AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 18 ஆகஸ்ட், 2012

இணைந்தது சமுதாயம்..............!! அதிர்ந்தது எதிரிகளின் கூடாரம்.............!!


அல்லாஹு அக்பர்.............!! அல்லாஹு அக்பர்.............!!

 
இஸ்லாமிய உலகில் ஏற்பட்ட பிளவுகளே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணம் – மன்னர் அப்துல்லாஹ்

சவூதி அரேபியாவின் புனித நகரான மக்காவில் உலகளாவிய அளவில் நடைபெற்ற இஸ்லாமிய எழுச்சி உச்சி மாநாட்டில் இரு புனித பள்ளிகளின் ஊழியரும், சவூதி அரேபியாவின் மன்னருமான அப்துல்லாஹ், இஸ்லாமிய உலகில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாகவே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டார்,

சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் அவர்களின் இருக்கைக்கும் அருகில் ஈரான் அதிபர் அஹமதி அவர்களுக்கு இருக்கை போடப்பட்டது குறிப்பிடத்தக்கது,

இந்த மாநாட்டில் ஈரான் அதிபர் அஹமதி நிஜாத் அவர்களை மையமாக வைத்து பல சுற்றுகள் பேசப்பட்டது, மேலும் அஹமதி நிஜாத் அவர்கள் கூறுகையில் உலகளாவிய அளவில் முஸ்லிம்களின் நிலை என்ன என்பதை தெளிவாக விவரித்திருந்தார், முன்னதாக அவர் திங்களன்று புனித நகரான மதீனாவுக்கு சென்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

மேலும் செய்தியாளர்களை சந்தித்த அஹமதி நிஜாத் அவர்கள்.... இன்றைய உலகம் மிகவும் நுட்பமான நிலையில் இருப்பதாக எதிரி நாடுகளை பற்றி கருத்து தெரிவித்திருந்தார்,

சிரிய விவகாரத்தில் ஷியா, சுன்னி என இருநாடுகளும் பிரிந்து செயற்படும் நிலையில் மாநாட்டின் முதல் நாளில் இரு நாட்டு தலைவர்களும் அருகருகே அமர்ந்து புன்முருவலுடன் அளவளாவிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அல்ஹம்துலில்லாஹ்..........
 
....!! 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக