மகத்துவமிக்க இரவைப் பற்றி உமக்குத் தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும்’. (அல்குர்ஆன் 97:1-3)
சிறப்புகள்: 1. அல்குர்ஆன் இறக்கப்பட்ட இரவு. 2. ரமளான் மாதத்தில் ஒரு இரவு 3. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு.
2. அது எந்த இரவு?:
‘..ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி – 722)
‘நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவர்களுடனும் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்து விட்டேன். எனவே அதைக் கடைசிப்பத்து நாட்களில் தேடுங்கள்’ என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூற்கள்: முஸ்லிம், அஹ்மது)
மேற்கண்ட ஹதீஸ்கள் ரமளானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.
‘லைலத்துல் கத்ர் இரவை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள்’ என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)
இந்த ஹதீஸில் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் அது இருக்கிறது என்றும் மேலும் சில ஹதீஸ்களில் குறிப்பிட்ட நாளின் இரவில் அது இருக்கிறது என்றும் வந்துள்ளது. இருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் மறந்து விட்டதால் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் தேடுவதே சிறந்ததாகும்.
3. லைலத்துல் கத்ரை தேடுவது:
‘நபி (ஸல்) அவர்கள் மற்ற நாட்களில் முயற்சிக்காத அளவு கடைசிப் பத்து நாட்கள் முயற்சிப்பார்கள்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: இப்னுமாஜா, அஹ்மது, திர்மிதி 726)
4. லைலத்துல் கத்ர் இரவில் வணக்க வழிபாடு:
‘ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தினரை (வணக்கத்தில் ஈடுபடுவதற்காக) விழித்திருக்கச் செய்வார்கள்’ இதை அலி (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: திர்மிதி 725, அஹ்மது)
‘ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தினரை (வணக்கத்தில் ஈடுபடுவதற்காக) விழித்திருக்கச் செய்வார்கள்’ இதை அலி (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: திர்மிதி 725, அஹ்மது)
5. (இஃதிகாப்) பள்ளியில் தங்குதல்:
‘நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்’. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: திர்மிதி 720, அஹ்மது)
‘நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்’. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: திர்மிதி 720, அஹ்மது)
6. இரவு வணக்கமும் பாவமன்னிப்பும்:
‘நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி 619, அபூதாவூது, முஅத்தா)
‘நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி 619, அபூதாவூது, முஅத்தா)
7. லைலத்துல் கத்ரின் துஆ:
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
‘அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று நான் கேட்டேன். அதற்கு, ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி’ என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي
பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!’
முடிவுரை:
லைலத்துல் கத்ர் இரவின் முழுமையான பயனை அடைந்து கொள்ள ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் முயற்சிப்போமாக! அதற்கு அல்லாஹ் நமக்கு உதவிடுவானாக!
லைலத்துல் கத்ர் இரவின் முழுமையான பயனை அடைந்து கொள்ள ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் முயற்சிப்போமாக! அதற்கு அல்லாஹ் நமக்கு உதவிடுவானாக!
மியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை - சென்னையில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்
மேற்கு பர்மாவில் முஸ்லிம்கள் திரளாக வசித்துவரும் ராகின் மாநிலத்தில் பௌத்த வெறிக்கும்பல் அரசாங்கத்தின் ஆதரவோடு முஸ்லிம்களை ஈவிரக்கம் இல்லாமல் இனப்படுகொலை செய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் இந்த வெறியாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டுள்ளனர். புத்த பிக்குகள் கொலைப்படையை வழிநடத்துவதும், துப்பாக்கிகளோடு திரிவதும் இணையதங்களில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
ராகின் தேசியவாதிகள் எனப்படும் பௌத்த பயங்கரவாதிகளால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்வது 1942ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து வருகிறது. 18.03.1942 அன்று 5 ஆயிரம் ராகின் முஸ்லிம்கள் பௌத்த பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இன்றுவரை அந்த வெறியாட்டம் பௌத்த பேரினவாதப் பின்னணியோடும் அரசு ஆதரவோடும் தொடர்ந்து வருகிறது.
குடியுரிமை மறுக்கப்பட்டு கல்வி வேலைவாய்ப்புகளில் ஒடுக்கப்பட்டு கொடுமைகள் இழைக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் பீதியோடு நிறுத்தப்பட்டுள்ள வறுமை முஸ்லிம்களுக்கு தமுமுக தனது தார்மீக ஆதரவைத் தெரிவிப்பதோடு, மத்திய அரசு மியான்மர் அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டுமென்றும், மியான்மர் தூதரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென்றும் தமுமுக வலியுறுத்துகிறது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் முஸ்லிம்கள் போடோ பயங்கரவாதி களால் சொல்லொணா துயருக்கு ஆளாகியுள்ளனர். உண்மை அறியும் குழுக்களின் அறிக்கையின்படி இதுவரை மூன்று லட்சம் மக்கள் 300 அகதி முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதும், 73 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. அகதி முகாம்களிலும் முஸ்லிம்கள் மிகப்பெரிய கொடுமைகளை சந்தித்து வருகின்றனர்.
சங்பரிவாரத்தால் இயக்கப்படும் போடோ பயங்கரவாதிகள் மண்ணின் மைந்தர்களான அஸ்ஸாமிய முஸ்லிம்களை "ஊடுருவல்காரர்கள்' என்று கொச்சைப்படுத்தி பச்சைப்படுகொலை செய்து வருகின்றனர்.
1983ஆம் ஆண்டு சங்பரிவார் மாணவர் அமைப்பான ஆஆநம (AASU (All Assam Students Union)ஐ பயன்படுத்தி வன்முறையை உருவாக்கி ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர்.
நெல்லிப் படுகொலைகள் எனப்படும் இந்த முஸ்லிம் இனப்படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பூபன்தாஸ் திவாரி ஆணையத்தை முடக்கி, அதன் அறிக்கைகளை குப்பையில் வீசி, பயங்கரவாதிகளைத் தப்பிக்கவைத்தது சங்பரிவார ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அஸ்ஸாம் கன பரிஷத்.
இப்போது மீண்டும் போடோக்கள், பயங்கர ஆயுதங்களுடன் கோக்ரஜா, பஸ்கா, சிராங், உதல்கிரி ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தும், வீடுகளை இடித்தும் சீரழித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இந்த வன்முறைகளை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றன.
அவலங்களால் சூழப்பட்டு, அபலைகளாய் நிற்கும் அஸ்ஸாமிய முஸ்லிம்களுக்கும் தமுமுக தனது தார்மீக ஆதரவைத் தெரிவிக்கிறது.
கொடுமைக்குள்ளான முஸ்லிம்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய இழப்பீடு தருவதோடு, அவர்களின் பாதுகாப்பான வாழ்வுக்கு உரிய ஏற்பாடுகளை செய்துதர வேண்டுமென தமுமுக கோருகிறது.
ஆயுதங்களை முழுமையாக ஒப்படைக்காமல் சீனா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளின் ஆதரவோடு வெறியாட்டம் நடத்திவரும் போடோ பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென தமுமுக வலியுறுத்துகிறது.
மேற்கண்ட முஸ்லிம் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், அதற்காக தீர்வு காண வலியுறுத்தியும் தமுமுக சார்பில் 10.08.2012 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மூத்த தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம். அனிபா, மாநிலச் செயலாளர்கள் பேராசிரியர் ஜெ. ஹாஜாகனி, பி.எஸ். ஹமீது, மீரான் மொய்தீன், மமக இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், வடசென்னை, தென்சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேறறு தங்கள் உணரவுகளை வெளிப்படுத்தினர்.
ராகின் தேசியவாதிகள் எனப்படும் பௌத்த பயங்கரவாதிகளால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்வது 1942ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து வருகிறது. 18.03.1942 அன்று 5 ஆயிரம் ராகின் முஸ்லிம்கள் பௌத்த பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இன்றுவரை அந்த வெறியாட்டம் பௌத்த பேரினவாதப் பின்னணியோடும் அரசு ஆதரவோடும் தொடர்ந்து வருகிறது.
குடியுரிமை மறுக்கப்பட்டு கல்வி வேலைவாய்ப்புகளில் ஒடுக்கப்பட்டு கொடுமைகள் இழைக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் பீதியோடு நிறுத்தப்பட்டுள்ள வறுமை முஸ்லிம்களுக்கு தமுமுக தனது தார்மீக ஆதரவைத் தெரிவிப்பதோடு, மத்திய அரசு மியான்மர் அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டுமென்றும், மியான்மர் தூதரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென்றும் தமுமுக வலியுறுத்துகிறது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் முஸ்லிம்கள் போடோ பயங்கரவாதி களால் சொல்லொணா துயருக்கு ஆளாகியுள்ளனர். உண்மை அறியும் குழுக்களின் அறிக்கையின்படி இதுவரை மூன்று லட்சம் மக்கள் 300 அகதி முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதும், 73 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. அகதி முகாம்களிலும் முஸ்லிம்கள் மிகப்பெரிய கொடுமைகளை சந்தித்து வருகின்றனர்.
சங்பரிவாரத்தால் இயக்கப்படும் போடோ பயங்கரவாதிகள் மண்ணின் மைந்தர்களான அஸ்ஸாமிய முஸ்லிம்களை "ஊடுருவல்காரர்கள்' என்று கொச்சைப்படுத்தி பச்சைப்படுகொலை செய்து வருகின்றனர்.
1983ஆம் ஆண்டு சங்பரிவார் மாணவர் அமைப்பான ஆஆநம (AASU (All Assam Students Union)ஐ பயன்படுத்தி வன்முறையை உருவாக்கி ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர்.
நெல்லிப் படுகொலைகள் எனப்படும் இந்த முஸ்லிம் இனப்படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பூபன்தாஸ் திவாரி ஆணையத்தை முடக்கி, அதன் அறிக்கைகளை குப்பையில் வீசி, பயங்கரவாதிகளைத் தப்பிக்கவைத்தது சங்பரிவார ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அஸ்ஸாம் கன பரிஷத்.
இப்போது மீண்டும் போடோக்கள், பயங்கர ஆயுதங்களுடன் கோக்ரஜா, பஸ்கா, சிராங், உதல்கிரி ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தும், வீடுகளை இடித்தும் சீரழித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இந்த வன்முறைகளை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றன.
அவலங்களால் சூழப்பட்டு, அபலைகளாய் நிற்கும் அஸ்ஸாமிய முஸ்லிம்களுக்கும் தமுமுக தனது தார்மீக ஆதரவைத் தெரிவிக்கிறது.
கொடுமைக்குள்ளான முஸ்லிம்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய இழப்பீடு தருவதோடு, அவர்களின் பாதுகாப்பான வாழ்வுக்கு உரிய ஏற்பாடுகளை செய்துதர வேண்டுமென தமுமுக கோருகிறது.
ஆயுதங்களை முழுமையாக ஒப்படைக்காமல் சீனா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளின் ஆதரவோடு வெறியாட்டம் நடத்திவரும் போடோ பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென தமுமுக வலியுறுத்துகிறது.
மேற்கண்ட முஸ்லிம் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், அதற்காக தீர்வு காண வலியுறுத்தியும் தமுமுக சார்பில் 10.08.2012 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மூத்த தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம். அனிபா, மாநிலச் செயலாளர்கள் பேராசிரியர் ஜெ. ஹாஜாகனி, பி.எஸ். ஹமீது, மீரான் மொய்தீன், மமக இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், வடசென்னை, தென்சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேறறு தங்கள் உணரவுகளை வெளிப்படுத்தினர்.
50% ஞாபக மறதியை கட்டுப்படுத்தலாம்! ஆய்வில்!!
வாஷிங்டன்: குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்கால கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல் அவீவ், யாஃபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இத்தகைய நபர்களுக்கு நோயின் கடுமை 24 சதவீதம் குறைவாக இருக்கும் என ஆய்வில் கூறப்படுகிறது. அல்ஸிமர்ஸ் நோயை தடுக்க இதர பயிற்சி வகைகளை விட குறித்த நேரத்தில் தொழுவதால் இரட்டிப்பு பலன் கிடைப்பதாக ஆய்வு கூறுகிறது.
குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைப்பதாக இந்த ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் Rivka Inzelberg கூறுகிறார்.
65 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 92 பேருக்கு மட்டுமே ஞாபக மறதி நோய் பாதித்துள்ளது. 300 பேருக்கு சிறிய அளவில் பாதித்துள்ளது. மீதமுள்ளோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
டெல் அவீவ், யாஃபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இத்தகைய நபர்களுக்கு நோயின் கடுமை 24 சதவீதம் குறைவாக இருக்கும் என ஆய்வில் கூறப்படுகிறது. அல்ஸிமர்ஸ் நோயை தடுக்க இதர பயிற்சி வகைகளை விட குறித்த நேரத்தில் தொழுவதால் இரட்டிப்பு பலன் கிடைப்பதாக ஆய்வு கூறுகிறது.
குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைப்பதாக இந்த ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் Rivka Inzelberg கூறுகிறார்.
65 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 92 பேருக்கு மட்டுமே ஞாபக மறதி நோய் பாதித்துள்ளது. 300 பேருக்கு சிறிய அளவில் பாதித்துள்ளது. மீதமுள்ளோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)