காட்டுமன்னார் கோவில்:காட்டுமன்னார் கோவிலில் திமுக- அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்க போலிஸ் தடியடி நடத்தியது. பேருந்து நிலையம் அருகே இரு கட்சியையும் சேர்ந்த 200க்கும் மேற்ப்பட்டோர் மோதலில் ஈடுபட்டனர். மோதலைத் தடுக்க போலிஸ் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சரை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரினால் பேரூராட்சித் தலைவர் எம்ஜிஆர்தாசன் வீடு தாக்கப்பட்டதில் பொருட்கள் சேதமடைந்தன. பேரூராட்சித் தலைவர் வீடு தாக்கப்பட்டதால் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது.
திங்கள், 23 ஏப்ரல், 2012
காட்டுமன்னார் கோவிலில் திமுக அதிமுக மோதல் : போலிஸ் தடியடி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக