ரியாக், ஜூன் 9-
சவுதி அரேபியாவில் இருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களில் வெளியேறியுள்ளனர்.
சவுதியில் வாழ்பவர்களுக்கு ‘நிடாகட்’ சட்டத்தை சவுதி அரசு அறிவித்த பின்னர், அந்நாட்டில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருக்கும் வெளிநாட்டினர் ஜூலை மாதத்திற்குள் வெளியேறி விட்டால் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களில் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் கடந்த மாதம் வரை வெளியேறியுள்ளனர்.
ஜூலை 3-ம் தேதிக்குள் இறுதிக்கெடு முடிவடைகிறது. அதன் பிறகும் சவுதியில் உரிய ஆவணங்களின்றி யாராவது தங்கியிருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்கப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக