ரஷியா விண்வெளியில் “மிர்” என்ற விண்வெளி நிலையம் அமைத்துள்ளது. அதுபோன்று அமெரிக்காவும் தனியாக விண்வெளி நிலையம் உருவாக்கியுள்ளது. அவை தவிர அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி மையம் ஒன்றை கட்டி வருகின்றனர்.
அதேபோன்று சீனாவும் 2020-ம் ஆண்டில் தனக்கென்று ஒரு விண்வெளி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆராய்ச்சியில் அந்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விண்வெளியில் ஆய்வகம் அமைக்க தேவையான கட்டுமான பொருட்களை அனுப்பும் பணி நடந்தது. அதற்காக தியான்காங்-1 என்ற ஆய்வக பகுதியை தயாரித்தனர். அது 8.5 டன் எடை உள்ளது. இந்த ஆய்வக பகுதி நேற்று மாலை வடசீனாவின் ஜியூகுவாங் என்ற செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
அது ஷென்ஷு என்ற விண்வெளி ஓடத்தில் வைக்கப்பட்டு மார்ச் 2 எப்.டி.ஐ. ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. ஒரு மாத பயணத்துக்கு பின் அந்த ராக்கெட் சீனாவின் விண்வெளி நிலையம் கட்டுமான இடத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சோதனை வெற்றி அடைந்தது சீனாவின் விண்வெளி ஆய்வின் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. சமீபகாலமாக விண்வெளி ஆய்வில் சீனா சாதனை படைத்துள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தானின் முதல் தகவல் தொடர்பு செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. இதுபோன்ற பல்வேறு நாடுகளின் 20 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக