AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 20 மார்ச், 2013

காட்டுமன்னார்கோவிலில் 2,224 பயனாளிகளுக்கு இலவச மிக்சி-கிரைண்டர்: முருகுமாறன் எம்.எல்.ஏ. வழங்கினார்

காட்டுமன்னார்கோவில், மார்ச் 20-

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகாட்டூர், சண்டன், எடையார், கருப்பூர், அத்திப்பட்டு, பரிவிளாகம், கூடலையாத்தூர் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த 2224 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிகளுக்கு வட்டாட்சியர் தில்லை கோவிந்தன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முருகுமாறன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கினார்.


நிகழச்சியில் குமராட்சி ஒன்றிய தலைவர் பாண்டியன், காட்டுமன்னார் கோவில் ஒன்றிய தலைவர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர்கள் ராமதாஸ், மலர்விழி, தமிழ்செல்வன், சண்டன் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், நெய்வாசல் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், விவசாய அணி ஒன்றிய செயலாளர் மாணிக்கவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக