சென்னை, டிச. 26-
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த நைனா முகமது ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தமிழ் மகன் உசேன், உறுப்பினராக எஸ்.ஏ.பரூக் ஆகியோரை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
இதுபற்றி அரசு முஸ்லிம் சமுதாய பெருமக்களிடம் இருந்து விருப்பம் கேட்காமல் நியமித்துள்ளது. வக்பு சட்ட விதிமுறைகள் பின் பற்றப்படவில்லை. எனவே அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி பால் வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இது தொடர்பான வழக்கு 2 நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரணையில் உள்ளதால் இந்த மனுவையும் டிவிஷன் பெஞ்ச்க்கு நீதிபதி மாற்றி உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக