AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 26 டிசம்பர், 2012

செயல்படாத ஏடிஎம் மையம்

கொள்ளுமேடு அருகே நெடுஞ்சேரி. இங்கு பாரத ஸ்டேட் வங்கி செயல்படுகிறது. தினந்தோறும் இப்பகுதியில் உள்ள சுமார் 20 கிராமங்களிலிருந்து பொதுமக்கள் வங்கிக்கு வருகின்றனர். 
ஆட்கள் பற்றாக்குறை காரணமாக வங்கி கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. பணம் எடுப்பதற்கு அனை வருமே ஒரே நேரத்தில் வங்கியின் கவுண்டரை அணுகுவதால் கூட்டம் அதிகமாகிறது. இதை கருத்தில் கொண்டு ஏடிஎம் சென்டர்களை திறந்து வரு கிறது. இதனால் பணம் எடுக்க செல்பவர்கள் எளிதில் பணத்தை எடுத்து செல்கின்றனர். விழா காலங்களில் ஏடிஎம் முன்பு திருவிழா போன்று கூட்டம் காணப் படும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஏடிஎம் சென்டர் நெடுஞ்சேரியில் கடந்த மூன்று மாதங்க ளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ளது. பண்டிகையை முன்னிட்டா வது ஏடிஎம் சென்டரை  திறக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக