காட்டுமன்னார்கோவில் : வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இறுதியில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். வீராணம் ஏரி மூலம் 48 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. கடந்த ஆண்டு தேக்கப்பட்ட தண்ணீர் மே மாதம் வரை ஏரியில் நிரம்பி இருந்தது. இதனால் சென்னைக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
கடுமையான வெயில் மற்றும் தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்காத காரணத்தால் ஏரியில் தேக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைந்தது. தற்போது ஏரியில் 40.10 அடி தண்ணீர் உள்ளது. சென்னைக்கு வினாடிக்கு 38 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோடை காலத்தில் வளர்ப்பதற்காக 1 லட்சம் மீன் குஞ்சுகள் மீன் வளத்துறை சார்பில் விடப்பட்டது. தற்போது ஏரியில் தண்ணீர் குறைந்ததால் மீன்களும் ஆயிரக்கணக்கில் அழிந்து வருகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி தொடர்ந்து நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
கடுமையான வெயில் மற்றும் தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்காத காரணத்தால் ஏரியில் தேக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைந்தது. தற்போது ஏரியில் 40.10 அடி தண்ணீர் உள்ளது. சென்னைக்கு வினாடிக்கு 38 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோடை காலத்தில் வளர்ப்பதற்காக 1 லட்சம் மீன் குஞ்சுகள் மீன் வளத்துறை சார்பில் விடப்பட்டது. தற்போது ஏரியில் தண்ணீர் குறைந்ததால் மீன்களும் ஆயிரக்கணக்கில் அழிந்து வருகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி தொடர்ந்து நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக