மழைகாலம் வந்தாலே அதனோடு சேர்ந்து இந்தச் சளித் தொல்லையும் வந்து விடுகிறது. மழையில் நனையாதே நனையாதே என்று எவ்வளவு தான் கத்தினாலும் அது மனதில் உறைப்பதில்லை.
முறை – 1
நன்மை – இதைச் செய்வதால் நிச்சயம் உடனேயே மூக்கடைப்பு எடுபட்டுவிடும். எந்தப் பக்க விளைவும் இருக்காது. (ஆனால் கண்ணை மூடிக் கொள்வது சிறந்தது)http://www.kalvikalanjiam.com
ஒரு சிரட்டையில் நெருப்புத் தணலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஊதி சாம்பல் அற்ற நல்ல தணலாக்கிக் கொண்டு.
கொஞ்சச் சீனியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே தணல் மேல் போட்டவுடன் ஒரு கருகிய புகை வரும். அதை அப்படியே மூக்கால் இழுத்து எடுங்கள்.
ஒன்றுமே நடக்காது மாற்றத்தை உடனேயே உணர்வீர்கள்.
முறை -2
ஒரு சட்டை ஊசி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு மிளகை குத்தி எடுத்து விட்டு அதை எரியும் நெருப்பில் பிடியுங்கள்.
சிறிது நேரத்தில் அம் மிளகு எரிந்து ஒரு மணத்துடன் புகை வரும் அதை அப்படியே மூக்கால் இழுங்கள். சாதுவான எரிச்சல் இருக்கும் ஆனால் மண்டைப் பாரம் சிறிது நேரத்திலேயே குறைந்து விடும்.
இதில் எந்தப் பெரும் செலவும் இல்லைதானே பயன்பெறுங்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக