AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 19 மார்ச், 2013

கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருக்கு பாராட்டு விழா


பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவருமான எம்.எஸ் முஹம்மது யூனுஸ் கடந்த மாதம் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றதையடுத்து, அவருக்கு பாராட்டு விழா நேற்று மாலை பரங்கிப்பேட்டை கலிமா நகரில் நடைப்பெற்றது.

மீராப்பள்ளி நிர்வாகி கே. ஷேக் அப்துல் காதிர் மரைக்காயர் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் மீராப்பள்ளி இமாம் எம். அஹமது கபீர் காஷ்மி கிராஅத்  ஓதி துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், முன்னாள் நீதிபதி எஸ்.எஃப். அக்பர், சிதம்பரம் சடடமன்ற  உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், லால்பேட்டை மன்பவுல் அன்வார் கல்லூரி முதல்வர் மௌலவி எ. நூருல் அமீன், சமூக பொருளாதார அறக்கட்டளை  தலைவர் எஸ்.எம். இதயதுல்லா, எஸ்.என். சிக்கந்தர், சசி தொண்டு நிறுவன தலைவர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து பட்டம் பெற்ற எம்.எஸ். முஹம்மது யூனுஸ் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்ட்டது. விழா நிறைவில் எம். எஸ் முஹம்மது யூனுஸ் விழா ஏற்புரையில் வாழ்த்துரை வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
இந்த பாராட்டு விழாவினை கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் செயலாளர் முஹம்மது கமாலுத்தீன் தொகுத்து வழங்கினார். எம்.ஐ. முஹம்மது  இஸ்ஹாக் வரவேற்று பேசினார். பேரூராட்சி மன்ற து. தலைவர் ஆர். நடராஜன், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், தமிழ்ப் பல்கலைகழக ஒருங்கிணைப்பாளர்  ஆர். செந்தில் குமார் முன்னிலை வகித்தனர். எம். நிஜாமுத்தீன் நன்றியுரை வழங்கினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக