விபத்துக்களை தவிர்க்க மாணவர்கள் சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டும்
கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதில் உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தவிர்த்திட மாணவர்கள் சாலைவிதியை கடைபிடிப்பது பற்றி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் எடுத்துரைக்க வேண்டும்.
சாலையை கடக்கும் போது, இருபுறமும் கவனித்து வாகனங்கள் வராத போது சாலையை கடக்க வேண்டும். பள்ளி விடும் நேரங்களில் மாணவர்கள் நெரிசலின்றி வெளியேறுவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் மூத்த மாணவர்கள், உள்ளூர் சமூக ஆர்வலர்களை கொண்டு போக்குவரத்தினை சீர்படுத்தி மாணவர்கள் விபத்தின்றி வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக