AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 11 பிப்ரவரி, 2013

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டுவதில் காங்கிரஸ்சும் பாஜகவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டுவதில் காங்கிரஸ்சும் பாஜகவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.இது இன்று நேற்றல்ல.. ஜவஹர்லால் நேரு காலம் முதல் சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட அப்ஸல் குரு வரை இந்த ஜனநாயக தேசத்தில்; 23 சதவீதம் இருக்கும் முஸ்லிம்களை ஒழித்தே தீர வேண்டுமென்று கங்கனம் கட்டிக் கொண்டு ஆட்சி செய்து வருகிறார்கள்.

காஷ்மீரியான குலாம் நபி ஆசாத் மற்றும் உபி யைச் சேர்ந்த சல்மான் குர்ஷித் உள்ளிட்ட சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் காங்கிரஸ்சின்; இத்தகைய துரோக செயல்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
காந்தி,மொரார்ஜி தேசாய்,வி.பி.சிங்,ஜெயப்பிரகாஷ் நாராயணன்,மது தண்டவதே போன்ற வட இந்தியாவைச் சேர்ந்த தேசிய தலைவர்கள் இந்த தேசத்தின் இஸ்லாமியர்களுக்காகவும் அவர்களது நலனுக்காகவும் ஆதரவாக இருந்துள்ளனர்.இவர்களைத் தவிர மற்ற அரசியல்வாதிகள் அணைவருமே முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராகத் தான் அரசியல் செய்து வருகின்றனர்.



பாஜகவை சமாதானம் செய்வது அல்லது அவர்களது கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்;வது போன்று காங்கிரஸ் கட்சி வெளியே காட்டிக் கொண்டாலும்,பாபர் மஸ்ஜிதை இடித்தற்கு துணை போனது,அந்த இடத்தில் பூஜைகள் நடத்த வழிகோலியது தொடங்கி அப்சல் குருவை தூக்கு மேடையில் ஏற்றியது வரையிலான முஸ்லிம் விரோத நடவடிக்கைகள்; மூலம் தாங்களும் பாஜகவும் கொள்கையில் ஒன்று தான் என்பதை நிரூபித்துள்ளது.

இந்திய நீதித்துறையின் தீர்ப்பை ஏற்றுக் கொண்ட அப்ஸல் குரு தூக்கில் கொல்லப்பட்டு விட்டார்.ஆனால் இந்திய தேசத்தை காப்போம் என்று உறுதி பூண்டிருக்கக் கூடிய இந்திய தேசிய ராணுவத்தினரின் முன்னிலையிலேயே பாபர் மஸ்ஜிதை இடித்த,இடிக்க உறுதுணையாக ஊக்கப்படுத்திய அத்வானி,முரளி மனோகர் ஜோஷி,கல்யான் சிங்,உமாபாரதி உள்ளிட்டோர் இன்னும் இந்த நாட்டிலே தான் உலாவி வருகிறார்கள்.கடந்த வாரத்தில் கூட இவர்கள் அணைவரும் இந்த வழக்கில் எந்த சாட்சியங்களும் இல்லை என்பதாக கூறி இந்த நீதித் துறையால் விடுவிக்கப் பட்டுள்ளனர்.இந்த விடுதலைக்கு சிபிஐயின் தலைவராக இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கும் காரணமாக இருக்கிறார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தென்னிந்திய நகரமான ஹைதராபாத்தில் முஸ்லிம்களின் வரலாற்று அடையாளமாகவும் இந்தியாவின் புராதன சின்னமாகவும் திகழும்; புகழ்பெற்ற சார்மினார் கோபுரத்தை ஆக்கிரமித்து அதனருகில் கோவில் கட்ட முயற்சி செய்யும் ஆர்எஸ்எஸ்ஸின் காவி பயங்கரவாதத்துக்கு ஆந்திராவின் ஆளும் காங்கிரஸ் கட்சி இன்றைக்கு துணை போய்க் கொண்டிருக்கிறது.இவர்களின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக போராடி வரும் அங்குள்ள முஸ்லிம் தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டு பழி வாங்கும் படலத்தை காங்கிரஸ் அரசு செய்து வருகிறது.

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான மிக மோசமான கலவரத்தை தவிர 1983ல் அஸ்ஸாம் மாநிலம் நெல்லியில் நடந்த கலவரம்,1989ல் பீகார் மாநிலம் பாகல்பூரில் நடந்த கலவரம்,1992-93 களில் பம்பாயில் நடைபெற்ற கலவரம் போன்ற முஸ்லிம் இன அழிப்பு நடவடிக்கைகள் அணைத்தும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற காலங்களில் நடந்தேறிய வன்செயல்களாகும்.இக் கலவரங்களில் குஜராத் கலவரத்துக்கு இணையான பாதிப்புகள் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.சுருங்க சொன்னால் 2002 குஜராத் கலவரங்களுக்கு ரோல்மாடலாக அமைந்தது இந்த கலவரங்கள் தாம்.

பாஜகவை திருப்திப் படுத்துவதற்காகவே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இவ்வாறான முஸ்லிம் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இவை போன்று இன்னும் பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவின் தலைமைப் பீடமாக இருக்கும் ஜனாதிபதி பதவி; அரசியல் கட்சிகள் வழியாக நிரப்பப்படுவதால் இத்தகைய நாசவேலைகள் ஜனாதிபதியால் கண்டுக் கொள்ளப்படாமலேயே புறந்தள்ளப் படுகிறது.ஆளுங்கட்சியாக இருந்த போதும் எதிர்கட்சியாக இருக்கும் பால்தாக்கரே போன்ற மத துவேஷிகளை வீடு தேடி சென்று ஆதரவு கேட்டு பதவிக்கு வரும் ஜனாதிபதியால் முஸ்லிம்களுக்கு ஆதரவாக எங்ஙனம் செயல்பட முடியும்..?

இனிவருங்காலங்களில் இந்தியாவின் ஜனாதிபதியாக ஓர் அரசியல் வாதி தேர்ந்தெடுக்கப்படக் கூடாது.நீதித் துறையிலிருந்து ஒய்வு பெற்ற ராஜேந்திர சச்சார் போன்ற நீதிபதிகளையோ,விஞ்ஞானிகளையோ,முன்னாள் ரானுவ அதிகாரிகளையோ,கல்வித் துறையில் சிறந்து விளங்கிய கல்விமான்களையோ அல்லது குறிப்பிட்ட ஒரு துறையின் மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கு சிறப்பான பங்களிப்பை செய்தவர்கள் போன்றோர்; தாம் நம் நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.அப்போது தான் ஆட்சியாளர்களின் துஷ்பிரயோகங்களுக்கு முடிவுரை எழுத முடியும்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன..?

இந்தியாவின்; மக்கள் தொகையில் 23 சதவீதம் இருக்கும் இருக்கும் முஸ்லிம்கள் அணைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து,நன்கு படித்த,மார்க்க-அரசியல்-பொது அறிவும் ஒருங்கே பெற்ற சுயஒழுக்கமுள்ள ஒரு நல்ல மனிதரை தலைவராக தேர்ந்தெடுத்து மாநில கட்சிகளோடு கூட்டு வைத்து நாடாளுமன்றத்தில் குறைந்தது 50 தொகுதிகளிலாவது இடம் பிடித்து மத்திய ஆட்சியில் இடம்பிடித்தால் மாத்திரமே காங்கிரஸ் பிஜேபி ஆகிய கட்சிகளின் ஏமாற்று துரோக அரசியலை முறியடிக்க முடியும் என்பது எனது அறிவிற்கு தெரிந்த நல்ல முடிவாகும்.

புறப்படு சகோதரா புறப்படு... ஒரு தலைமையை தேர்ந்தெடு..!

கொட்டிக் கிடக்கின்ற செங்கற்கள் தாம் கட்டி முடிந்தவுடன் எட்டிப் பிடிக்க முடியாத மாட மாளிகைகளாகவும் கோட
கோபுரங்களாகவும் உருமாறுகின்றன.எனவே...

எதிர்கால சந்ததிகளே..! வருங்கால தலைவர்களே..!

நம் வீட்டையும் தாய் நாட்டையும் காக்க உறுதி பூண்டு இன்றே துவங்குங்கள் உங்கள் பணிகளை...!

என்னுடைய கருத்தை இங்கே பதிந்து விட்டேன்..! இறைவனிடம் துஆ செய்து விட்டேன்...!

உங்களையும் என்னையும் இந்திய தேசத்தையும் இறைவன் காப்பாற்றுவானாக..!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக