AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 9 ஜூன், 2013

கடந்த 5 மாதங்களில் சவுதியில் இருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேறியுள்ளனர்


ரியாக், ஜூன் 9-

சவுதி அரேபியாவில் இருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களில் வெளியேறியுள்ளனர்.

2013-ஜனவரியில் இருந்து இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டினர் வெளியேறியுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் உரிய ஆவணங்களின்றி சவுதி அரேபியாவில் தங்கியிருந்தவர்கள் என்றும் இவர்கள் மீது அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் அந்நாட்டின் பாஸ்போர்ட் துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

சவுதியில் வாழ்பவர்களுக்கு ‘நிடாகட்’ சட்டத்தை சவுதி அரசு அறிவித்த பின்னர், அந்நாட்டில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருக்கும் வெளிநாட்டினர் ஜூலை மாதத்திற்குள் வெளியேறி விட்டால் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களில் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் கடந்த மாதம் வரை வெளியேறியுள்ளனர்.

ஜூலை 3-ம் தேதிக்குள் இறுதிக்கெடு முடிவடைகிறது. அதன் பிறகும் சவுதியில் உரிய ஆவணங்களின்றி யாராவது தங்கியிருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்கப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக