AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 28 மார்ச், 2013

ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்டும் பணி மீண்டும் இன்று தொடங்கியது

தமிழ்நாட்டில் 1 கோடியே 95 லட்சத்து 24 ஆயிரத்து 154 ரேசன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டுகளில் உள் தாள் ஒட்டுவதற்காக அளிக்கப்பட்ட 70 நாட்கள் அவகாசத்தில் 1 கோடியே 93 லட்சத்து 90 ஆயிரத்து 957 குடும்ப அட்டைகளுக்கு உள்தாள் ஒட்டப்பட்டுள்ளது. 
இன்னும் 1 லட்சத்து 33 ஆயிரத்து 797 பேர் உள்தாள் ஒட்டாமல் உள்ளனர். இவர்களுக்கு மேலும் வாய்ப்பு அளிக்கும் வகையில் உள்தாள் ஒட்டும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் நேற்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார். 


இதையொட்டி உள்தாள் ஒட்டும் பணி இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்திலும், உணவுப் பொருள் வழங்கள் துறை துணை ஆணையர் அலுவலகங்களிலும் உள்தாள் ஒட்டி கொடுக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக