பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நினைவு நாளான டிசம்பர் 6 ஆம் தேதியை முன்னிட்டு,பாபர் மஸ்ஜித் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கவும் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமுமுக கடலூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் தமுமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் சவுக்கத் அலி கான் தலைமையில் நடைபெற்றது.
தமுமுக ஊழியர் கொள்ளுமேடு ரிஃபாயி இறைமறை வசனங்களை ஓதினார்.தமுமுக மாவட்ட செயலாளர் என் அமானுல்லா வரவேற்புரையாற்றினார்.தமுமு
தமுமுக தலைமைக்கழக பேச்சாளர் கோவை ஜைனுல் ஆபிதீன்,மாவட்டத் தலைவர் எம்.ஹெச்.மெஹராஜீத்தீன் ஆகியோர் கண்டண உரை நிகழ்த்தினர்.மமக புவனகிரி நகர செயலாளா பி.முஹம்மது அலி நன்றியுரையாற்றினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.
செய்தி படங்கள் : கொள்ளுமேடு ரிஃபாயி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக