பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவருமான எம்.எஸ் முஹம்மது யூனுஸ் கடந்த மாதம் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றதையடுத்து, அவருக்கு பாராட்டு விழா நேற்று மாலை பரங்கிப்பேட்டை கலிமா நகரில் நடைப்பெற்றது.
மீராப்பள்ளி நிர்வாகி கே. ஷேக் அப்துல் காதிர் மரைக்காயர் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் மீராப்பள்ளி இமாம் எம். அஹமது கபீர் காஷ்மி கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
இந்த பாராட்டு விழாவினை கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் செயலாளர் முஹம்மது கமாலுத்தீன் தொகுத்து வழங்கினார். எம்.ஐ. முஹம்மது இஸ்ஹாக் வரவேற்று பேசினார். பேரூராட்சி மன்ற து. தலைவர் ஆர். நடராஜன், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், தமிழ்ப் பல்கலைகழக ஒருங்கிணைப்பாளர் ஆர். செந்தில் குமார் முன்னிலை வகித்தனர். எம். நிஜாமுத்தீன் நன்றியுரை வழங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக