பத்தாம் வகுப்பு தேர்வு இன்று முடிந்தது. இதனால் கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக இருந்த மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த 4ம் தேதி தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 6 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 11 லட்சத்து 44 ஆயிரம் மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் நடந்த முதல் தேர்வு என்பதால், கேள்விகள் எப்படி இருக்குமோ என்ற பயத்தில் மாணவர்கள் இருந்தனர். தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 3,033 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வில் கணக்கு பாட தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். ஆங்கில தேர்வின் போது பிட் அடித்த 16 பேர் பிடிப்பட்டனர். திருவண்ணாமலையில் தனியார் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆசிரியர்களே பிட் வழங்கிய சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு பள்ளி ஆசிரியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்று வரலாறு மற்றும் சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுடன் 10ம் வகுப்பு தேர்வு முடிந்தது. இதனால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஒரு மாத விடுமுறைக்கு பின்னர் ஜூன் 1ம் தேதி பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திங்கள், 23 ஏப்ரல், 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக