சிதம்பரம் : சிதம்பரம் தாலுகா பகுதி விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை வழங்கும் பணி நேற்று துவங்கியது. தமிழக அரசு சார்பில் கடந்த ஆட்சியில் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது புதிய ஆட்சி பொறுப்பேற்றதை தொடர்ந்து பழைய திட்டத்தின் பெயரை உழவர் பாதுகாப்பு அட்டை என மாற்றப்பட்டது. சிதம்பரம் தாலுகா பகுதி விவசாய தொழிலாளர்களுக்கு நேற்று முதல் அட்டை வழங்கும் பணி துவங்கியது. ஆர். டி.ஓ., இந்துமதி, விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை வழங்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சமூக நல தாசில்தார் ராமச்சந்திரன், ஆர்.டி.ஓ., நேரடி உதவியாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர். சிதம்பரம் தாலுகாவில் 67 ஆயிரத்து 818 பயனாளிகளுக்கு அட்டைகள் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
புதன், 21 செப்டம்பர், 2011
சிதம்பரத்தில் உழவர் பாதுகாப்பு அட்டை வழங்கும் பணி துவங்கியது
லேபிள்கள்:
kollumedutimes
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக