அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் வழக்கம்போல் இவ்வருடமும் ரமலான் பிறை 27 அன்று லைலத்துல் கதர் சிறப்பு சொற்பொழிவு தஸ்பீஹ் தொழுகை சிறப்பு துஆ உள்ளிட்ட அமல்கள் நடைப்பெற்றது.
காலிதியாவில் உள்ள மஸ்ஜிதே அபு உபைதாவில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு செயற்குழு உறுப்பினர் சுகைபுதீன் தலைமை வகித்தார். ஜமாத்தின் மூத்த தலைவர் ஹாஜி முஹம்மது ஹசன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ஜாபர் அலி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அபுதாபி லைலத்துல் கதர் கமிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்த தமிழ் நாடு மாநில ஜமாத்துல் உலமா சபைத் தலைவரும்,லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பேராசிரியருமான ஷைகுல் ஹதீஸ் மவ்லானா ஏ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரை நிகழ்த்தி விட்டு விடைபெற்று சென்றார்.
தொடர்ந்து லைலத்துல் கதர் சிறப்புக்களை விளக்கி ஹாபிள் ஹுசைன் மக்கி ஆலிம் அவர்களும்,ஜமாஅத் ஒற்றுமையை வலியுறுத்தி மெளலானா இம்ரானுல்லா பிலாலி அவர்களும் உரை நிகழ்த்தினர்.இறுதியில் தஸ்பீஹ் தொழுகையை ஹாபிள் இர்ஷாத் அஹமத் நடத்தினார்.ஹாபிள் ஹுசைன் மக்கி ஆலிம் சிறப்பு துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியை லால்பேட்டை அபுதாபி ஜமாத்தின் பொதுச்செயலாளர் யாசிர் அரபாத் அலி,பொருளாளர் முஹம்மது இலியாஸ்,தணிக்கையாளர் அப்துல் மாலிக், மற்றும் ஜமாஅத் உறுப்பினர்கள் சிறப்பாக ஒருங்கினைத்திருன்தனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சஹர் உணவு வழங்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக