AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 15 ஏப்ரல், 2013

ஜூலை 6ல் கோட்டையை நோக்கி முஸ்லிம்களின் கோரிக்கைப் பேரணி - தமுமுக அறிவிப்பு


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்களின் தலைமையில் 11.04.2013 அன்று நடைபெற்றது. அதில்,
தமிழகத்தில் முஸலிம்களுக்கு தற்போது அமலில் உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரித்து தரக் கோரியும்,
10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் வாடும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கக் கோரியும்,
திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தங்கள் கோரியும்,

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுதிரண்டு எதிர்வரும் ஜூலை 6 (சனிக்கிழமை) அன்று தலைநகர் சென்னையில் கோட்டையை நோக்கி கோரிக்கைப் பேரணி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அன்புடன்
(ப. அப்துல் சமது)
பொதுச் செயலாளர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக