AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: இரண் டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. இது குறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இரண்டாம் கட்டமாக இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லு£ரி, மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில்  40,000 போலியோ சொட்டு மருந்து சிறப்பு  மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக கூடுதலாக 1000 சிறப்பு மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன.  இரவு, பகலாக மூன்று நாட்களுக்கு இம்மையங்கள்  செயல்படும்.  
தொலை து£ரம்  உள்ள கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு 900,க்கும் மேற்பட்ட நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

15ம் தேதியன்று 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். சொட்டு மருந்து வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு குழந்தைகளின் விரலில் மை வைக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 வரை மையம் செயல்படும். முகாமில் சமூக நலத்துறை, கல்வித்துறை, வருவாய் துறை , ஊரக வளர்ச்சி துறை,  நகராட்சி நிர்வாக துறை ஆகிய அரசு துறைகள் மற்றும்  அரசு சாராத்துறைகளான ரோட்டரி, இந்திய மருத்துவ கழகம், இந்திய குழந்தைகள் கழகம்.  லயன்ஸ் கிளப், ஆகியவைகளும்  ஈடுபடுகின்றன. 2 லட்சம் பணியாளர்கள் இம் முகாமில் டுபடுத்தப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக