சவுதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு 'ஹஜ்' புனித யாத்திரை செய்ய வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை அந்நாட்டு அரசாங்கம் 20 சதவீதம் குறைத்துள்ளது.
10 லட்சம் மக்கள் தொகையின் அடிப்படையில் ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசாங்கம் முன்னர் அனுமதி அளித்து வந்தது.
ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருவதால் மக்காவில் உள்ள பெரிய மசூதி மற்றும் மதீனாவில் உள்ள முகம்மது நபி மசூதி ஆகிய இடங்களில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது.
இந்த நெருக்கடியை தவிர்ப்பதற்காக மேற்கண்ட மசூதிகளை விரிவுபடுத்தி கட்ட சவுதி அரசு முடிவெடுத்துள்ளது. இந்த கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் உள்ளூர் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் 50 சதவீதமும், வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதமும் குறைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக நேற்று கருத்து கூறிய சவுதி மந்திரி முஹம்மது ஹஜ்ஜார் 'இந்த அனுமதி குறைப்பு என்பது தற்காலிகமானது தான். மசூதிகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பின்னர் பழைய முறையின்படி அனுமதி வழங்கப்படும்' என்றார்.
இதன்படி, இந்தியாவின் இந்த ஆண்டிற்கான ஹஜ் ஒதுக்கீட்டில் 34 ஆயிரம் பேர் யாத்திரை செய்வது குறையும் என தெரிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக