2013ம் ஆண்டுக்கான ரேஷன் கார்டு உள்தாளுக்கு 8 இலக்க பிரத்யேக எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த உள்தாள் தொலைந்தாலோ, கிழிந்தாலோ வேறு உள்தாள் இணைப்பு வழங்க முடியாது. தமிழகம் முழுவதும் 1.97 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதில் 20 சதவீதத்திற்கும் மேல் போலி கார்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது. போலி கார்டுகளை ஒழிக்க தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி முடிந்த பின்னர் பயோ மெட்ரிக் ரேஷன் கார்டுகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பொதுமக்களுக்கு அரசு வழங்கிய ரேஷன் கார்டு 2009ம் ஆண்டுடன் முடிவடைந்தது. 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளுக்கு தனியாக உள்தாள் இணைப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் 2013ம் ஆண்டுக்கும் உள் தாள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உள் தாள் இணைப்பு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவை ரேஷன் கடைகள் மூலம் ஜன.1ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. முன்பெல்லாம் உள்தாள் இணைப்பு தனியாக வழங்கப்படும். எந்த ரேஷன் கார்டுக்கும் எந்த உள் தாளையும் வழங்கி விடலாம். ஆனால் தற்போது ஒவ்வொரு உள¢ தாளுக்கும் 8 இலக்க பிரத்யேக எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசை எண் அடிப்படையில் தான் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் உள்தாள் இணைப்பு வழங்க வேண்டும். ஒரு உள்தாள் இணைப்பு கிழிந்தாலோ, தொலைந்து விட்டாலோ மாற்று உள்தாளுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்திடம் இருந்து ஒப்புதல் பெற்ற பின்னரே மறு உள்தாள் வழங்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் பிரத்யேக உள்தாள் இணைப்பால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய தலைவலி உருவாகியுள்ளது.
இவை ரேஷன் கடைகள் மூலம் ஜன.1ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. முன்பெல்லாம் உள்தாள் இணைப்பு தனியாக வழங்கப்படும். எந்த ரேஷன் கார்டுக்கும் எந்த உள் தாளையும் வழங்கி விடலாம். ஆனால் தற்போது ஒவ்வொரு உள¢ தாளுக்கும் 8 இலக்க பிரத்யேக எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசை எண் அடிப்படையில் தான் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் உள்தாள் இணைப்பு வழங்க வேண்டும். ஒரு உள்தாள் இணைப்பு கிழிந்தாலோ, தொலைந்து விட்டாலோ மாற்று உள்தாளுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்திடம் இருந்து ஒப்புதல் பெற்ற பின்னரே மறு உள்தாள் வழங்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் பிரத்யேக உள்தாள் இணைப்பால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய தலைவலி உருவாகியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக