AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

பாகிஸ்தானில் பட்டினி-நோயினால் வாடும் 40 லட்சம் குழந்தைகள்:

இஸ்லாமாபாத், செப். 30-
 
பாகிஸ்தானில் பட்டினி மற்றும் நோயினால் 40 லட்சம் குழந்தைகள் வாடுகின்றனர்.   பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதில் அப்பகுதியில் வாழும் சுமார் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் மற்றும் மறு சீரமைப்பு பணிகளும் நடை பெற்று வருகின்றன.
 
ஆனால் இன்னும் அங்கு நிலைமை சீரடையவில்லை. லட்சக்கணக்கான மக்கள் அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் ரோட்டோரங்களிலும், ரெயில் தண்டவாளங்களிலும் கூடாரம் அமைத்து உள்ளனர்.   பாகிஸ்தானில் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, ஐ.நா. சபையிடம் உதவி கோரப்பட்டது. அதை தொடர்ந்து இதுவரை ரூ.1800 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் அவை போதவில்லை. எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் பசி பட்டினியால் வாடுகின்றனர். அவர்கள் பலவித தொற்று நோயினால் சிக்கி தவிக்கின்றனர். குடிக்க தண்ணீர் கிடைக்காமல் வெள்ள நீரை குடித்து உயிர் வாழ்கின்றனர் 
 
 இந்த நிலை பாதின், மிர்புகாஸ், சங்கார், தாண்டோ அல்லாயார் ஆகிய 4 மாவட்டங்களில் பெருமளவில் உள்ளது. இப்பகுதியில் 40 லட்சம் குழந்தைகள் உண்ண உணவின்றி தவிக்கின்றனர். மேலும் அவர்களை நோய் கொடுமையும் வாட்டுகிறது. எனவே பசிபட்டினி மற்றும் நோயினால் பறி தவிக்கும் குழந்தைகளை காப்பாற்ற பணக்கார நாடுகள் உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக