மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
“ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களுடைய பிரச்சனையில் திமுகவின் கடந்தகால செயல்பாடுகள் எப்படி இருந்தாலும், இப்போதைய திமுகவின் முடிவு தாமதமான முடிவாக இருந்தாலும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு முடிவு.
மனிதநேய மக்கள் கட்சி இதனை வரவேற்கிறது. தமிழகத்தின் ஒட்டு மொத்த கல்லூரி மாணவர்களின் போராட்டங்களுக்கும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் திமுக முக்கியத்துவம் கொடுத்திருப்பதை வரவேற்கிறோம். போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”
0 கருத்துகள்:
கருத்துரையிடுக