AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 5 ஜனவரி, 2012

அத்வானியை கொல்ல வெடிக்குண்டு: முஸ்லிம் தம்பதிகளை கொடுமைப்படுத்திய போலீஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்


மதுரை:பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானியின் ஜனசேதனா யாத்திரை தமிழகத்தில் நடைபெறும் வழியில் பைப் வெடிக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கில் விசாரணையின் பெயரால் அப்பாவி முஸ்லிம் தம்பதியினரை கொடுமை படுத்திய புகாரில் போலீஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது. தென்காசியை சார்ந்த செய்யித் சுலைமான் சேட் மற்றும் அவரது மனைவி ஷரஃபுன்னிஸா ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிபதி கெ.கெ.சசிதரன் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஜனவரி 18-ஆம் தேதிக்குள் இந்த அதிகாரியை மாற்றவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு தடையாக இருக்கிறார் என்றும், சட்டத்தை மீறி கொடுமைப்படுத்துகிறார் என்றும் புகார் அளித்துள்ள முஸ்லிம் தம்பதியினர் அந்த போலீஸ் அதிகாரியை கட்டுப்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக