காட்டுமன்னார்கோவில் கிராமங்கள் நிறைந்த பகுதி. இங்கு வசிக்கும் மக்கள் காட்டுமன்னார்கோவில் நகரத்திற்கு தினமும் வருகின்றனர்.
அதிக அளவில் கிராம மக்கள் பஸ்கள் மூலமே வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் நகரின் மையத்தில் பேருந்து நிலையம் உள்ளது. தினமும் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் பேருந்து நிலையத்தில் கிராமத்திற்கு செல்வதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் பயணிகள் குடிநீருக்காக சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.
பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் கடைகளில் தண்ணீர் பாக்கெட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். வர்த்தக சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் நீர்தேக்க சிறு தொட்டி பயனற்று உள்ள தால் பொதுமக்கள் தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர். ஆகவே பராமரிப்பின்றி காணப்படும் குடிநீர் நீர்தேக்க தொட்டியை பேரூராட்சி நிர்வாகம் சீர்செய்து தண்ணீர் நிரப்பி பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் கிராம மக்கள் பஸ்கள் மூலமே வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் நகரின் மையத்தில் பேருந்து நிலையம் உள்ளது. தினமும் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் பேருந்து நிலையத்தில் கிராமத்திற்கு செல்வதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் பயணிகள் குடிநீருக்காக சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.
பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் கடைகளில் தண்ணீர் பாக்கெட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். வர்த்தக சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் நீர்தேக்க சிறு தொட்டி பயனற்று உள்ள தால் பொதுமக்கள் தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர். ஆகவே பராமரிப்பின்றி காணப்படும் குடிநீர் நீர்தேக்க தொட்டியை பேரூராட்சி நிர்வாகம் சீர்செய்து தண்ணீர் நிரப்பி பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக