புதுடெல்லி: 2013ம் ஆண்டு முதல் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த ஐ.ஐ.டி இயக்குநர்கள் ஓப்புதல் அளித்துள்ளனர். ஒரே நுழைவுத் தேர்வு முறை வரும் 2013ம் ஆண்டு முதல், செயல்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நுழைவுத் தேர்வு முறைக்கு கான்பூர் ஐ.ஐ.டி எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஐ.ஐ.டி கவுன்சில் கூட்டத்தில், சமரசம் காணப்பட்டது. நுழைவுத் தேர்விற்கு பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் தகுதியாக கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்விற்கு முன் சோதனை தேர்வு நடத்திக் கொள்ள ஐ.ஐ.டி.க்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் பங்கேற்கவில்லை.
புதன், 27 ஜூன், 2012
2013 முதல் ஒரே நுழைவுத் தேர்வு : ஐஐடி இயக்குநர்கள் ஒப்புதல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக