வக்ஃப் வாரிய சொத்துகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும், வாரியத்துக்கு மத்திய, மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், வாரியப் பணியாளர்களை அதிகப்படுத்தக் கோரியும், சிதம்பரம் மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எஸ்.அப்துல்லாஹ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலர் ஜே.பரகத்துல்லா பேசியது:
முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்துக்காக 6 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் முன்னோர்களால் வழங்கப்பட்டு வக்ஃப் செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு வக்ஃப் வாரிய சொத்திலிருந்து வரும் வருமானமே போதுமானது.
பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசு வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாகப் பராமரிக்கவும், ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துகளை மீட்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.பரகத்துல்லா தெரிவித்தார்.
எஸ்.டி.பி.ஐ. அமைப்பு மாவட்டச் செயலர் ஐ.சர்புதீன், நகரச் செயலர் பி.யாசீர் உள்ளிட்டோர்
பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக