புதுடெல்லி : சர்வதேச சந்தையில் ரூபாய் மதிப்பு மீண்டும் சரிந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு நேற்று ரூ.52 ஆக சரிந்தது. இது கடந்த 14 வாரங்களுக்கு முன்பிருந்த நிலையாகும். கடந்த ஆண்டின் பிற்பாதியில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தது. டிசம்பர் மாதத்தில் அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ.54.30 ஆக சரிந்தது.
அதன் பிறகு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக ரூபாய் மதிப்பு படிப்படியாக அதிகரித்து, டாலர் ரூ.50க்கு கீழ் சென்றது. கடந்த சில வாரங்களாக மீண்டும் சரிய தொடங்கியுள்ளது. நேற்று ரூ.52 ஆக சரிந்தது. மேலும் தொடர்ந்து சரிந்தால், இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதன் பிறகு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக ரூபாய் மதிப்பு படிப்படியாக அதிகரித்து, டாலர் ரூ.50க்கு கீழ் சென்றது. கடந்த சில வாரங்களாக மீண்டும் சரிய தொடங்கியுள்ளது. நேற்று ரூ.52 ஆக சரிந்தது. மேலும் தொடர்ந்து சரிந்தால், இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக