கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா ஷெய்கு அப்துல்லாஹ் முபாரக் புதிய பள்ளிவாசலை திறந்து வைத்து வாழ்த்தினார் .
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் 8.6.2013 சனிக்கிழமை இன்று ரஹ்மானிய புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைப்பெற்றது .குறிஞ்சிப்பாடி முத்தவல்லி இ.காதர் தலைமை வகித்தார் ஜமாஅத் பிரமுகர் எம்.கே.எம் சுல்தான் வரவேற்று பேசினார் .இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் மௌலானா தளபதி ஷபீகுர் ரஹ்மான் துவக்க உரையாற்றினார் . விழுப்புரம் மேற்கு மாவட்ட பொருளாளர் ஜெ.அப்துல் ஹக்கீம் திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தலைவர் ஜெ.சம்சுதீன் களமருதூர் ஜெ.அப்துல் ஹமீது குறிஞ்சிப்பாடி டாக்டர் எம்.ஏ.அப்துர் ரஜாக் லால்பேட்டை ஜெ.எம்.ஏ.அரபிக் கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் ஏ.ஆர் .அப்துர் ரஷீத் சாதிக் பாஷா அன்வர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
லால்பேட்டை ஜெ.எம்.ஏ.அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் லுஹர் தொழுகை நடத்தி துஆ செய்தார் .
லால்பேட்டை ஜெ.எம்.ஏ.அரபிக் கல்லூரி பேராசிரியர்களான மௌலானா ஜாக்கிர் ஹுசைன்,மௌலானா அப்துஸ் சமது கடலூர் மாவட்ட ஜமாதுல் உலமா சபை செயலாளரும் நெல்லிக்குப்பம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலாளருமான மௌலானா அப்துர் ரஜாக் ரஹ்மானிய மஸ்ஜித் இமாம் மௌலானா காஜா முஹ்யத்தின் கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.ஏ.அமானுல்லாஹ் மௌலானா லியாகத் அலி தலைமை நிலைய பேச்சாளர் கொள்ளிடம் ரஷீத் ஜான் உள்ளிட்ட மற்றும் பலர் உரையாற்றினார்கள் .அபுதாபி ஷெய்கு அப்துல்லாஹ் முபாரக் புதிய பள்ளிவாசலை திறந்து வைத்தார் .ஷெய்கு சுஹைல் அப்துல்லாஹ் வாழ்த்துரை வழங்கினார்.டாக்டர் எம்.சம்சுதீன் நன்றி கூறினார் .
கடலூர் விழுப்புரம் தஞ்சை ஆகிய மாவட்டத்திலிருந்து திரளான ஜமாஅத் பிரமுகர்கள் வருகைதந்து வாழ்த்தினர் .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக