விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் ஜமாஅத்துல் உலமா சபை பொதுக்குழு கூட்டம் நடந்தது.
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஷபியுல்லாஹ்மன்பஈ தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துர்ரஜாக் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் அப்துர்ரஷீத்ரஹ்மானி முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் அப்துர்ரஹ்மான், மாநில துணை பொதுச்செயலாளர் நூருல்அமீன், லால்பேட்டை அரபி கல்லூரி பேராசிரியர் ஜாகிர்உசேன் ஆகியோர் பேசினர்.
தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் மின் தட்டுப்பாட்டினை போக்கிட தமிழக அரசு அறிவித்துள்ள சூரியசக்தி மின் திட்டத்தை வரவேற்பதோடு, அதை அனைத்து மக்களும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அரசு மானியம் எளிதில் கிடைத்திட வழிவகை செய்யுமாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம் ஜமாஅத் சார்பில், அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் ‘திருமணப் பதிவு‘களை அரசு ஏற்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஷபியுல்லாஹ்மன்பஈ தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துர்ரஜாக் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் அப்துர்ரஷீத்ரஹ்மானி முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் அப்துர்ரஹ்மான், மாநில துணை பொதுச்செயலாளர் நூருல்அமீன், லால்பேட்டை அரபி கல்லூரி பேராசிரியர் ஜாகிர்உசேன் ஆகியோர் பேசினர்.
தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் மின் தட்டுப்பாட்டினை போக்கிட தமிழக அரசு அறிவித்துள்ள சூரியசக்தி மின் திட்டத்தை வரவேற்பதோடு, அதை அனைத்து மக்களும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அரசு மானியம் எளிதில் கிடைத்திட வழிவகை செய்யுமாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம் ஜமாஅத் சார்பில், அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் ‘திருமணப் பதிவு‘களை அரசு ஏற்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக