பிப்ரவரி 8, 9, 2013 (வெள்ளி, சனி) தேதிகளில் கோட்டக்குப்பத்தில் இஸ்திமா கடந்த பல வருடங்களாக முயற்சி செய்து இடவசதி இல்லாத காரணத்தால் கோட்டக்குப்பம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் இவ்வருடம் கோட்டக்குப்பத்தில் இஸ்திமா நடத்த இறைவன் நாட்டப்படி முடிவு செய்யப்பட்டுள்ளது.
.
கடந்த அக்டோபர் மாதம், பாண்டிச்சேரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் இஸ்திமா நடத்த இடம் ஆய்வு செய்யப்பட்டது.
.
பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு கோட்டக்குப்பம் புதிய கிழக்கு கடற்கரை சாலை ஒட்டி அமைந்துள்ள பரகத் நகர் மேற்கு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. கடலூர், விழுப்புரம்,பாண்டிச்சேரி மாவட்டத்திற்கான
இஸ்திமாவை எந்ததெந்தபகுதியில் நடத்துவது என்பதற்கான ஆலோசனை (ஜோடு) கூட்டம் லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் 02.12.2012 இன்று நடைபெற்றது.
.
பாண்டிச்சேரி மாவட்டத்திற்கான இஸ்திமா எங்கள் பகுதியில்தான் நடத்தவேண்டும் என்று திண்டிவனதத்துகாரர்களும், செஞ்சிகாரர்களும் இந்த முறை எங்கள் பகுதியிலே நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். சுல்தான்பேட்டை, திருக்கனூர், பாண்டிச்சேரி, கோட்டக்குப்பத்தை சேர்ந்த பொறுப்புதாரிரகள் கோட்டக்குப்பத்தில் நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் கோட்டக்குப்பத்தில் பாண்டிச்சேரி மாவட்ட இஸ்திமா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
.
அதன்படி வரும் 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8, 9 தேதிகளில் (வெள்ளிக்கிழமை,சனிக்கிழமை)
கோட்டக்குப்பம் பரகத் நகர் கிழக்கு கடற்கரை சாலை மேற்கு பகுதியில் நடைபெறும் இன்ஸாஅல்லாஹ்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக