சென்னை: இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர்அலி வெளியிட்ட அறிக்கை:ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்ல 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கின்றனர். விண்ணப்ப படிவ கட்டணம் ரூ.300 வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பித்த அனைவருக்கும் விசா கிடைப்பதில்லை. விசா கிடைக்காதவர்களுக்கு விண்ணப்ப படிவ கட்டண தொகை திரும்ப கொடுப்பதில்லை. எனவே, விண்ணப்ப படிவத்தை அரசு இலவசமாக வழங்க வேண்டும்.மேலும், ஹஜ் பயணத்துக்கு தமிழகத்தில் இருந்து 3,300 பேருக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளிக்கிறது. இந்த ஆண்டு 7,000 பேருக்கு அனுமதி தரவேண்டும். ஹஜ் பயணத்துக்கு சர்வதேச பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. இதை பெற பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ் கொடுக்க வேண்டியதுள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள வயதான முஸ்லிம்களிடம் இத்தகைய சான்றிதழ்கள் இருக்க வாய்ப்பில்லை. எனவே, அவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளித்து பாஸ்போர்ட் வழங்க வேண்டும். இவ்வாறு ஜவஹர் அலி தெரிவித்துள்ளார்.
ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக