AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 25 மார்ச், 2013

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பொதுத் தேர்வு எழுதலாம்

கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் போது கடலூர் மாவட்டத்தின் சில தேர்வு மையங்களில் ஹிஜாப் அணிந்த நிலையில் தேர்வு எழுத வந்த முஸ்லிம் மாணவிகள் ஹிஜாபை களைந்து விட்டு தேர்வு எழுதுமாறு கல்வி அதிகாரிகளால் நிர்பந்திக்கப் பட்டுள்ளனர்.

2005 ஆம் ஆண்டில் இதே பிரச்சனை தொடர்பாக லால்பேட்டை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை பரிசீலித்த அன்றைக்கு கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன்தீப் சிங் பேடி அவர்கள் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு வழங்கிய உத்தரவு எண் ஓ.மு (சி4) 14805/05 நாள்:12-03-2005 படி முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்த நிலையில் பொதுத் தேர்வு எழுதவும்,வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.



இந்த உத்தரவின் நகலை பெற விரும்புவோர் கடலுர் தெற்கு மாவட்ட செயலாளர் சகோதரர் என்.அமானுல்லா அவர்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் உங்கள் பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் அதிகாரிகளை சந்தித்து அவர்களிடம் இந்த உத்தரவு நகலை வழங்குமாறு அமானுல்லா தமுமுக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்பு எண்: என்.அமானுல்லா 9585363626

0 கருத்துகள்:

கருத்துரையிடுக