AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

தமுமுகவின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் ஜின்னா மரணம்

தமுமுகவின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் ஜின்னா மரணம் 

தமுமுகவின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தின் தலைவராகவும், பின்பு மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றிய S.M. ஜின்னா அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்
கள். (இன்னாலில்லாஹி...). அவருக்கு வயது 64. அவருக்கு ஒரு மனைவியும் 4 ஆண் பிள்ளைகளும், 3 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்தாலும், தொடர்ந்து இயக்கப் பணிகளில் ஈடுபாடு காட்டி வந்தார். கடந்த ஜூலை 14 அன்று லால்பேட்டையில் நடைபெற்ற தமுமுக பொதுக்கூட்டத்தில் சிறப்பாக உரையாற்றினார். எப்போதும் கலகலப்பாக இருப்பதும், எதையும் இலகுவாக எடுத்துக்கொள்வதும் அவரது சிறப்பு குணங்களாகும்.

இன்று காலை சஹர் முதல் அவருக்கு ஏற்பட்ட மூச்சு திணறல் அவரை இறைவனிடம் சேர்த்து விட்டது.

தகவல் அறிந்த கடலூர் மாவட்ட தமுமுக, மமக வினர் அவரது சொந்த ஊரான பின்னத்தூருக்கு விரைந்து சென்று அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதிலிருந்து சமுதாய ஆர்வலர்களும், பொதுமக்களும் அவரது ஜனாஸாவை பார்க்க சென்று கொண்டுள்ளனர்.

நாளை காலை 9 மணிக்கு அவரது ஜனாஸா சிதம்பரம் அருகே அவரது சொந்த ஊரான பின்னத்தூரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

அதில் தலைமை நிர்வாகிகள், அண்டை மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.

விவசாய சங்கங்களின் நிர்வாகியாகவும் பணியாற்றியதோடு, பல தரப்பு மக்களோடும் நல்லுறவை வைத்திருந்த S.M. ஜின்னா அவர்களின் இழப்பு இயக்கத்திற்கு ஒரு பேரிழப்பு என்றும், அவரது மறுமை வாழ்வுக்காக அனைவரும் பிராத்திப்போம் என்றும் தமுமுக தலைவர் J.S. ரிபாயி தெரிவித்துள்ளார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக