சி.ஏ., படித்துக் கொண்டே, தொலை தூரக் கல்வி
இதற்கான ஒப்பந்தத்தில்,சென்னை பல்கலை பதிவாளர் லியோ அலெக்சாண்டரும், இந்திய சார்டட் அக்கவுண்டன்ட்ஸ் நிறுவனத் தலைவர் ராமசாமியும் கையெழுத்திட்டனர்.
சி.ஏ., படித்துக் கொண்டே, தொலை தூரக் கல்வி திட்டத்தின் மூலம், பட்டப் படிப்பு படிக்கும் வகையில், புதிய திட்டத்தை சென்னை பல்கலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய சார்டட் அக்கவுண்டன்ட்ஸ் நிறுவனத்தின் கீழ், சி.ஏ., படிக்கும் மாணவர்கள், அங்கு படித்து கொண்டே, சென்னை தொலைதூரத் திட்டத்தில் சேர்ந்து, அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப, பி.காம்., பி.பி.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., போன்ற படிப்புகளை படிக்க, இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக