அபுதாபி, மே 19-
ஷார்ஜாவில் அனுமதியின்றி தங்கியுள்ள வெளிநாட்டினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகங்கள் உத்தரவிட்டிருந்தன.
இதனையடுத்து, ஷார்ஜா நகராட்சி மற்றும் வெளியுறவு துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நடத்திய அதிரடி சோதனையில் 170 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 100 பேர் உரிய ஆவணங்களின்றி ஷார்ஜாவில் தங்கி தெரு வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.
53 பேர் வெளிநாட்டினருக்கான குடியுரிமை சட்டத்தை மீறியவர்கள். 17 பேர் சட்டபுறம்பான வகையில் கூலி தொழிலாளிகளாக வேலை செய்தவர்கள்.
மேற்கண்ட 170 பேரையும் கைது செய்த போலீசார், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
இதைப்போன்ற தேடுதல் நடவடிக்கை மேலும் தொடரும் என ஷார்ஜாவின் வெளியுறவு துறை தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
ஷார்ஜாவில் அனுமதியின்றி தங்கியுள்ள வெளிநாட்டினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகங்கள் உத்தரவிட்டிருந்தன.
இதனையடுத்து, ஷார்ஜா நகராட்சி மற்றும் வெளியுறவு துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நடத்திய அதிரடி சோதனையில் 170 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 100 பேர் உரிய ஆவணங்களின்றி ஷார்ஜாவில் தங்கி தெரு வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.
53 பேர் வெளிநாட்டினருக்கான குடியுரிமை சட்டத்தை மீறியவர்கள். 17 பேர் சட்டபுறம்பான வகையில் கூலி தொழிலாளிகளாக வேலை செய்தவர்கள்.
மேற்கண்ட 170 பேரையும் கைது செய்த போலீசார், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
இதைப்போன்ற தேடுதல் நடவடிக்கை மேலும் தொடரும் என ஷார்ஜாவின் வெளியுறவு துறை தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக